Monday, 10 December 2018

இவ்வளவு இருந்தும் பாகிஸ்தானில் முன்னேற்றம் இல்லை.

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1839168552872196/

பாகிஸ்தானில் வளமான நமது பஞ்சாபில் இருந்து பிரிந்த மேற்கு பஞ்சாப் இருக்கிறது. இங்கு உலக தரம் வாய்ந்த பாசுமதி அரிசியை விளைவிக்க முடியும். சிந்து நதி பாயும் சிந்து மாகாணம் இருக்கிறது. இயற்கை துறைமுகம் கராச்சி இருக்கிறது. கனிம வளம் மிகுந்த பலுசிஸ்தான் இருக்கிறது.

இவ்வளவு இருந்தும் பாகிஸ்தானில் முன்னேற்றம் இல்லை.

இன்று பாகிஸ்தான் ரூபாய் 140 கொடுத்தால்தான் அமெரிக்கா டாலர் ஒன்றை வாங்க முடியும். அயல்நாட்டு உதவி இல்லாமல் அங்கு அரசாங்கம் நடத்த முடியாது.

ஆனால் இந்தியாவுக்கு தொல்லை கொடுப்பதே தொழில். எப்படியாவது இந்திய வளர்ச்சியை தடுக்க வேண்டும். இதே குறிக்கோள். இவற்றை இந்த உலக நாடுகள் கடந்த 70 ஆண்டுகளாக பார்த்து விட்டது. இதனால் அந்த நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவியை நிறுத்த தயாராகி விட்டன. அதன் நட்பு நாடான சீனா மொத்த காஷ்மீரின் பகுதிகள் இந்தியாவுக்கு சொந்தம் என்று சொல்கிறது. இந்த வழியாகத்தான் சீன பாகிஸ்தான் எக்ணாமிக் காறிடர் செல்கிறது.

உலக அரங்கில் இந்தியாவின் மரியாதை உயர்ந்திற்கு காரணம் மோடியின் உலக சுற்றுப்பயணம். இதை நான் சொல்லவில்லை. பாகிஸ்தானின் ரிசர்வ் வங்கியின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர் சொல்கிறார்.

No comments:

Post a Comment