Monday 5 November 2018

கிறிஸ்துவ பெண்கள் சபரிமலைக்கு போய்தான் தங்கள் பெண்ணியத்தை நிருபிக்க வேண்டுமா?

கிறிஸ்துவ பெண்கள் சபரிமலைக்கு போய்தான்  தங்கள் பெண்ணியத்தை நிருபிக்க வேண்டுமா?

சபரிமலைக்கு பெண்களே வரக்கூடாது என்று தடையில்லையே!

வயதுதானே பிரச்சனைகள்...அதையும் ஹிந்து பெண்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்!
சரி கிறிஸ்துவ மதத்தில் போப்பரசராக பெண்கள் வரமுடியுமா?
ஒட்டு மொத்த கிறிஸ்துவர்களையும் முட்டாளாகி ஒருபெண் போப்பரசராகி இருந்த விஷயம் தெரியுமா!
✝✝✝✝போப் ஜாண் இவன் ஆண் அல்ல!
பெண் பெயர் ஜோவான்.✝✝✝✝
இவர் இரண்டு வருடங்கள் (855-857)ஆண் வேடத்தில் போப்பரசராக இருந்துள்ளது.
பதிவுசெயப்பட்டுள்ளது.
இவர் ஆண்பெயரை தாக்கிய பெண். கிரேக்க நாட்டின் ஆதென்ஸ் நகருக்கு ஆண்வேடம் போடப்பட்டு காதலன் ஒருவனால் கடத்திவரப்பட்டவள்.
அறிவிலும் புத்திசாலித்தனத்திலும்,கல்வி கேள்விகளிலும் முதன்மையாக திகழ்ந்த இவர் 855ஆம் ஆண்டில் பெண் என்று அறியப்படாமல் போப்பரசராக ஜாண் என்ற பெயரில் போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப் பட்டார்.
ஆண் வேடத்தில் போப்பாக வந்த இவர் தன் கள்ளக்காதலன் மூலம் சல்லாபபாக வாழ்ந்ததால் கருவுற்றார்!
இதை யாரும் அறியாதவாறு பார்த்துக்கொண்டார்.
இவர் தனது பிரசவ நேரத்தை சரியாக நிர்ணயம் செய்யாமல் அசைட்டையாக இருந்தார்.
விளைவு இவர் ஒருநாள் ரோம் நகர கிறிஸ்து  ஊர்வலத்திற்கு  தலைமை தாங்கிக் குதிரையில் அமர்ந்து பயணம் செய்தபோது எல்லோரும் முன்னிலையில் நடுத்தெருவில் ஒரு ஆண் குழந்தையை பிரசவித்தார்.
அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பொதுமக்கள், இதர கிறிஸ்துவ குருமார்களும் உடனடியாக அவரை குதிரையால் கட்டித் தெருத்தெருவாக இழுத்து சென்று கொன்றார்கள்!
பிறகு போப் ஜாண்? எங்கு பிரசவித்தாரோ அங்கேயே உடல் அடங்கம் செய்யப்பட்டது.
இவருடைய கதையை வரலாறாகவும், நாடகமாகவும் இன்றளவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஒருபெண் போப்பாக வந்தது  கிறிஸ்துவத்திற்கு மிகப்பெரிய அவமானமாக கருதிய கிறிஸ்துவர்கள் பிற்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க மூன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டன.

1.போப்பரசர் இனிக் குதிரையில் பயணிக்கக் கூடாது. பல்லக்கில்தான் பயணிக்கவேண்டும்.
(காரணம் போப்ஜாணுக்கு குதிரையில் போனதால் தானே குழந்தை பிறந்ததாம்)

2.போப் பதவியேற்றதும் அவர் ஒரு நாற்காலியில் அமர வேண்டும்? அந்த நாற்காலியின் அடியில் ஒரு ஓட்டை இருக்கும் அதன் வழியாக போப் ஆணா-பெண்ணா என ஒருவர் குனிந்து பார்த்து உறுதி செய்யவேண்டும்!
இந்த நாற்காலி வாடிகனில் இன்றளவும் அருங்காட்சியகத்தில் உள்ளது.

