Tuesday 6 November 2018

தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் இல்லாமல் நமது குழந்தைகளை இலவசமாக படிக்க வைக்க முடியுமா*?

📢 *முக்கிய செய்தி*!

#தனியார்பள்ளிகளில் #கல்விக்கட்டணம் #செலுத்தாமல் #இலவசமாக
#கல்வி #பயில்வதுஎப்படி*?
👍👍👍👍👍👍👍👍👍👍👍

*இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்றால் என்ன*?

*RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION. ACT -2009*

*தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம்  இல்லாமல் நமது குழந்தைகளை  இலவசமாக படிக்க வைக்க முடியுமா*?

முடியும்!

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம்.

*பள்ளிக்கல்வி -குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 -ன் கீழ் பிரிவு 12 (1)  (C)  மற்றும் பிரிவு  13.(1) ஐ மத்திய அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் படியும் பள்ளிக்கல்வித் (சி2) துறை 18.012011 நாளிட்ட அரசாணை (நிலை) எண் :9 ன் படியும்  இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம்  அதற்கு வழி வகை செய்கிறது* LAACO /2018

*இந்த சட்டம்  ஆறு வயது முதல்  பதினான்கு  வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம்* (சர்வ சிக்ஷா அபியான் SSA )
*கொண்டு வரப்பட்டது*

*இந்த சட்டத்தின் கீழ் யார் யார் குழந்தைகள் பயன் பெறலாம்*?

★ வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்,

★ தாழ்த்தப்பட்டவர்கள்,

★ மலை ஜாதியினர், 

★ பிற்படுத்தப் பட்டவர்கள்,

★ மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்,

★ கல்வி உரிமை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள்.

★ எய்ட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள்,

★மாற்றுத்திறனாளிகள்

★துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள்

★ மூன்றாம் பாலினத்தவர்  (திருநங்கைகள்)

★ ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்துக்கு  கீழ் உள்ள முற்பட்ட வகுப்பினர்கள்.

நீங்கள் வசிக்கும் பகுதியில்  இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில்
இருக்கும் தனியார் பள்ளிகளில்  உங்களது  குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RIGHT TO EDUCATION ACT -2009)  R T E. ன்  கீழ் கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக சேர்க்கலாம்

குழந்தைகளுக்கு தேர்வுகள் (Test) அல்லது வாய்மொழி வினாக்கள் (Interview) கேட்க கூடாது.

குழந்தைகளின் இதர தகுதியினையோ, பெற்றோருடைய கல்வித்தகுதியினையோ கருத்தில் கொள்ளக் கூடாது.

அந்தந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை மத்திய அரசு செலுத்தும்.

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

*ஆரம்ப நிலை வகுப்பான L K G வகுப்பில் மட்டுமே சேர்ந்து கல்வி பயில முடியும்*

*மற்றும் முதல்  வகுப்பில் இருந்து செயல் படும் பள்ளிகளில் மட்டும் முதல் வகுப்பில்  சேர்ந்து கல்வி பயில அனுமதி உண்டு*

*L.K.G வகுப்பில் சேரும் குழந்தைகள்  8 -ஆவது வகுப்பு வரையிலும் இலவச கல்வி பயிலலாம்*

இந்த திட்டத்தின் கீழ் ஐந்தாம் வகுப்பு வரையிலும் உள்ள  தொடக்கப்பள்ளிகளில் சேரும் குழந்தைதள் ஆறாம் வகுப்பிற்கு எந்த பள்ளிகளில் வேண்டுமானாலும் சேர்ந்து  கல்வி பயிலலாம்.

*இடையில் எந்த ஒரு வகுப்புகளிலும் சேர்ந்து இலவச கல்வி பயில முடியாது*
*இதனை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்*

பெற்றோர்கள் ஊர் விட்டு ஊர் சென்றாலும் அந்த பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வியை தொடரலாம்.

