Sunday 14 April 2019

மோடிக்கு எதற்க்காக வோட்டு போட்டேன்?

மோடிக்கு எதற்க்காக வோட்டு போட்டேன்?

அதை சொல்வதற்கு முன் எதை எதிர்பார்த்து வோட்டு போடவில்லை என்பதை சொல்லி விடுகிறேன்

1
மோடி என் வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவார், நான் உழைக்காமல்   வீட்டில் உட்க்கார்ந்துகொண்டிருக்கலாம் என்று எண்ணி வோட்டு போடவில்லை

2
மோடி வெறும் 200 ரூபாயில் கதர் சட்டை, கதர் வெட்டி மட்டும் அணிந்துகொண்டு வளம் வருவார் என்று எதிர்பார்த்து வோட்டு போடவில்லை

3
மோடி வெளிநாடுகளுக்கு எங்கும் செல்லாமல், உள்ளூரில் கிராமம் கிராமமாக சென்று தான் ஒரு ஏழை பங்காளி என்று
காண்பித்துக்கொள்ள photo எடுத்து விளம்பரம் தேடிக்கொள்ள வோட்டு போடவில்லை

4
மோடி ஐந்தே ஆண்டுகளில் நாட்டில் இருக்கும் மொத்த கருப்பு பணத்தையும் ஒழித்து விடுவார் என்று மூட நம்பிக்கையில் வோட்டுப்போடவில்லை

5
மோடி தான் எடுக்கும் எல்லா சீர்த்திருத்த  முயற்சிகளிலும் முழுமையாக வெற்றிகொண்டு விடுவார் என்ற மூட நம்பிக்கையில் வோட்டு போடவில்லை

6
மோடி இலவசங்களையும் சலுகைகளையும் அள்ளி கொடுப்பார் என்று நம்பி வோட்டு போடவில்லை

7
மோடி சிறுபான்மையினரின் வோட்டை வாங்க அவர்களுக்கு சலுகைகளை அள்ளி கொடுத்து, அவர்களை உற்சாகமாக எப்பொழுதும் வைத்து கொள்ள, நோம்பு கஞ்சி குடிப்பது, பாதிரியார்களோடு கூட்டமாக அமர்ந்து இந்துக்களை வசைபாடுவதெல்லாம் செய்வார் என்று நம்பி வோட்டு போடவில்லை

8
ஆக மொத்தம் இந்தியா 70 ஆண்டுகளாக சந்தித்து வந்த எல்லா பிரச்சனைகளும் 5 ஆண்டுக்குள் தீர்க்கப்படும் என்று நம்பி வோட்டுப்போடவில்லை

பிறகு எதற்க்காக வோட்டு போட்டேன்?

1
காங்கிரஸ் ஆட்சிகளில் நாளுக்கு நாள் வளர்ந்துவந்த கருப்புப்பணத்தின் வளர்ச்சி தடுத்து நிறுத்தப்படும்.. அதற்கான முயற்சிகள் செய்யப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்

2
மோடி எப்படி வேண்டுமானாலும் துணி போடட்டும், ஹெலிகாப்டரில் கூட பயணிக்காட்டும், அதெல்லாம் என் கவலையில்லை.. ஆனால் இந்தியாவின்  நன்மதிப்பு உலக நாடுகளுக்கு நடுவில் உயர்த்துவார் என்று நம்பி வோட்டு போட்டேன்

3
மோடி ஆட்சியில் வெளிநாட்டு உறவு மேம்பட வேண்டும்.. பாதுகாப்பு விஷயங்களில் சீனா போன்ற நாடுகள் இந்தியாவை சீண்டுவது, ஆகிராமிப்பது போன்ற விஷயங்களை தடுக்க வேண்டும்.. அதற்க்கு சீனா எதிரி நாடுகளுடனான உறவை பயப்படாமல் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வோட்டு போட்டேன்

4
உலக அளவின் அனைத்து முக்கிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு மேம்பட வேண்டும் என்று வோட்டு போட்டேன்