3.போப்பாக பதவியேற்ற எந்த போப்பும் ரோம் நகரில் போப் ஜாண் பிரசவித்த பகுதியை உற்றுப் பார்க்கக் கூடாது?
(ஒருவேளை போப் உற்றுப் பார்த்தால் குழந்தை பிறந்துவிட்டால் என்ன ஆவது)
என்ற பாரம்பரியம் பின்பற்ற வேண்டும்!
இவ்வளவு கேவலமான பாரம்பரியத்தை எந்த கிறிஸ்துவ பெண்களும். பெண் செயல்பாட்டாளர்களும் இதற்கு எதிராக போராடினார்களா?
மேலும் விவரங்கள் தெரிய.....கிறிஸ்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும் உலகளாவிய தாக்கமும்.
என்ற புத்தகத்தில் உள்ளது.
ஆசிரியர் உமரி காசிவேலு அவர்கள்.

சத்ரபதி சிவாஜி*

*சிவாஜி*

     நான் சொல்லப் போவது சிவாஜி கணேசன் பற்றி அல்ல;

அசல் *சத்ரபதி சிவாஜி* பற்றி.

எப்போதும் சிவாஜி கணேசனின் சினிமாவைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்னும் அவசியல் இல்லை.

நேரம் கிடைக்கும் போது, பிள்ளைகளுக்கு, சத்ரபதி சிவாஜியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

1.  “காபூலில் இருந்து காந்தஹார் வரை என் தைமூர் குடும்பம் மொகலாய சுல்தான்களின் ஆட்சியை நிறுவியது. ஈராக், ஈரான், துருக்கி போன்ற பல நாடுகளை என் படைகள் வென்று வந்துள்ளன.

ஆனால், இந்தியாவில் தான்  சிவாஜி எனக்கு பெரும் தடையாக இருந்து விட்டார். என் சக்தி முழுதையும் செலவிட்டும், அவரை வெற்றி கொள்ள முடியவில்லை.

அல்லாவே! எனக்கு, பயமில்லாத, துணிச்சலான ஓர் எதிரியைக் கொடுத்து விட்டாய். இவ்வுலகின் அஞ்சா நெஞ்சன் உன்னிடம் வருகிறான். அவனுக்கு உன் சொர்க்கத்தின் வாசலைத் திறந்து வைத்திரு” என்று சிவாஜியின் மறைவை ஒட்டி நடந்த “நமாஸ், பிரார்த்தனையில் மொகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கஸேப் படித்துள்ளார்.

2. “அன்று, சிவாஜி என் விரல்களை மட்டும் நறுக்கி எறிய வில்லை; என் கர்வத்தையும் கூடவே நறுக்கி எறிந்து விட்டார்; என் கனவில் கூட சிவாஜியைக் காண நான் பயப்படுகிறேன்” என்று அபு தாலிபன் அரசனான ஷயிஸ்டகான் கூறியிருக்கிறார்.

3. “என் ராஜ்யத்தில், சிவாஜியைத் தோற்கடிக்க ஓர் ஆள் கூடவா இல்லை?” என்று உள்ளக் குமுறலுடன் கேட்டார் , பீஜப்பூர் சுல்தான் அலி அதில் ஷாவின் பேகம்.

4. நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் ஹிட்லர், “ உங்கள் தேசத்திலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்க  ஹிட்லர் தேவையில்லை; சிவாஜியின் சரித்திரத்தை போதித்தாலேயே போதும்” என்று சொன்னார்.

5. சிவாஜி மட்டும் இங்கிலாந்தில் பிறந்திருந்தால், நாங்கள் இந்த பூமியை மட்டுமல்ல, அண்ட சராசரத்தையும் ஆண்டிருப்போம்” என லார்ட் மவுண்ட்பேட்டன் சொன்னார்.

6. “சிவாஜி இன்னும் பத்தாண்டுகள் உயிரோடிருந்திருந்தால், நாங்கள் இந்தியாவைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது” என்று ஒரு பிரிட்டிஷ் கவர்னர் சொல்லியிருக்கிறார்.

7. “சிவாஜி மாதிரி சண்டையிட்டால், நாம் எளிதாக சுதந்திரத்தைப் பெற்று விடலாம்” என நேதாஜி புகழ்ந்திருக்கிறார்.

8. “சிவாஜி என்பது ஒரு பெயர் மட்டுமல்ல;  இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சக்தி; இதனைக் கொண்டு நாட்டு விடுதலையை அடைய முடியும்” என ஸ்வாமி விவேகாநந்தர் சொல்லியிருக்கிறார்.