*அனைத்து தனியார் பள்ளிகளும்  25 சதவீதம்  இடங்களை  கட்டாய கல்வி  உரிமைச் சட்டத்தின் கீழ்  சேரும்* *குழந்தைகளுக்கு*
*கண்டிப்பாக  ஒதுக்கீடு செய்ய  வேண்டும்*

அதாவது ஒரு பள்ளியில் மொத்தம் 150 குழந்தைகள் சேர்ந்து கல்வி பயில அனுமதி இருக்கும் பட்சத்தில் அந்த 150 மாணவர்களின் எண்ணிக்கையில் இருந்து 25 சதவீதம்  அதாவது 37 குழந்தைகளுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும்.

*ஆனால் சிறுபான்மை பிரிவினை சேர்ந்த முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நடத்தும் தனியார்  பள்ளிகள் சிறுபான்மையினர்  பள்ளிகளாக வகைப்படுத்தப்பட்டு அந்த பள்ளிகளில் இலவச கல்வி பயில அனுமதி இல்லை*

எனவே இந்த பள்ளிகளை நாடி செல்லாதீர்கள்.

*இலவசக்கல்வி பயிலும் மாணவர்களிடம் இருந்து எந்தவிதமான கல்வி கட்டணங்களையும் பள்ளி நிர்வாகம் வசூலிக்க கூடாது*

*ஒரு சில பள்ளிகள் அரசிடம் இருந்து பணம் வரவில்லை.  கட்டணம் செலுத்துங்கள்  பணம் வந்ததும் திருப்பி வழங்குவதாக கூறுவார்கள்*

*அவ்வாறு நீங்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை*

ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

உங்கள்  குழந்தைகளை தனியார் பள்ளிகள் சேர்க்க மறுத்தால்  உங்கள் மாவட்டத்தில் இருக்கும்  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்,  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மெட்ரிக்பள்ளி ஆய்வாளர்,  மெட்ரிக்பள்ளி இயக்குநர்,  இவர்களுக்கு புகார் செய்யுங்கள்.

சில பள்ளிகள் அனுமதி முடிந்து விட்டது என பொய்யான தகவல் வழங்குவார்கள்!

*கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் பற்றிய விபரங்களை அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கு தெரியும் வகையில்  தகவல் பலகை வைக்க வேண்டும்*

★எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின் கல்வி  கனவினையும் நிறைவேற்றுங்கள்.

★கல்வி உங்கள் மிக அருகாமையில்!

★பெயர் தான் இலவசக்கல்வி !

★இது கேவலம் அல்ல!

★மத்திய அரசு கட்டணம் செலுத்துகிறது!

★கவலை வேண்டாம்!

★இது கனவல்ல!  நிஜம் !

★ *எப்படி எங்கு விண்ணப்பிக்க வேண்டும்*

*2018-2019 ஆண்டுக்கான இலவச கட்டாயக்கல்வி சேர்க்கை ஏப்ரல் மாதம் 20 ம் தேதி முதல் மே மாதம் 18 ந் தேதி வரையிலும் நடை பெற இருக்கிறது*

தமிழகம் முழுவதும் சிறுபான்மை பள்ளிகளை தவிர்த்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் L.K.G வகுப்பில் உங்கள் குழந்தைகளை சேர்க்கலாம்.

★ *விண்ணப்பம் செய்வது எப்படி*?

★சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தினை www.dge.tn.gov.in. என்ற இணைய தளத்தின் மூலமாக நீங்களே  விண்ணப்பிக்கலாம் .

1.மாவட்ட கல்வி அலுவலகம்

2.மாவட்ட உதவி தொடக்கக்கல்வி அலுவலகம்

3.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்

4.அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டார வள மையம்

5.மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம்

6.மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்.