5
மோடி கருப்பு பணத்தை எல்லாவற்றயும் திருப்பிவிடுவார் என்று மூடத்தனமாக நம்பி வோட்டு போடவில்லை, மாறாக கருப்பு பணத்தை மீட்க உண்மையான முயற்சிகளாவது எடுக்கப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்.. அதின் முடிவை பற்றி கவலை படவில்லை

6
வருடா வருடம் குறைந்துகொண்டே வந்த பொருளதார வளர்ச்சி தடுக்கப்பட்டு, திரும்பவும் வளர்ச்சி பாதைக்கு வரும் என்று நம்பி வோட்டு போட்டேன்

7
சிறுபான்மையினரை ஓட்டுக்காக பயன்படுத்திக்கொள்ளாமல், அவர்கள் பொருளாதார நிலையில் மாற்றம் கொண்டு  வர வோட்டு போட்டேன்

8
இந்தியாவில் வரி கட்டுவோரின் எண்ணிக்கை வெறும் 3 % க்கு கீழ்.. இது மாற வேண்டும்.. இவ்வளவு ஆண்டுகளாக வருமானம் இருந்தும் வரி காட்டாமல் டபாய்த்துக்கொண்டிருந்தவர்களை கண்டுபிடித்து வரி வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும் என்று வோட்டு போட்டேன்

9
பண வீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்

10
செய்யும் ஆட்சியில் வெளிப்படை தன்மை வேண்டுமென்று வோட்டு போட்டேன்.. முன்பு நடந்து வந்த அரசு ஏலங்கள் போல மறைமுகமாக நடக்கலாம், வெளிப்படையாக நடக்க வேண்டும் என்று நம்பி வோட்டு போட்டேன்

11
வாஜ்பாய்  அரசால் திட்டமிடப்பட்ட நதிகள் இணைப்பு இந்த அரசால் மீண்டும் துவங்கப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்

12
நாட்டின் உலக்கட்டமைப்பு வசதி உயரும் என்று நம்பி வோட்டு போட்டேன்

13
விவசாயிகளின் பிரச்னைகளெல்லாம் தீர உண்மையான முயற்சிகள் எடுக்கப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்

14
இந்தியாவில் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் , அல்லது அவர்களின் புதிய யோஜனைகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்

15
நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என்று நம்பி வோட்டு போட்டேன்

நான் மேலே சொன்ன காரணங்கள் அனைத்தும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.. அது தொடர நான் மீண்டும் மோடிக்குதான் போடுவேன்.. அதில் உள்ள சின்ன சின்ன குறைகளை சொல்லி, மீண்டும் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் காரணமான காங்கிரசுக்கு வோட்டு போட்டால் அதை விட முட்டாள் தனம் வேறில்லை

Tuesday 9 April 2019

BJP achievements pdf.english

https://www.dropbox.com/s/9p3ggx6jnb62uqa/BJP%20Achievements_English-1.pdf?dl=0

Post from Prof S Gurumoorthy

Post from Prof S Gurumoorthy

Do you know?

1. In the Last 3 years unlike any other past Prime Ministers,
Mr Modi has NOT BORROWED $ 1 from the World Bank.

2.It is Anticipated that in the next 10 years India's GDP would Surpass 6 Trillion Dollars.
   
This is not his Words but by Morgan Stanley Research .

3. Following that Forbes Magazine says "India's Economy to rise manifold ONLY because of Modi"

4. The recent release of Economic Growth of 137 Countries says this:
a. India has moved up 31 Places to be RANKING 40 amongst 137 Countries listed.
b. India has NEVER ever reached such a spot since Independence.
c. Forbes Magazine has praised this warmly and have quoted that this was possible ONLY because of Modi's efforts.

LASTLY, No Magazines, Newspapers have even mentioned this TRUTH.