9.  சிவாஜி அமெரிக்காவில் பிறந்திருந்தால், அவரை “சூரியன்” என்றே போற்றியிருப்போம்” என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா புகழ்ந்துள்ளார்.

10. சிவாஜியின் அம்பர்கண்ட் யுத்தம் , கின்னஸ் பத்தகத்தில் பதிவாகி உள்ளது. 30000 உஸ்பெக் வீரர் படையை, 1000 பேர் கொண்ட சிவாஜியின் படை நிர்மூலமாக்கியது பட்டுமல்லாமல், எதிரிப் படையில் ஒரு வீரர் கூட திரும்பிப் போக விடாமல் அழித்தது. இது தான் உலக சாதனை.

11. சிவாஜி, தன் 30 ஆண்டு காலத்தில், இரண்டு தடவை தான் நம் நாட்டு எதிரிகளுடன் மோதியுள்ளார். பிற யுத்தங்கள் யாவும், அயல் நாட்டுப் படைகளுக்கு எதிராகத் தான்.

12. சிவாஜி மோதியதெல்லாம் கொடூரத் தாக்குதலுக்குப் பெயர் பெற்ற பதான், துருக்கி, ஆஃப்கானிஸ்தான், மங்கோலியா படைகளுக்கு எதிராகத் தான். இவற்றில் ஒன்றில் கூட சிவாஜி தோல்வியே கண்டதில்லை.

13. ஈரான், சிவாஜியை முறியடிக்க கடற்படையை அனுப்ப முடிவு செய்த போது, சிவாஜி, இந்தியாவின் முதல் கப்பற்படையை ஏற்படுத்தினார். ஆனால், அது முழு அளவில் உருவாக்கப் படுவதற்கு முன், சிவாஜி தன் 50-வது வயதில் மரணமடைந்தார். (பிறந்தது: 19-2-1630; இறாந்தது: 3-4-1680).

14. பாஸ்டன் பல்கலைக் கழகத்தில், “ மேலாண்மைக்கு குரு சிவாஜி” என்று ஒரு பாடம் இன்றும் போதிக்கப் பட்டு வருகிறது.

      இந்தியாவில் தான் சிவாஜி போன்ற மாவீரர்களைப் பற்றியெல்லாம் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை.

அப்புறம் எப்படி தேசம், தியாகம், வீரம், விவேகம், புத்திசாலித்தனம், அஞ்சாநெஞ்சம் போன்றவை வரும்?

வாய் சவடால் அடித்துக் கொண்டு, அயோக்கிய அரசியல்வாதிகளுக்குப் புகழாரம் சூட்டிக் கொண்டு, டாஸ்மாக்குக்குப் போய்க் கொண்டு, வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டு இருக்கத்தான் நேரம் சரியாக இருக்கும்.

ஏசு "மேரி " என்கிற வேசியை திருமணம் செய்துக் கொண்டார் !! 

ஏசு "மேரி " என்கிற வேசியை திருமணம் செய்துக் கொண்டார் !! 

  யேசு கதையை புரட்டி போடும் செய்தியை படியுங்கள், பகிருங்கள்.

யேசு "மேரி " என்கிற வேசியை திருமணம் செய்துக் கொண்டார் !!  அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன எனும் தகவல் தற்போது ஆதார பூர்வமாக தெளிவாகி உள்ளதாக சொல்கிறார்கள்.

கன்னி மேரி என்று சொல்லப்படுவது அவரின் தாய் அல்ல மாறாக அவரின் மனைவிதான்.

1500 ஆண்டு கால பழமையானதும்,  தொலைந்து போன இறைசெய்தி என்று சொல்லப்பட்டதுமான‌ ("Lost Gospel") இந்த நூல் தற்போது பிரித்தானிய நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  கிறிஸ்துவ சரித்திரத்தையே புரட்டிப் போடக் கூடிய இந்த புத்தகம் தற்போதுதான் அரமிக் மொழியிலிருந்து மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது.  இதற்காக பேராசிரியர் பேரி வில்சன் (Professor Barrie Wilson) மற்றும் எழுத்தாளர் சிம்சா ஜெகோபொவிக் ( Simcha Jacobovic) மாதக் கணக்கில் பாடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே "டா வின்சி கோட்" என்கிற புத்தகத்தில் மேரியை யேசு திருமணம் செய்திருந்தார் என்பதை உறுதி செய்திருந்தார் அதை எழுதிய "டான் பிரவுன்".