7.அனைத்து தனியார் பள்ளிகள்

*ஒவ்வொரு பள்ளிகளிலும் 25 சதவீதத்திற்கு  மேல் விண்ணப்பம் பெறபட்டால்* (Randam Selection) குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்

★ *விண்ணப்பத்தின் போது வழங்க வேண்டிய ஆவணங்கள்*

1. பிறப்பு சான்று
2..குழந்தையின் புகைப்படம்
3.ஜாதி சான்று
4. வருமான சான்று
5.இருப்பிட சான்று
6.முகவரி ஆதாரம்

*இந்த ஆவணங்களை பெறுவது எப்படி*?

★ஜாதி சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று  இந்த மூன்று சான்றுகளையும் உங்கள் பகுதிகளில் செயல் படும் அரசு இ- சேவை மையம், மாநகராட்சி இ-சேவை மையங்களில்  ஒவ்வொரு சான்றுக்கும் ₹50 ரூபாய் கட்டணம் செலுத்தி  வாங்கி தயாராக வைத்து கொள்ளுங்கள்.

★இடை தரகர்களிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.

★தனியார்  பள்ளிகளில்  L.K.G வகுப்பிற்கான  சேர்க்கை 02.04.2018 முதல் தான் விண்ணப்பம் பெறப்பட வேண்டும். அன்றைய தினம் மொத்த இடங்கள் எவ்வளவு என்பதினை பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.

★ஆனால் பல பள்ளிகளில் அரசு உத்தரவு நாட்களுக்கு முன்பாகவே LKG வகுப்பிற்கான. அட்மிஷன் வழங்கி விடுகிறார்கள்.
இது சட்ட விரோதமான செயலாகும்.

★இலவச அனுமதிக்கான மொத்த இடங்களின் விபரங்களை 10.04.2018 அன்று பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.

*இலவசக்கல்விக்கான விண்ணப்பங்கள் மற்றும் மொத்த இடங்கள்  குறிப்பிட்டு 16.04.2018 அன்று*
*பள்ளியின் பிரதான வாயில் அருகில் அனைத்து பெற்றோர்களுக்கும் தெரியும் வண்ணம் 10×8 அளவுள்ள பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டும்*

★ *20.04.2018 முதல் 18.05.2018 வரை இணைய தளம் வாயிலாகவும் மேற் குறிப்பிட்டுள்ள கல்வி அலுவலகங்கள் வாயிலாகவும் தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலமாகவும் எந்த பகுதியில் இருந்தும் நீங்கள் விண்ணப்பம் செய்யலாம்*

*தேர்வு செய்த குழந்தைகளின் விபரங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட குழந்தைகளின் விபரங்கள் 21.05.2018 அன்று மாலை 5.00 மணிக்கு பள்ளிகள் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்*

*கூடுதலாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் 23.05.2018 அன்று கல்வி அலுவலர் மற்றும் இரண்டு பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும்*

★ *இலவசக்கல்வி என்பதினை பல பெற்றோர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்*.

★இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இன்மையே!

★இது தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் தான் முழுமையாக செயல் படுத்தப்பட்டது.

★ஆனால் பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் இப்படி ஒரு சட்டம் இருப்பதினை வெளி காட்டி கொள்ளவில்லை.

*இவர்கள் பள்ளிகளில் கட்டணம் கட்டி சேர்ந்த ஒரு சில குழந்தைகளை மட்டும் தேர்வு செய்து உங்கள் குழந்தைக்கு அரசிடம் இருந்து ₹5000 ரூபாய் உதவி தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் ஆவணங்களை கொடுங்கள் என கேட்டு வாங்கி கொண்டு  அதனை பெற்றோர்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வந்தனர்*

★ஏதோ இலவசக்கல்வி குறித்து அறிந்த ஒரு சில பெற்றோர்கள் கேட்டால் அனுமதி முடிந்து விட்டது என பொய் சொல்லி வந்தனர்.

★இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்தினால் அரசு 2017-2018 கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் விண்ணப்பம் செய்யும் முறையினை கொண்டு வந்தனர்.

★2016-2017 கல்வி ஆண்டில் ஒரு லட்சம் இலவச இடங்கள் நிரம்பி உள்ளது.