It is our responsibility in the Social Media to reach the Common Man.Please share this with your Well-Wishers,Friends & Relatives

50  லட்சம்  மெட்ரிக் டன் கோதுமையை, ஏற்றுமதி செய்தால் கிடைக்கும் வருமானத்தை விட,

"  50  லட்சம்  மெட்ரிக் டன் கோதுமையை, ஏற்றுமதி செய்தால் கிடைக்கும் வருமானத்தை விட, ISRO யின் GSAT மூலம், 3000 - 4500 kg எடையுள்ள ஒரு செயற்கைகோளை, பிற நாடுகளுக்கு  நாம் வானில் அனுப்பி கொடுத்தால் கிடைக்கும் வருமானம் அதிகம். அதுவும் வருடம் தோறும் நமக்கு சந்தா வேறு கிடைக்கும்,

       ஆகையால், இது போன்று ஒரு நாட்டின் அறிவுசார் ஏற்றுமதி  தேசத்தின் வளர்ச்சிக்கு, மிக மிக முக்கியம்.

      நம் நாட்டில் இருந்து பல அறிலாளிகளை வெளிநாடுகள், தத்து எடுத்து அவர்கள் பயன் பெறுகிறார்கள்.

      இதே போன்று, பெரிய Proiect நமக்கு கிடைத்தால் அதன் மூலம், நம் நாட்டு இளைஞ ர்களின், அறிவினை நாமே பயன்படுத்தி கொள்ள முடியும்.

      அதற்காக தான் மோடி அரசு,  இந்த வான்வெளி ஆராய்ச்சியிலும்,  ISRO வை புதியதாக கட்டமைப்பதிலும், தனி கவனம் செலுத்தியதன் காரணமாக இந்தியா, இன்று வல்லரசு நாடுகளோடு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இன்னும் பல சாதனைகள் புரிய நம் நாடு தன்னை தயார் படுத்தி கொண்டும் இருக்கிறது.

பி.கு:-    உலகிலேயே,  குறைந்த செலவில் Satelite களை, விண்ணிற்கு,  ஏவும் தொழில் நுட்பம்  இந்தியாவிடம் மட்டுமே உள்ளது. அதனால் தான் இந்தியாவை தேடி நிறைய நாடுகள் வருகின்றன.

ஜெய் மோடி சர்க்கார்.

பா.சிவகுமரன்
ஆவரை குளம்

Monday 8 April 2019

வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்...* பணமதிப்பிழப்பு தொடர்பு வழக்கில்...

*வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்...*

பணமதிப்பிழப்பு தொடர்பு வழக்கில்...

இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது...

RBI முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் அவர்களின் வாக்குமூலம்...

*பணமதிப்பிழப்பிற்கு முக்கிய காரணம்...*

முன்னாள் மத்திய அமைச்சர் *ப.சிதம்பரம் மூலமாக நாசிக்கில் இருந்து இந்தியபணத்தை அச்சடிக்கும் மெஷினை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெற்றிருக்கின்றனர்.*

இதற்காக ப.சிதம்பரத்திற்கு மட்டும் 10 கோடி ரூபாய் அன்பளிப்பு கிடைத்திருக்கிறது.

*இந்த மிஷினை வைத்து பாகிஸ்தானில் இந்திய பணத்தை சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு கள்ளபணத்தை அடித்து இந்தியாவிற்குள் மாற்ற திட்டம் போட்டிருந்தார்கள்...*
இந்த ரகசிய தகவல் எனக்கு கிடைத்தது.

அதை பிரதமர் மோடியிடம் அப்போது எடுத்து கூறினேன்.

அவர் சற்றும் தாமதிக்காமல்...

'500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது' என அறிவித்து விட்டார்.

*வேறு யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வேகம் உள்ளவர் அவர்.*

அந்த 8லட்சம் கோடி ரூபாயும் நாட்டிற்குள் ஊடுருவியிருந்தால்...

*இந்நேரம் நமது நாடு சோமாலியாகவா மாறியிருக்கும்.*

மேலும்,
"பணமதிப்பிழப்பின் போது தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 15லட்சம் கோடி...

அவை அனைத்தும் திரும்பி வந்து விட்டதாக நாங்கள் பொய் கூறினோம்...

ஆனால் உண்மையில் வந்தது 10 லட்சம் கோடிகளே.

*நாங்கள் ஏன் பொய் சொன்னோம் என்றால்...*

மீதமுள்ள 5 லட்சம் கோடிகளும் யார் வைத்திருக்கிறார்கள்?