இந்த புத்தகத்தில் யேசுவின் குழந்தைகள் பெயர் குறித்தெல்லாம் குறப்புகள் உள்ளனவாம்.

இன்னும் தோண்ட தோண்ட என்னவெல்லாம் வரப்போகிறதோ தெரியவில்லை.  அல்லேலூயா..................!!

ஆதாரம் :  http://timesofindia.indiatimes.com/world/uk/Jesus-married-Mary-Magdalene-and-had-children-according-to-ancient-manuscript/articleshow/45099168.cms

http://www.independent.co.uk/news/people/news/jesus-married-mary-magdalene-and-had-children-according-to-ancient-manuscript-9849839.html

http://www.washingtonpost.com/news/morning-mix/wp/2014/11/10/the-book-that-claims-jesus-had-a-wife-and-kids-and-the-controversial-author-behind-it/

http://www.thesundaytimes.co.uk/sto/news/uk_news/Arts/article1481392.ece?CMP=OTH-gnws-standard-2014_11_08

#Nnsindia
#Nnsdharma

படித்துவிட்டு பகிருங்கள் நண்பர்களே...

முதலில் கார்ப்பரேட் என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது?

கார்ப்பரேட் எதிர்ப்பு என்று செய்திகள் மீமிஸ் படித்ததும் பொங்கும் நபர்களுக்கும் முக்கியமாக மாணவர்கள் , இளையவர்க்காக இந்தப் பதிவு:

காசு இல்லை என்றால் காதலிக்கு மட்டும் அல்ல தாய் தந்தையருக்கும் கூட நீ பாரமாவாய் இதை மனதில் வைத்துக் கொண்டு கொஞ்சம் பொறுமையாக மேற்கொண்டு படிக்கவும்.
----------------------------------------------------------------------------------
முதலில் கார்ப்பரேட் என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது?

என்னிடம் ஒரு 25லட்சம் இருக்கு. அதை நான் வங்கியில் போட்டு வச்சா அது 7% வட்டி தான் தரும். அதனால் இடம், வீடு வாங்கிப் போட்ட அது எவ்வளவு போகும் என்ற ஒரு கணிப்பு இப்போ கஷ்டம். எனக்கு வருடம் ஒரு வருமானம் வேண்டும் அதே நேரம் என்னுடைய இந்த 25லட்சம் முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும். என்ன செய்யலாம்!!!

என் நண்பர் ஒருவர் தொழிற்சாலை தொடங்கப் போகிறார் , அவரிடம் முதலீடாக நான் போட்டு வச்சா எனக்கும் லாபத்தில் ஒரு பகுதி வரும் , என் முதலீடும் கம்பெனியில் சேர் என்ற முறையில் கம்பெனி சொத்தின் மதிப்புடன் என் முதலீட்டின் மதிப்பும் கூடும். இது தொழில் முதலீடு.எப்படி நிலம் , தங்கம் வாங்கிப் போடுவது போல இது தொழில் முதலீடு.

அந்த நண்பன் தொடங்கும் தொழிலின் மொத்த முதலீடு மதிப்பு 1கோடி என்றால் நான் 25% என்னுடையது. அந்தத் தொழில் வருடம் 20லட்சம் லாபம் தரும் என்றால் லாபத்தில் 25% அதாவது 5லட்சம் என்னுடையதாக லாபம் பிரித்து கொடுப்பான். { செலவினம், வரி எல்லாம் போக ஒரு நல்ல ரிட்டன் இருக்கும்} இது நல்ல முதலீடு தானே? என் முதலீடும் 5 வருடத்தில் திரும்ப கிடைக்கும் , அது தவிர கம்பெனி மதிப்பு உயர உயர என் முதலீட்டின் மதிப்பும் உயரும். ஆக முதலீடு மதிப்பு உயரும் ; எனக்கு என் முதலீட்டின் மூலம் ஒரு வருமானமும் கிடைக்கும்.

எனவே நான் என் நண்பன் நிறுவனத்தில் முதலீடு செய்வது சரி தானே?

ஆனால் வெளியுலகம் என்ன நினைக்கும்? என் நண்பன் 1கோடி முதலீட்டில் தொழில் நடத்துகிறான் ; அந்த கம்பெனி மூலம் லாபம் அவனுக்கு வருடம் 20லட்சம் கிடைக்கிறது என்று. வெகுஜன மக்கள் யாருக்கும் அதில் எத்தனை முதலீட்டாளர்கள் என்ற விவரம் தெரியாது. அதனால் அவன் அதைத் திருப்பி முதலீட்டாளர்களுடன் அதனைப் பகிர்ந்து கொள்கிறான் என்பது எவனுக்கும் தெரியாது.