★2017-2018 ஆம் கல்விஆண்டில்
2,36000.இரண்டு இலட்சத்து முப்பத்தாராயிரம்  காலி இடங்கள் உள்ள நிலையில் வெறும் 40 000 நாற்பதாயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியது.

★எனவே அரசு இலவச சேர்க்கைக்காக கால நீட்டிட்பு செய்தனர்.

*2018 -2019 ஆம் கல்வி ஆண்டில்  100 சதவீதம் இலவச சேரக்கை  நடை பெற வேண்டும் என அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது*

*ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கல்வி ஆய்வு குழுவினர் இலவச கல்வி பயிலும் பெற்றோர்களை சந்தித்து ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்*

★ஆனால் இந்த ஆய்வு கூட்டங்கள் வெறும் கண்துடைப்புக்காக மட்டும் நடத்துகிறார்கள் . 

★இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசு பல உத்தரவுகளையும் அரசாணைகளையும் அறிவித்துள்ளது.

★ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளில் இந்த உத்தரவுகள் முழுமையாக கடை பிடிக்க படுவதில்லை.

★ *தனியார் பள்ளி நிர்வாகிகளான கல்வி கொள்ளையர்கள் கொடுக்கும் லஞ்சத்தினை பெற்றுக்கொண்டு கடமை தவறிய கல்வி அலுவலர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை*

*மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள் தான் இந்த கல்வி கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனம்*

*இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் உள்ள  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண் இருந்தும் குருடர்களாய் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றனர்*!

பெற்றோர்களே!
நண்பர்களே !
சமூக ஆர்வலர்களே!
சமூக அமைப்பினை சார்ந்தவர்களே !

*தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பயில்வது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்*

*உங்கள் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டாலோ*
*கல்விக் கட்டணம் ஏதேனும் வசூலிக்கப்பட்டாலோ அல்லது பள்ளி நிர்வாகிகளினாலோ* *கல்வி அதிகாரிகளினாலோ  நீங்கள் மிரட்டப்பட்டாலோ மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவல் தேவை பட்டாலோ உங்களுக்கு வழி காட்ட. எங்களை தொடர்பு கொள்ளுங்கள்*

*மேலும்  இலவச கல்விக்கு நீங்கள் கட்டணம் செலுத்தி இருந்தால் அதனை திரும்ப. பெற்று தருவதற்கும்*  *தனியார்  பள்ளிகளுக்கு .கல்விக்கட்டண நிர்ணய குழுவினரால் நிர்ணயிக்கப்பட்ட அரசு கல்விக்கட்டணங்களை செலுத்திடவும்  .ரசீது இல்லாமல் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்*  *குறித்து புகார் அளிக்க வேண்டுமானால்*
எங்களது
" *தனியார் பள்ளி புகார்* *98655 90723* *என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு*
*உங்களது பெயர் ஊர் குறிப்பிட்டு அனுப்புங்கள்*

மாறுங்கள்! மாற்றுங்கள்!!

கொடுக்க வேண்டாம் லஞ்சம்!!

எல்லோரும் லஞ்சம் கொடுக்கிறார்கள்! அய்யய்யோ நமக்கு எதுக்கு வம்பு! 
நமது குழந்தைக்கு பாதுகாப்பு யார்?
அவர்கள் கேட்கும் கட்டணத்தினை எப்படியாவது கடன் வாங்கியாவது கட்டி விட வேண்டும் என்று நீங்கள்  நினைக்கும் காரணத்தினால் தான் இந்த கொள்ளையர்கள் சுக போகமாக வாழ்கிறார்கள்.