அவர்களின் அடுத்த நகர்வு என்ன?
என்பதை கண்காணிக்க தான்.

இந்த உண்மையை வெளிக்கொண்டு வரவே மத்திய அரசுக்கும் எனக்கும் மோதல் போக்கு இருப்பது மாதிரி நாடகத்தை ஏற்படுத்தி...

நான் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை விட்டு விலகினேன்.

அப்போது, மொத்த பணமும் எங்கிருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன்.

*இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து...*

ஒரு புரோக்கரை பிடித்து 5 லட்சம் கோடியையும் *பாகிஸ்தானில் பத்திரபடுத்தி வைத்திருக்கிறார்கள்.*

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவை அனைத்தையும் செல்லத்தக்க நோட்டாக மாற்றிவிடுவார்கள்.

ஆக, கள்ளப்பணம் மொத்தம் 13 லட்சம் கோடி பணம் நாட்டிற்கு வெளியே தயாராக இருக்கிறது.

*காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்...*

*அது மீண்டும் நாட்டிற்குள் வரும்.*

*நாடு வீழ்ச்சி அடையும்.*
--------------------------

*ரகுராம்ராஜன் புகார் குறித்து...*

*ப.சிதம்பரதிடம் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விகள்...*

நிருபர்: இந்திய ரூபாய் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு நீங்கள் விற்றதாக RBI முன்னாள் கவர்னர்  ரகுராம்ராஜன் உங்கள் மீது புகார் கூறியுள்ளாரே?

சிதம்பரம்:-
உண்மை தான், இயந்திரத்தின் ஆயுட்காலம் முடிந்தமையால் அதை ஏலம் விடுவதற்காக டெண்டர் விட்டோம்...

பாகிஸ்தான் கம்பெனிகாரன் அதிக தொகை குடுத்தான்...

வித்துட்டோம்.

நிருபர்:-
பாகிஸ்தானில் நமது இந்திய ரூபாய் நோட்டுகள் கள்ளப்பணமாக அச்சடிப்பது தெரிந்திருந்தும்...
நீங்கள் அந்த இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றது சரியான செயலா?

சிதம்பரம்:-
யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.

பாகிஸ்தான் நல்ல நாடு...

நிருபர்:-
ரிசர்வ் வங்கி 99சதவிகித 500,1000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்ப வந்து விட்டது என்று சொன்ன நிலையில்...

'காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ரூபாய் நோட்டுக்களை செல்லத்தக்கதாக மாற்றுவோம்...' என்று கூறியிருக்கிறீர்களே...

அப்படி என்றால் கவர்னர் கூறியது போன்று 5 லட்சம் கோடி ரூபாயை நீங்கள் பாகிஸ்தானில் பதுக்கி வைத்தது உண்மை தானா?

சிதம்பரம்:-
*'காங்கிரஸ் ஆட்சிக்கு வரட்டும். உங்களை எல்லாம் என்ன செய்றேன்னு மட்டும் பாருங்க...'*

என்று கூறியவாறே கோபத்துடன் எழுந்து சென்று விட்டார்.

நிகழ்ச்சி பாதியிலேயே நிறைவடைந்தது.
-----------------------------

மக்களே!
நயவஞ்சகர்களின் வலையிலிருந்து நமது நாட்டை காக்க ஒன்று படுவோம்...

*'மோடி' என்ற உத்தமரோடு கரம் சேர்ப்போம்...🙏🏻*

*ஜெய் ஹிந்த்...!🇮🇳*

BJP will gains seats and win 2019 Lok Sabha polls says CIA & ISI Survey...*

*BJP will gains seats and win 2019 Lok Sabha polls says CIA & ISI Survey...*

*CIA* American Spy Agency
*ISI* Pakistan Spy Agency

*BJP-Worst Performance* = 323 Seats.

