Thursday 17 January 2019

மதவாத பாஜக கட்சியோடு எந்நாளும் கூட்டணி கிடையாது . திமுக .

மதவாத
பாஜக கட்சியோடு
எந்நாளும் கூட்டணி கிடையாது .
திமுக .

மதவாத
பாஜக கூட்டணியில் மதிமுக சேர வாய்ப்பில்லை.

மதவாத பாஜக கட்சியோடு
கூட்டணி  கிடையாது
திருமாவளவன்
வேல்முருகன்
வீரமணி
சீமான் .

இந்தியாவில் மட்டுமல்ல
கடல் கடந்து துபாய்க்கு சென்ற
பப்பு ராகுல்
இந்தியாவில் மதவாதம் அதிகரித்துள்ளது என்று
பச்சை புளுகு .

இப்படி  இவர்கள் அனைவரும்
அலறியடித்து  ஆள் ஆளுக்கு அறிக்கைகள் .

இந்தியாவில்
தமிழகத்தில்  இருக்கும்
அத்தனை வாக்காளர்களும்
யோசியுங்கள்....
கவனியுங்கள் ......

மேலே குறிப்பிட்ட  அத்தனை கட்சிகளும்
அதன் தலைவர்களும்
ஊழல்  பாஜகவோடு கூட்டணி
இல்லை என்று  எங்கேயும்
சொல்லவில்லை.

நிர்வாக சீர்கேடு
என்று எங்கேயும் கை நீட்டி
பாஜக மோடி அரசை குற்றம்
சொல்லவில்லை .

மாண்புமிகு மோடி அரசின்
அமைச்சரவை மீது எந்தவிதமான குற்றங்களையும்
சுமத்த முடியவில்லை .

நாட்டின் பாதுகாப்பு சீர்குலைந்து விட்டதென்றும்
தீவிரவாதம் பெருகி விட்டதென்றும் பாஜக மீது
குற்றச்சாட்டுகளை சுமத்த முடியவில்லை .

காரணம்  வெளிநாட்டுத் தீவிரவாதிகளை
இரும்புக் கரம் கொண்டும்
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியும் அடக்கி விட்டது
பாஜக மோடி அரசு .
உள்நாட்டு
கள்ளப்பண கறுப்பு முதலைகளையும்
ஊழல் அரசியல் தலைகளின்
திருட்டுப் பணத்தையும்
பணமதிப்பிழப்பு 
நடவடிக்கை  மூலம்
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்
நடத்தி செல்லாக்காசாக்கி
நடுத்தெருவில் கதறவைத்தது
பாஜக மோடி அரசு

காரணம்
பாஜக மோடி அரசு நேர்மையான அரசு.
தேசத்துரோகிகளுக்கும்
பிரிவினைவாதிகளுக்கும்
கறுப்புப்பணப் பதுக்கலுக்கும்
ஆப்பு வைத்த
சிம்ம சொப்பன அரசு.

திருடவும்  வழியில்லை .
கொள்ளையடிக்கவும்  முடியவில்லை.
ஜி எஸ் டியால்
வரி ஏய்ப்பும் செய்ய முடியவில்லை .
நீட்டால்  மருத்துவ சீட்டிற்கு
ஆள் ஆளாளுக்கு கொள்ளை அடிக்கவும்  முடியவில்லை .

திருடர்களும், நாட்டை நாசமாக்கிய ஊழல் அரசியல்வாதிகளும்
பாஜக அரசு என்றாலே
கதறுகிறார்கள்.

இதில் தமிழ் தமிழன் என்று
களமிறங்கி இருக்கிறார்கள்
சில பிரிவினை தேசத்துரோகிகள் .

பாஜக மதவாத அரசு என்றால்
மோடி மதவாதி என்றால்
கடந்த 2014 முதல் இன்று வரை
எங்கெல்லாம் மதக்கலவரம்
நடந்தது என்று
பிரதமர் மோடியை மதவாதி என்று சொன்ன
மதவெறி மிஷனரிக்கு துணைபோன
மதமாற்றம் செய்யும் மிஷனரி அமைப்புகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற
காங்கிரஸ் சோனியா அரசிற்கு
கைகொடுத்த அயோக்ய அரசியல் எட்டப்பர்கள் பதில் சொல்வார்களா????

நாட்டை ஊழல்களால்  அழித்து
வீட்டை  சாராயக் கடைகள் மூலம் கெடுத்த
ஊழல் பெருச்சாளிகள்
மதசார்பற்ற கொள்கை கொண்ட தலைவர்களாம்.
ஆனால் இந்துமதத்தை மட்டுமே ஏசித் திரிந்து
மதமாற்ற   புரோக்கர் அரசியல்வாதிகளாய்
யேசப்பர் மதத்தை பரப்புவார்களாம் .
அல்லா பேரை சொல்லி
கூட்டணிகளுக்கு அலைவார்களாம் .
கேட்டால் சிறுபான்மை ரட்சகர்
என்று  கதை அளப்பார்களாம் .
இந்த ஓட்டு நக்கிகள்.