*கவலை வேண்டாம்*!!
*உங்கள் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு பள்ளி நிர்வாகம் வழங்கும் என உறுதி மொழி கொடுத்து தான் பள்ளிக்கு உரிமம் பெறுகின்றனர்*

*அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை உண்டு*

*கல்வி கொள்ளையர்களை சிறைக்கு அனுப்புவோம்*🤝
💥💥💥💥💥💥💥💥💥💥💥
✍ *இலவசக்கல்வி விழிப்புணர்வு பணியில்*
வாழ்த்துக்களுடன்............
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்

" *சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு* "
*LEGAL AWARENESS AND ANTI -CORRUPTION ORGANIZATION*
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி,
திருப்பூர் -641 652
மின்னஞ்சல் :nanjillaacot@gmail.com

# *முக்கிய அறிவிப்பு*
*நிர்வாகிகளின் தொடர்பு எண்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் நேரம் அறிவித்துள்ளோம்*
*இந்த நேரங்களில் மட்டும் தொடர்பு கொண்டு பயனடையுமாறு வேண்டுகிறோம்*

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்,
உலாபேசி :98655 90723
தொடர்பு நேரம் : *தினமும்  இரவு 9.30 முதல் 10.30 வரையிலும்*

அரியலூர் ரா. சங்கர்
மாநில தலைவர்
உலாபேசி :98655 43303
தொடர்பு நேரம் : *தினமும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மற்றும்  மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையிலும்*

ரா.கோபால்சாமி
மாநில துணை தலைவர்
உலாபேசி :98422 98761
தொடர்பு நேரம் :
*தினமும் இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை*

ஆ.பழனிக்குமார்
மாநில அமைப்பு செயலாளர்
உலாபேசி :97910 50513
*தொடர்பு நேரம் : நாள் முழுவதும்*

கோ.தாணு மூர்த்தி
மாநில பொருளாளர்
உலாபேசி :99438 14132
*தொடர்பு நேரம் : மாலை :5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை*

*தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு அறிவித்துள்ள படி 100 சதவீதம் இந்த கல்வி ஆண்டில் ஏழை எளியவர்களின் குழந்தைகள் இலவச கல்வி பெற்று பயனடைய வேண்டும் என்பதே எங்களின் இலட்சியம்*

எங்களின் இலட்சியம் நிறைவேறிட
நண்பர்களே  படித்து விட்டு உடனடியாக மற்றவர்களுக்கு பகிருங்கள் உங்களால் ஒரு ஏழை குழந்தையாவது பயனுள்ள