இங்கே முதலில் நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள தவறும் விசயம் இது தான்... முதலீட்டாளர்கள் விவரம் தெரியாமல் பேசுவது.... ஒரு உண்மையான எடுத்துக்காட்டுக்கு வருவோம்.....

இப்போது இதே தான் infosys என்ற நிறுவனம் 2016ல் மொத்த வருமானம் 68,484 கோடி. அதில் லாபம் 25,231கோடி. ஆனால் அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் ???

மொத்த 2,285,616,160 சேர்கள். அப்போ ஒரு சேருக்கு எவ்வளவு கிடைக்கும்? கொஞ்சம் கணக்கு போடுங்கள் இந்த லாபம் பல ஆயிரம் கோடி எல்லாம் மொத்தமாகப் பார்க்கும் பொது தான் பிரமாண்டமான வருமானம் போல தெரியும்.

ஒரு சராசரி கணக்கின் படி சுமார் 1000 சேர் (5லட்சம் ரூபாய் மதிப்பிலான சேர்) நீங்கள் வைத்திருந்தால் அன்று உங்கள் அந்த நிறுவனத்தின் முதலீட்டின் மூலம் கிடைத்த வருமானம் 1 லட்சம் ரூபாய். ஆக 5 லட்சத்திற்கு வாங்கிய என் சேர் மூலம் எனக்கு 18%க்கும் மேல் ரிட்டன் கிடைத்துள்ளது... ஒரு fixed deposit விட இது நல்ல ரிட்டன்... {என்னைப் போல் எத்தனை லட்சம் முதலீட்டாளர்கள் வீடு இதனால் வருமானம் பெறுகிறது ???? கொஞ்சம் யோசிக்கவும்.}

அடுத்து நீங்கள் யோசிக்க வேண்டிய விசயம் :

ஒரு பக்கம் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்து பல லட்சம் குடும்பம் என்றால் இன்னொரு பக்கம் அந்த நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பினை பெற்ற ஊழியர்கள் குடும்பம் வேலைவாய்ப்பின் மூலம் பயனடைகிறது. அப்படிப் பார்த்தால் infosys நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 200,364 பேர்.... ஆக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பி சுமார் 10லட்சம் குடும்பங்கள் பிழைப்பு இருக்கிறது... இதை உங்களால் முதலில் உணரமுடிகிறதா?????

நான் எளிமையாகக் கூறிவிட்டேன் ஒவ்வொரு நிறுவனமும் பல போராட்டங்களைச் சந்திக்கின்றன.. அதே அளவு மோசமான எதிரிகளையும் வைத்துக் கொண்டு.. 10,000 ரூபாய் வருமானம் உங்களுக்கு ஒரு கடையில் இருந்து வந்தால் அதையே ஆயிரம் போட்டி இருக்கும் என்றால் இதை எல்லாம் எவ்வளவு சிக்கல் இருக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள்...

கண்மூடித்தனமாக கார்ப்பரேட் நிற்யுவனர்கள் என்றால் ஏதோ ஏலியன் போல் பார்ப்பதை முதலில் திருத்துங்கள்... அப்போ தான் உங்களுக்குத் தொழில் சார்ந்த புத்தியும் - பணம் தேடுவதற்கான சரியான வழிகளும் புரியும்...

அடுத்து இந்த நிறுவனகள் மூலம்

எனவே பெரிய லாபம் , பெரிய கம்பெனி என்பது அல்ல விஷயம். அந்த நிறுவனத்தின் முதலீடு எத்தனை முதலீட்டாளர்கள் என்பதுவே விஷயம். ஆனால் இந்தப் பொருளாதாரம் தெரியாத சீமான் போன்றவர்கள் மக்களை எப்படி உசுப்பிவிடுவர் என்றால் 25,231 கோடி லாபம், ஆனா என் அப்பத்தா சோத்துக்கு வழி இல்லை.

இப்படி ஒரு துறையில் இருக்கும் பிரச்சனை புரியாமல் பெரும் நிறுவனங்களை இவன் அப்பத்தாக்களுடன் ஒப்பிடுவது எந்த அறிவார்ந்தவன் செய்வான்???