சிறுபான்மை பண்டிகைகளுக்கு
முதல் ஆளாய் ஆளுக்கு ஆள்
வாழ்த்து சொல்வார்களாம் .
ஆனால் இந்துமதப் பண்டிகைகளுக்கு
காற்று மாசுபடுகிறதென்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டு
எள்ளி நகைப்பார்களாம்.
மதங்களின்  பண்டிகைகளுக்கு கூட மதம் பார்த்து
ஓரவஞ்சனையோடு  வாழ்த்தும்
இவர்களெல்லாம் மதசார்பற்ற தலைவர்களாம்.
சமூக நீதியை காப்பவர்களாம் .

இப்போது சொல்லுங்கள் மனசாட்சி உள்ள மக்களே
யார் மதவாதி என்று ?????
எது மதவாதம் என்று ????

சாதிகளை ஒழிக்க
பெரியார் தடியை எடுப்பார்களாம் .
ஆனால் சாதியத் தலைவர்களுக்கு கூட்டணி வலை விரிப்பார்களாம்.
தமிழினம் எங்கள் உயிர்
என்று முழங்கி
கொத்துகொத்தாய் தமிழர்களை கொன்ற காங்கிரஸ் கட்சியோடு கூட்டணிக்கு அலைவார்களாம்.

இவர்களா இனவாதத்தை ஒழிப்பவர்கள் ?????
இவர்களா மதசார்பற்றவர்கள் ????

காங்கிரஸ் ஆண்ட போது
ஸ்டெர்லைட் , ஹைட்ரோ கார்பன் போன்ற கம்பனிகளுக்கு அனுமதி தந்து
அந்த  ஆலைகளுக்கு இடங்களையும், மின்வசதிகளையும்  வழங்கிய திராவிட அரசுகள்
இன்று மோடி  மத்திய  அரசை
குற்றவாளி என்று
குறை சொல்வது
மல்லாக்கப் படுத்து
அவரவர் முகத்தில் அவரவர்களே காறிக்காறி துப்பிக் கொள்வதை அறிவார்ந்த மக்கள் நன்கு உணர்ந்து பகுத்து ஆராய வேண்டும் .

விவசாயிகளுக்கு
பயிர்  காப்பீடு ஏற்படுத்தி தந்த மோடியா விவசாயிகளின் எதிரி ???
விவசாய உரங்களுக்கு மானியம் தந்து இடைத் தரகர்களை ஒழித்து
விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே பணத்தை செலுத்திய  மோடியா
விவசாயிகளின் துரோகி ???

விவசாய நில கடன் தள்ளுபடிகள்
பெருமுதலைகளுக்கே ஆதாயமாக இருக்கிறது .
அந்த பெருமுதலைகளின்
நிலத்தை குத்தகைக்கு
எடுத்த  சிறு விவசாயிக்கோ
இதன் பலன் சிறிதுமில்லை .
அதை ஒழிக்கவே பயிர்க் காப்பீடு திட்டம் .

கடந்த ஐம்பது ஆண்டுகளாக
காவிரியை வைத்தே அரசியல்
செய்த தமிழக கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு
காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த மோடி
நதிகளை இணைக்கும் முயற்சிகளை எடுத்து வரும்
மோடி
விவசாயிகளின் எதிரியா ???

இந்தியாவின் பாதுகாப்பிற்காக
ராணுவத்தை பலப்படுத்த
ரஃபேல் விமானங்களை
வாங்க இந்திய தொழிலதிபர்களான அதானி அம்பானிக்கு தானே
மோடி தொழில் வாய்ப்புகளை
தந்தார் .

போபர்ஸ் பீரங்கிகளை
இத்தாலி குவாத்ரேச்சி மூலம் பேரங்களை பேசி
இத்தாலிக்கு வருமானத்தை பெருக்கித் தருவதற்கு
லஞ்சத்தை லட்சம் லட்சமாக
கோடிகளில் வாங்கி பதுக்கிய
காங்கிரசின் இப்போதைய  வாரிசு
மோடியை கார்ப்பரேட் கைக்கூலி என்று எள்ளி நகையாடுகிறது .
நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில்  அந்நிய நாட்டு
கைக்கூலியை வைத்து பேசி லஞ்சம் கொடுத்து
ஓட்டை பீரங்கிகளை வாங்கிய
காங்கிரசிற்கே இத்தனை திமிரிருந்தால்
நாட்டையே உயிர் மூச்சென
சுகதுக்கங்களை துறந்து
நாடு நாடாக பறந்து
விமானத்திலேயே தூங்கி
எழுந்து ஓடி ஓடி உழைத்து
அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரித்து
சீனா பாக்கிஸ்தான் விஷப்பற்களை பிடுங்கி
தீவிரவாதிகளை
அடக்கி வைத்த மோடிக்கு
எத்தனை கெத்திருக்கும் ???

ரஃபேல் விஷயத்தில்
நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்ய வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கொடுத்த செருப்படி  போதவில்லை
ஊழல் காங்கிரஸ் இளவரசனுக்கு .

அன்பார்ந்த அறிவார்ந்த
மனசாட்சி உள்ள மக்களே !
நீதிக்கு தலைவணங்கி
மோடியின் நேர்மைக்கு
வாக்களியுங்கள் .
இந்தியா வல்லரசாக
மோடி என்னும் மாமனிதருக்கு
துணை நில்லுங்கள்.

ஜெய்ஹிந்த் .

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...