சிவாய நம 🕉 மந்திர ஜெபம் செய்யும் முறை*

🕉 சிவாய நம 🕉
மந்திர ஜெபம் செய்யும் முறை*

♦1. ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்தி ஜெபம் செய்ய வேண்டும்.
♦2. வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரலில் ஜபம் செய்தால் பலன் இல்லை.
♦3. 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும். மேலும் ராசி மண்டலத்தில் நட்சத்திரங்கள் அனைத்தையும் பிரிக்கும் பொழுது 108 பாகங்கள் உண்டாகிறது. ஜெப மாலையின் எண்ணிக்கை அதன் அடிப்படையில் அமையும். எண்ணிக்கை பெற்ற ஜெபம் பயனற்ற செயலாகும்.
♦4. க்ருஷ்ண மணி என அழைக்கப்படும் 109 வது மணியை தாண்டக்கூடாது. மீண்டும் ஜெபித்த வழியே மாலையை திருப்பி ஜெபிக்க வேண்டும்.
♦5. தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித்துணியில் அமர்ந்து ஜெபம் செய்யவேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். பூமியில் உடல் தொடாமல் இருக்க மின்கடத்தாப் பொருட்களான தர்ப்பை, கம்பளி துணியும் பயன்படும்.
வெறும் தரையில் அமர்ந்து ஜெபம் செய்யக்கூடாது. மேலும் தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளி துண்டின் மேல் ஓர் மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து அதன் மீது அமர்ந்து ஜெபம் செய்யவும்.
♦6. ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாத படி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.
♦7. பத்மாசனம், சுகாசனம் மற்றும் சித்தாசனத்தில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும்.
♦8. தீட்சை பெற்ற மந்திரத்தை சத்தமாக சொல்லக்கூடாது. உதடுகள் அசையக் கூடாது. மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். மானஸ ஜெபம் என்பார்கள். நாமாவளி மந்திரங்கள் பாராயணம் செய்யும் பொழுது உரக்க சொல்லலாம். குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தை சப்தமாக ஜெபிப்பது, வெளி நபர்களுக்கு கூறுவது, எழுதிவைப்பது அனைத்தும் மந்திர யோகத்திற்கு எதிரான செயல்கள். இது போன்று செயல்பட்டால் மந்திரம் சித்தி ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும்.
♦9. எந்த ஒரு செயலும் அதற்குறிய இடத்தில் செய்தால் சிறப்பாக நடைபெறும். உதாரணமாக சமையலறையில் உணவு தயாரிக்காமல் வேறு அறைகளில் சமைத்தால் பல அசௌகரியம் ஏற்படுவது இயல்பு. இது போல மந்திரஜெபம் செய்ய ஏற்ற இடம் என சில இடங்கள் உண்டு. இடத்திற்கு ஏற்றவாறு மந்திரத்தின் பலமும் , பலனும் வேறுபடும்.
வீட்டில் அமர்ந்து ஜெபம் செய்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். பசுவின் அருகில் அமர்ந்து ஜெபம்செய்தால் 100 மடங்கு பலன்கிடைக்கும். ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜெபித்தால் 1000 மடங்கு பலன். மலை மீது அமர்ந்து ஜெபித்தால் 10,000 மடங்கு பலன். கோவிலில் அமர்ந்து ஜெபித்தால் லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். குருவின் பாத கமலங்களுக்கு அருகில் அமர்ந்து ஜெபித்தால் கோடானகோடி பலன் ஏற்படும் என மந்திர சாஸ்திரம் கூறுகிறது.
♦10. சந்தியாகாலவேளை எனும் சூரிய உதய மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு. இந்த காலகட்டத்தில் ஜெபம் செய்யாமல் மற்ற நேரங்களில் மந்திரம் அஜபமாக உருவாகும். கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்ய பன்மடங்கு பலன் ஏற்படும். மந்திர ஜெபம் செய்து வரும் பொழுது எளிமையாக ஜீரணமாகும் உணவு, மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ஜெபத்தால் ஞாபக சக்தி, கூர்மையாக சிந்தித்தல், வேகமான செயல் போன்றவை ஏற்படும். நோய் உள்ளவர்களுக்கு அருகில் இருந்து ஜெபம் செய்தால் அவர்களுக்கு உடலில் முன்னேற்றம் ஏற்படுவதை காணலாம். மேலும் மந்திர ஜெபத்தை பிறர் நலனுக்கு பயன்படுத்தினால் மிக வேகமாக செயல்படும்.
மந்திர சாஸ்திரத்தை பற்றி விவரித்து சொன்னால் பல விஷயங்களை கூறலாம். மதங்கள் சடங்குகளை கடந்த மெய் ஞானத்தின் திறவுகோலான மந்திர யோகத்தை குருவின் மூலம் பெற்று உள் நிலையில் பூரணத்துவம் பெறுவோம்.
🕉 நமசிவாய வாழ்க 🕉

பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்

தமிழ்நாடில் உள்ள முக்கியமான மையங்களின் முகவரி இங்கு தரப்பட்டு உள்ளது.உங்கள் மாவட்டத்தின் முக்கியமான மையங்களின் முகவரியை பார்க்க கீழ் உள்ள pdf file ல திறந்து பார்க்க. இந்த ராஜயோகம் உலகம் முழுவதும் 10000 மேற்பட்ட கிளைகள் மூலம் கற்பிக்கபடுகிறது.இதன் கிளைகள் உலகம் முழுவது150 க்கும் மேற்பட்ட நாடுகளில் இதன் கிளைகள் உள்ளது. வெளிமாநிலம்,வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் அருகில் உள்ள மையங்களில் கற்றுக்கொள்ளாம்.
இந்த ஆன்மீக பல்கலைகழகத்தின் பெயர் *பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்  *Brahma Kumaris World Spiritual University Prajapita Brahma Kumaris** *Ishwariya Vishwa* *Vidyalaya* இதை     வலைதளம் என்று அழைக்கபடும் internet ல் உங்கள் வீட்டின் அருகில் அல்லது உங்கள் மாவட்டத்தின் ராஜயோகம்  மையத்தின் முகவரி கிடைக்கும் . இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டும்தான் ஒரு நாளைக்கு 30 நிமிடம் ஒதுக்க வேண்டும் இந்த ராஜயோகம் பயில வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்