*BJP-Best Performance* =380 Seats

State.                    Range
                                  Min/Max
◆Andhrapradesh(25) =  3 to 4
◆Arunachalpradesh(2) = 2 to 2
◆ Assam (14)= 8 to 10.
◆ Bihar(40).   = 30 to 35
◆ Chhatisgarh(11) = 6 to 8
◆ Goa (2) = 2/2
◆ Gujarat (26) = 24 to 25
◆ Haryana(10) = 6 to 8
◆ Himachal Pradesh(4) =4 to 4
◆ Jammu&Kashmir(6) = 3 to 3
◆ Jharkhand(14) = 8 to 10
◆ Karnataka(28) = 24 to 25
◆ Kerala(20) = 2 to 3
◆ Madhya Pradesh (29) = 24 to 25
◆ Maharashtra (48) = 36 to 38
◆ Meghalaya(2) = 1 to 1
◆ Mizoram (1) =1
◆ Manipur (2) = 1
◆ Nagaland (1) =1
◆ Orissa (21) = 8 to 10
◆ Punjab (13)= 5 to 6
◆ Rajasthan (25) = 20 to 24
◆ Sikkim (1) = 1
◆ Tamilnadu(39) = 28 to 30
◆ Telangana (17) = 1 to 2
◆ Tripura(2) = 2
◆ Utar Pradesh (80) = 45 to 70
◆ Uttarakhand (5) = 5
◆ West Bengal (42) = 10 to 12
◆ Andaman Nicobar(1) = 1
◆ Chandigarh (1) =1
◆ Dadra NagarHaveli(1) =1
◆ Daman & Diu (1) = 1
◆ Lakhshdweep (1) = 1
◆ Delhi (7) = 6 to 7
◆ Pundicherry(1) =1

*Prime Minister Narendra Modi is by far the most popular leader in the country today*

https://www.bbc.co.uk/news

Thursday 4 April 2019

நாம் ஏன் பீ ஜே பி க்கு வாக்களிக்க வேண்டும் ?

நாம் ஏன் பீ ஜே பி க்கு வாக்களிக்க வேண்டும் ?

1. "புலி வருது புலி வருதுன்னு " நம்மையும் பயமுறுத்தி , அந்தப் புலியை உள்ளே ( காஷ்மீரில் ) உலவ விட்டு நாட்டையும் வேட்டையாடி , இரட்டை வேடம் போட்ட காங்கிரஸ் போல அல்லாமல் , ஒரு முறத்தால் அடித்தே அந்தப் புலியை (பாகிஸ்தானை) ஓட ஓட விரட்டி உலக சாதனை படைத்த ஒரு காரணத்துக்காகவே என் ஓட்டு BJP க்கு !

2. பிஜேபி , ஊழலை வேரறுக்கும் கட்சியாதலால், மக்கள் பணம் இனி வரும் நாட்களில் , ஊழல் பெருச்சாளிகளால் சூறையாடப் படாது என்பது  என் இரண்டாவது நம்பிக்கை !

வளர்ச்சி திட்டங்கள் :

1. உலக வங்கி, நமது பிரதமர் திரு. மோடிக்குப் பிடித்தமான  " CLEAN  INDIA " திட்டத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளது ; இத்திட்டத்தை  ஆதரித்து 1.5 பில்லியன் டாலர் ஊக்கத் தொகையையும் அறிவித்துள்ளது
http://www.worldbank.org/en/news/press-release/2015/12/15/world-bank-approves-usd-1point5-billion-support-india-universal-sanitation-initiatives

2. சூரிய சக்தி  ஆய்வை ஆதரிக்கும் இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான " அணு சக்தி ஒப்பந்தம்" , IAE யினால் ( Inventions for Energy Alternatives ) பாராட்டுப் பெற்றுள்ளது . இந்த ஒப்பந்தம், சூரிய சக்தியின் பயன்பாட்டில் , இந்தியா உலக அளவில் நிகழ்த்தப் போகும் சாதனைகளில் ஒரு மைல் கல்லாகும் .
http://www.world-nuclear-news.org/NP-India-Japan-reach-agreement-on-nuclear-cooperation-1412155.html

3. இன்னும் ஒரு வருடத்தில் , 100 ரயில் நிலையங்களில் இலவச WIFI சேவையும் , 20 லட்சம் பேருக்கு Android Developers வேலை வாய்ப்பும் கொடுக்க Google நிறுவனம் சம்மதித்துள்ளது .
http://www.cnet.com/news/google-to-install-free-wi-fi-at-400-railway-stations-in-india/

4. மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியின் முக்கிய திட்டங்களில் ஒன்றான " இலவச Online  CBSC புத்தக சேவை "  விரைவில் அமல் படுத்தபட உள்ளது ..
http://indianexpress.com/article/india/education-news/cbse-books-to-be-made-available-online-for-free/

5. இந்தியா , U.A.E. யுடன் ஒரு முக்கியமான எண்ணெய் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரில் அல்லாமல்  இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய U.A .E ஒப்புதல் அளித்துள்ளது . அதன் நன்மைகள் கீழேயுள்ள லிங்க்கில் :
https://www.kamadenu.in/news/special-articles/11515-india-uae-sign-currency-swap-deal.html

6. ரயில்வே நிர்வாகம் Scrap அயிட்டங்களை  ஏலம் விட்டதில்  3000 கோடி ரூபாயை .அரசுக்கு வரவு வைத்துள்ளது . ஆன்லைனில் இந்த ஏலம் வெளிப்படையாக நடந்ததால் இதில் எந்த ஊழலும் இல்லை .

7. "MakeinIndia" என்கிற 'இந்தியாவிலேயே தொழில் உற்பத்தி செய்யும் கொள்கைக்கு ஆதரவாக மஹாராஷ்டிர மாநிலத்தில் 15.2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான commitment  கிடைத்துள்ளது . இதில் ஒரு 10% கிடைத்தால் கூட 1.52 லட்சம் கோடி முதலீடு செய்யப் படும் .

8.  சென்னைத் துறைமுகத்திலிருந்து கண்ட்லா துறைமுகத்துக்கு முதன்முதலாக 800 கார்கள் ( first batch ) அனுப்பியதில், போக்குவரத்து செலவு மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது. இது போன்ற Cargo ( within the country ) போக்குவரத்துக்கு இதுவரை சட்டத்தில் இடமில்லை ; பொருளாதார  நலன் கருதி இந்த சட்டத்தை தற்போதுள்ள அரசு மாற்றியமைத்துள்ளது .

BJP அரசு செய்த சிறு பிழைகள் :

1. பீ ஜே பி செய்த தவறுகள் என்று சுட்டிக் காட்டப் படும்  demomitisation , GST போன்றவை உலக நாடுகளால் பாராட்டுப் பெற்ற அருமையான schemes என்றாலும் , இந்தியாவில் அவற்றைக் கொண்டு கொண்டு வந்த நேரமும் , விதமும் சரியில்லாததால் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றன ; இன்னொரு term கால அவகாசம் பீ ஜே பி க்கே கொடுத்தால் , அதை அவர்களே சரி செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளன .

2.  பீ ஜே பி செய்த இன்னொரு தவறு , குற்றவாளிகளை கண்டு பிடித்தும் , அவர்களை உலவ விட்டு எந்த நடவடிக்கையும்  எடுக்காமல், மெத்தனமாகக் காலம் தள்ளுவது .
ஆனால், இதில், காவல், நீதித் துறைகளும் சம்பந்தப் பட்டதாலும் , சட்டங்களில் பல ஓட்டைகள் இருப்பதும் கூடக் காரணங்களாக இருக்கலாம் .  இந்தத் தவறும் கூட இன்னொரு term கால அவகாசத்தில் சரி செய்யப் படலாம் . அது, மக்கள் கையில் உள்ளது.

நாட்டில் சிறப்பான வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன ; நாம் நினைக்கும் வேகத்தில் செயல்படா விட்டாலும் , இந்த ஊடகங்களின் கூப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அமைதியாகத் தனது வேலைகளையெல்லாம் ,  இந்த அரசு செய்து கொண்டுதான் வருகிறது . 
எந்த ஆரவாரமும் இல்லாமல் செயல் படும் இந்த அரசின் சாதனைகளை இந்திய மக்கள் நாம் பகிர்வோம்

Facebook

https://www.facebook.com/100026573453662/posts/281782936050819/

Monday 1 April 2019

திருப்பூரில் ஏற்றுமதி குறைந்து விட்டது. காரணம் GST மற்றும் டிரா பேக் குறைக்கப்பட்டதே என்று கூறி மோடியை அகற்ற வேண்டும் என்கிறார்கள். உண்மை என்ன?