தமிழக நிறுவனங்களின் முதலீட்டாளர்களுக்கு பெரும் ஆபத்தைச் சமீபகாலமாக உருவாக்கிவருகிறார்கள் இங்கே இருக்கும் அர்பன் நக்சல் கூட்டம்... கம்யூனிஸம் "நல்ல விசயம் போல் தெரியும் ஆனால் அது உருவாக்கிய நாசம் மிகப் பெரியது என்ற வரலாற்றை உணராத மக்கள் வாழும் இடம் இந்தியா தான். அதிலும் தமிழ் நாட்டில் சமீபத்தில் வேகமாக நக்சல் சிந்தனை எதோ புரட்சிகர சிந்தனை போல் பரவுகிறது".

"இங்கே இருக்கும் நிறுவனங்களில் இருந்து முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெற்றால் என்ன ஆகும்???? பணியாட்களை குறைத்து மொத்த நிறுவத்தின் வேலைவாய்ப்பும் போகும். எனவே infosysநிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் ஆடம்பரமாக வாழ்வது போல தெரியும் ஆனால் அவர்களை நம்பிப் பல லட்சம் கோடி போட்ட மக்கள் ஒருபக்கம் , அவனை நம்பி வேலை பார்க்கும் ஊழியர்கள் ஒருபக்கம் என்று இருபக்க நலனையும் கொண்டு வேலை செய்கிறான்" அவன் பிரச்சனை புரிந்து கொள்ளாமல் சும்மா அவன் பிளைட்ல பறக்குறான் என்றும் கார் வச்சுருக்கான் என்றும் பொறாமை கொள்வது எப்படிச் சரி!

-------------------------------------------------------------------------------------------------

இன்னும் சில தகவல்களைப் புரிந்து கொள்ளுங்கள்:

ரிலையன்ஸ் நிறுவனம் 1லட்சம் கோடி முதலீட்டில் தொடங்கிய நிறுவனம் jio. இதனைத் தொடங்க அவ்வளவு பெரிய முதலீட்டை அவரை நம்பிக் கொடுக்க மக்கள் இருக்கும் போது அவரைக் குறை சொல்ல ஏன் நமக்கு ஆர்வம் வருகிறது? (நீங்கள் ஏதோ அரசு கொடுத்து நிறுவனங்கள் ஆரம்பிக்கிறார்கள் என்று நினைக்கிறீரா??? அது உங்கள் தவறு இவ்வளவு பெரிய தொகையை அரசு தருவது இல்லை. இன்னும் சொல்ல போனால் அரசே பொதுத்துறை பங்குகளை விற்று இதே வழியில் மக்களிடம் பணம் வசூல் செய்து தான் நிறுவனங்கள் நடத்துகிறது. இதை எப்படி என்று பின்னால் பார்க்கலாம்.)

நீங்களும் நானும் இதே போல நிறுவனம் ஆரம்பிக்க நினைத்தால் எவன் அவ்வளவு பணத்தினை கொடுப்பான்??? ஆனால் முகேஸ் அம்பானி, பிர்லா குழுமம் , டாட்டா என்றால் நிச்சயம் நல்லவிதமாகத் தொழில் செய்யக் கூடிய புத்திசாலி என்பது அவர்கள் வரலாறு. எனவே அவரிடம் தங்கள் பணத்தைக் கொடுக்கிறார்கள் மக்கள். இதில் அவர்கள் பக்கம் என்ன தவறு ஒரு கார்ப்பரேட் முதலாளியாக?

அதுவும் ஒரே இரவில் யாரும் வர முடியாது. அவர்களை நம்பிக் கொடுக்கும் அளவுக்குத் தொழில் வளர்ச்சியின் மூலம் மக்களிடம் நம்பிக்கையைப் பெறவேண்டும். அதற்குத் தன்னை நம்பி பணம் போடும் முதலீட்டாளர்கள் லாபத்தைக் கொடுக்கவேண்டும். அவர் அனில் அம்பானி அவர்கள் முன்னர் தொட்ட நிறுவனமான ரிலையன் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான Jamnagar Refinery தினமும் 70கோடி லாபம் கிடைக்கிறது. அந்த நிறுவனத்தைக் கட்டி முடிக்க அவருக்கு மொத்த முதலீடாக தேவைப்பட்டது எவ்வளவு தெரியுமா ?? அந்த நிறுவனத்தை அவர் இன்சூரன்ஸ் மதிப்பு மட்டும் 50,000கோடி.