https://youtu.be/Yetbqp1v67s

கோவிலைஇடிக்கசொல்பவா்களுக்கு சமா்ப்பணம் *

உண்மை இதுதான்

#கோவிலைஇடிக்கசொல்பவா்களுக்கு
சமா்ப்பணம்

*ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்ப்பிக்கப்பட்டது
என்பது மடத்தனம் ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்*

ஹாஹாஹா.......
நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் கபாலம் ஒ காலியானவர்களே..!

#Civil_Engineering தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,
காிகாலனின் கல்லணை.  #எம்சிதம்பரம்  நடராஜா் கோவில் .ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்
பாா்க்குபடி வைத்து
மனிதனின் நாடி நரம்புகள் மூச்சுக்காற்று உள்ளடக்கி
தங்க ஒடுகள் ஊசிகள் பதித்தான்  இன்னும் இது
போன்ற எத்தனையே  கட்டடகலை தொியாமல் கோவிலும் கட்ட முடியாது.=!

#Marine_Engineering தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திட முடியாது.

#Chemical_Engineering தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வண்ணம் கண்டறிந்திட முடியாது.

#Aero_Technology தெரியாமல் கோல்களை ஆராய்ந்திட முடியாது.

#Mathematical தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திடல் முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திட முடியாது.

#Explosive_Engineering தெரியாமல் குடவறைகளை படைக்க முடியாது.

#Metal_Engineering தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.=!

#Anatomy தெரியாமல் சித்த மருத்துவம் செழித்திருக்க முடியாது=!

#Neurology தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது=!

#Psychology தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது=!

#Bachelor/#Master_of_Arts தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது=!

#Business Administration தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது=!  

#Chartered_Accounts தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது=!

Anomaly Scan/ Target Scan இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை, பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.

என்ன கண்ணு வேர்க்குதா...?

இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் எம் தமிழர்கள். நம் தமிழ்நாட்டின் பெருமையை அடுத்தவர் அறிய பகிருங்கள்=!

ஒட்டு மொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் வாசகம்   மந்திரம்   போதும்=!

இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன் #பிளட்டெஸ்ட்கிங் கிடையாது
லேப்டெக்னிஸ்யன் (#LABtechnicient )படிப்பு
கிடையாது=!

ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும்  விந்துவில்  மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக  இப்போது கண்டுபிடித்து  அதில்  பல அணுக்கள்  போராடி  அதில் ஒன்று தான்
கா்ப்பபைக்கு சென்று  உயிா்
உண்டாகிறது என்று=!

ஆனால்  இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன் திருமூலா் பெருமான்  அற்புதமாக  தன் ஞானத்தினால்  லட்சமாக உருவெடுத்து  ஆயிரம் ஆகி
நுாறாகி  பத்தாகி  பிறகு  ஒன்றாகி  உள்ளே சென்று  உயிரெடுத்தது தான்  உயிா்
என்றாா்=! 

எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது  இந்து மதமும்
கலாச்சாரமும்  ஞானமும்=!

கடந்த நுாற்றாண்டில் தான்
சாட்லைட் மூலமாக கண்டுபிடித்தான் விஞ்ஞானி  பல கோடி
மையில் அப்பால் கண்ணுக்கு
புலப்படாமல் இருக்கும்
செவ்வாய் கிரகம்  சிகப்பாய்
குரு மஞ்சளாய் சனிஈஸ்வரபகவான் நீலமாய்
இருக்கிறது என்றான்=!