திருப்பூரில் ஏற்றுமதி குறைந்து விட்டது. காரணம் GST மற்றும் டிரா பேக் குறைக்கப்பட்டதே என்று கூறி மோடியை அகற்ற வேண்டும் என்கிறார்கள்.

இது உண்மையா என ஆராய்ந்த போது அறிந்த விஷயம் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கான ஏற்றுமதியில் சரிவில்லை. ஆனால் , ஐக்கிய அரபு நாடுகளுக்கான ஏற்றுமதியில் மட்டும் 31% சரிவு ஏற்பட்டுள்ளது.

அரபு நாடுகளுக்கான ஏற்றுமதி மட்டும் வீழ்ச்சியடைய என்ன காரணம் என்று ஆராய்ந்து முடிவறிந்தால் GST யின் அவசியம் புரிவதோடு , மோடி எப்படி காவல் காரராய் செயல்படுகிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.

திருப்பூரில் ஒரு ஏற்றுமதியாளர் துபாய் நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறார் .எப்படித் தெரியுமா ?

பெரிய ஏற்றுமதி நிறுவனங்களில் , தரமற்றது என்ற காரணங்களால் ஒதுக்கப்பட்ட ஆயத்த ஆடைகளை மிகவும் குறைந்த விலைக்கு வாங்குவார். உதாரணமாக ஐம்பதாயிரம் எண்ணிக்கையில் ஒன்றின் விலை ரூ. 50 |- என்ற மதிப்பில் வாங்குவார்.

மொத்த கொள்முதல் மதிப்பு 50000 x 50 = 25, 00,000/

சரியா ? இந்த கொள்முதலுக்கு பில்லும் கிடையாது , புண்ணாக்கும் கிடையாது.

அடுத்ததாக , இதனை ஏற்றுமதி செய்வார். விலை என்ன தெரியுமா ? ஒன்றின் விலை 500 |- என்ற மதிப்பில் அனுப்புவார்.

என்னய்யா அநியாயம். ?.ஐம்பது ரூபாய் மதிப்புள்ள ஆடைக்கு விற்பனை விலை ஐந்நூறா என வாயைப் பிளக்காதீர்கள்.

சரிங்க... வாயைப் பிளக்கல .... ஒரு கருத்தா கேட்கிறேன். இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்க , துபாய் இறக்குமதியாளர் முட்டாளா ? என்ற கேள்வி எழுகிறதா ? எழ வேண்டும் .அப்போதுதான் நீங்கள் புத்திசாலி.

இங்கேதான் விஷயமே அடங்கியுள்ளது. இங்கே யார் ஏற்றுமதி செய்கிறாரோ , அவரின் வெளிநாட்டு நண்பர்தான் இறக்குமதியாளராக இருப்பார். அல்லது , இவரின் நிறுவனமே அங்கு விற்பனையகத்தை நிறுவியிருக்கும் .
ஆகவே , அதிக விலை யென்பது ஒரு பொருட்டே அல்ல.

பின் எதற்காக அதிகமான விலையில் அனுப்ப வேண்டும் ? இதில் தான் மோசடி அடங்கியுள்ளது.

இப்போது ஏற்றுமதி செய்யும் சரக்கின் மதிப்பைக் கணக்கிடுங்கள்.

50000 x 500 | = 2,50,00,000/

சரியா ? நன்றாக பெருக்கிப் பார்த்துக் கொள்ளவும். பிறகு , முழிக்கக் கூடாது.

சரி. முன்பு ஏற்றுமதிக்கான மானியம் 7% இருந்தது. இப்போது இவருக்கு மானியம் மட்டும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா ?

25000000.x 7 %= 17,50,000/

அரசு இவருக்கு வழங்கும். எதற்காக வழங்குகிறது தெரியுமா ?

அன்பான ஏற்றுமதியாளரே .. தாங்கள் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் மதிப்புள்ள சரக்குகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் அந்நிய செலவாணி யை அரசுக்கு ஈட்டித் தந்துள்ளீர்கள். மேலும் , அப்பகுதி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளீர்கள். ஆகவே , பிடியுங்கள் 17,50,000/ என்று வாரி வழங்கி விடும்.

இப்போது மானியமாய் வந்த தொகை 17,50,000 + பில் தொகை 2,50,00,000 =
2, 67,50,000 .ஆக இது மொத்த வரவு . இதில் இவர் கொள்முதல் செய்தது 25 லட்சம் போக நிகர லாபம் 2,42,50,000/

என்னய்யா கதை விடுகிறாய். ஐம்பது ரூபாய் மதிப்புள்ளது ஐநூறுக்கு விற்றால் தானே இது சாத்தியம் ?

கேள்வி சரிதான். இதில் ஏற்றுமதியாளரும் இறக்கு மதியாளரும் கூட்டுக் களவாணிகள். அரசின் மான்யம் பெற இது போன்ற ஏற்பாடு . அந்த ஆடையின் மதிப்பு நூறு எனக் கொண்டாலும் அதிகமாக பில் செய்யப்பட்டதற்கான தொகை இங்கே ஹவாலா பணமாக கை மாறி விடும்.

எப்படி ஹவாலாக மாறுகிறது பாருங்கள். அரசின் விதிகளுக்கு உட்பட்டு சட்டபூர்வத் தொகையாக நாட்டிற்குள் வருகிறது என்பது தான் வேடிக்கை.

இவைக ளெல்லாம் GSTவரும் முன். இப்போது கொள்முதல் முதற் கொண்டு பில் தேவைப்படுவதால் இது போன்ற மோசடி வணிகம் நடை பெற முடிவதில்லை. ஆகவே தான் ஏற்றுமதி சரிந்து விட்டது என்ற புலம்பலும் , மோடி ஒழிக என்ற எரிச்சலும்.

துபாய்க்கு ஏற்றுமதி செய்த சதவிதம் மட்டும் 31% குறைந்துள்ளதை கவனிக்க வேண்டும். மற்ற நாடுகளுடனான ஏற்றுமதி குறையவில்லை.

திருட்டுப் பொருட்களை மட்டுமே வாங்கி சிலர் கடை நடத்துவார்கள். காவல் அதிகமானால் கடையை சாத்திவிட்டு , காவல் காரனைத் திட்டாமல் என்ன செய்வார்கள் ?

திருப்பூரிலும் இது தான் நடக்கிறது. மோடி என்ற காவல்காரரைத் திட்டுகிறார்கள்.

ஏற்றுமதியாளர்கள் அனைவரும் இப்படி மோசடி செய்வதில்லை. ஆனால் , இவ்வாறெல்லாம் நடைபெறவில்லையென்று யாரும் மறுக்க முடியாது.

இது போன்ற மோசடி ஏற்றுமதி கண்டு பிடிக்கப்பட்டு , அந்நிறுவனம் CBl விசாரணையில் இருப்பதாக தகவல் .

தற்போது டிரா பேக் குறைக்கப்பட்டுள்ளது. G ST நடைமுறையில் இருப்பதால் சரியான கொள்முதல் மற்றும் விற்பனை பில்களைக் கொண்டு முறையாக , சட்டத்திற்குட்பட்ட வணிகம் செய்தால் தான் GST ரீபண்ட் தொகைகள் ஒழுங்காய் வணிகர்களுக்கு வந்து சேரும். இதில் முறையற்றதாக எது இருந்தாலும் ரீபண்ட் கிடைக்காது.

எனக்கு ரீபண்ட் வந்து சேரவில்லை என்பவர்கள் தகுந்த ஆடிட்டர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டுகிறேன்.

இது போன்ற முறையற்ற வணிகத்திற்கு பைனான்ஸ் செய்பவர்களும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் புலம்பல் அழுகை தனி. அதைத் தனிப் பதிவாக எழுதுகிறேன்.

பைனான்சியர்களுக்குத் தனி மரியாதை தர வேண்டுமல்லவா ?

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...