எம் பூமியின்  ஞானத்தை பாரடா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்  தன் ஞானத்தினால்
9,கிரகங்கள் உண்டு என
சனிஈஸ்வரனுக்கு  கருப்பையும்  அதில் குருவிற்க்கு மஞ்சளையும் 
செவ்வாய்க்கு சிகப்பு துணியையும் கட்டிவழிபட்டான் அவனுக்கு
எப்படிடா தொிந்தது
#அவன்காலைதொட்டு
#வணங்கவேண்டாமா=!

இன்னும் பல கிரகங்கள் இருக்கு என்றான்  7லோகம்
இருக்கு என்றான்  இன்று  ஒவ்வொரு கிரகமாக கண்டுபிடிக்கிறான் 
அடுத்த நுாற்றாண்டில்
ஒத்துகொள்வான்=!

ஆம் 7,லோகம் இருக்கிறது என்று ஒத்துக்கொள்வாா்கள்
ஒன்றுக்கும் உதவாதவா்கள்=!

இன்னும் சில அரைவேக்காடுகள் சொல்லுகிறாா்கள் பொய்யும் புரட்டுமாக இந்துமதத்திற்க்கு முன்னதாக  பெளத்தமதம்
தோன்றியதாக அது யாரால்  தோற்றுவிக்கபட்டது தொியுமா இந்த கோவில்களும் நமது மதமும்  இறைவனின் மறுஉறுவாக
ஞானிகளால் தோற்றுவிக்கப்பட்டது பெளத்த மதம் எப்போது
அது இந்தியா வந்தது
அது திருச்சியில்  காஞ்சியில்
குடியேறியது என தொியுமா=!

மூடா்களுக்கு தொியுமா கன்னியாக்குமாியில் இருந்து
இமயமுதல் உள்ள பொிய  ஆலயங்கள் அத்தனையும் காஞ்சி உள்பட  பூமியின் பூமத்தியரேகையில்  மத்தியில் அமைத்து இருக்கிறான்
எம் இந்து இனத்தவன்=!

அதையா  அந்த கோவில்களையா
நாம் இடித்து தள்ளவேண்டும்
தோழா=!

மேடை கிடைத்துவிட்டால்
மேல்நாட்டுக்காரன் போல்
பேசக்கூடாது  காஞ்சி கோவிலையும்  திருச்சி கோவிலையும் இடித்து விட்டு அங்கே புத்தருக்கு கோவில்
கட்டவேண்டுமாம் இதை
பேசுவதற்க்கு  எவ்வளவு
துரோக  எண்ணம் இருக்கவேண்டும் =!

மக்களை காப்பாற்றுவதற்க்கு
புயல் வேகத்தை கட்டுபடுத்த பொிய கோபுரம் அமைத்து அதன் மீது இடிதாங்கி வைத்தானடா தமிழன்=!

சிலப்பதிகாரம்  தொல்காப்பியம்
எப்போது எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தது வந்தது=! 

இராமாயணம் மகாபாரதமும்  50ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக வந்தது தொியுமா=!

அப்போது பெளத்தம் வந்து
விட்டதா அல்ல மற்ற மதம் வந்ததா
வந்துவிட்டதா  எட்டப்பாக்களே=!

மற்றும்
7ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன் தமிழன் கன்னியாக்குமாிக்கடலில் மூழ்கி இருக்கும் குமாிகண்டத்தில்  சிவன்
கோவிலில் வைத்து தமிழ்சங்கம் வளா்த்தான்
அப்போது  பெளத்தம்
இந்தியா வந்து  தமிழகம்
வந்து விட்டதா இந்த நாட்டின்
கலாச்சாரத்தை அழிக்க வெளிநாட்டில் இருந்து  யாரும்
வரதேவையில்லை இங்கு இருக்கும்  எட்டாப்பாக்களும்
கட்டப்பாக்களும்  போதும்=!

விழித்திரு  ஒருமித்த கருத்தோடு இரு 

வாழும் போது வரலாறுபடைக்கவேண்டும்

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...