அந்த தொழிற்சாலை முதல்கட்ட முதலீடு மட்டும் 1.8லட்சம் கோடி. இந்த அளவு பணம் அவர் வீட்டு பீரோவில் இல்லை மக்கள் அவரை நம்பி முதலீடு செய்கிறார்கள்.

இது யாருக்கு லாபம்? அவரை நம்பி பணத்தை முதலீடு செய்த அனைவருக்கும் தானே? சரி இது முதலீட்டாளர்களுக்கு லாபம். நாட்டுக்கு? கடந்த ஆண்டு 7,827 கோடி நாட்டுக்கு வரியாகக் கட்டுகிறது Reliance Industries. அவ்வளவு பெரிய நிறுவனத்தை உருவாக்கி முகேஷ் அம்பானி அந்தத் தொழில் சாலையில் மொத்தம் 250,000 ஊழியர்கள் நேரடி வேலை வாய்ப்பும் , மறைமுகமாக 10.5லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

அதாவது
1.முதலீட்டார்களிடம் பணத்தினை வசூல் செய்யும் திறமையும் உண்டு ,
2.அதைக் கொண்டு வெற்றிகரமாகத் தொழில் தொடங்கும் புத்திசாலித்தனமும் உண்டு ,
3. அதன் மூலம் 250,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் ஒரு நிர்வாக திறமை உள்ளவர்
4.முதலீட்டாளர்களுக்கு லாபம் , நாட்டிற்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வரியும் கிடைக்கும்.

எப்படி வாய் கூசாமல் நாம் இந்த மனிதர்களைக் குறை சொல்வதே வேலையாக இருக்கிறோம்?????? சரி இந்த விசயத்தில் அவர் எப்படி வெற்றி பெற்றார்; நாமும் எப்படி தொழில் நடத்துவது? இப்படி ஏன் சிந்தனை வருவது இல்லை????? எல்லாரும் வேலை தேடினா எவன் தான் வேலைக் கொடுப்பது???? கேட்டால் அரசே எல்லாம் நடத்த வேண்டும் என்ற முட்டாள்தனமான கம்யுனிஸம் பேசுவது...

யாரைச் சொல்லி நொந்து கொள்ள நான்? என்ன மாதிரியான தொழில் எப்படி எங்கே தொடங்கலாம் என்று சிந்திக்கும் அறிவு இல்லாத ஒரு குருட்டு சமூகத்தை உருவாக்கிவிட்ட இந்தக் கல்வியாளர்களை நான் நொந்துகொள்வதா? இல்லை வேலை தேடி கார்ப்பரேட் கம்பெனி வாசலில் நின்று , அதே கார்ப்பரேட் காரன் விற்கும் jio சிம் வாங்கி புண்ணியவான் என்று சொல்லிவிட்டு அவனையே எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று புலம்பும் கூட்டம் என்றுமே அப்படியே இருக்கும் என்பதை நினைத்து நொந்து கொள்வதா?

கேட்டா இலுமினாட்டி , கம்மினாட்டினு எதையாது எவனாது சொன்னத அப்டியே உக்காந்து குழப்பவேண்டியது.
---------------------------------------------------------------------------------------------------------------
சில குற்றச்சாட்டுகளை புரிந்து கொள்ளுங்கள்:

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன கொடுத்து தள்ளுபடி செய்கிறார்கள் என்று சொல்வது எல்லாம் முட்டாள்தனம். வட்டி இல்லாமல் கடன் திரும்பச் செலுத்த சொல்லிக் கூறுவதை நான் பார்த்தது உண்டு , இல்லையா நஷ்டமாகும் நிறுவனத்தின் சொத்துகளை விற்க அது சரியாக ஏலம் போகாமல் வங்கிகளுக்கு நஷ்டம் ஆவதை நான் படித்தது உண்டு.

ஆனால் மொத்த கடனையும் 100000கோடி 20ஆயிரம் கோடி தள்ளுபடி செய்கிறார்கள் என்பது எல்லாம் எப்படி மக்கள் அதுவும் படித்தவன் நம்புகிறான் என்று எனக்குப் புரிவது இல்லை. டேய் இங்கே நீதிமன்றம் இருக்கிறது. அவர்கள் சும்மா விட்டுவிட மாட்டார்கள் ஞாபகம் இருக்கிறதா Sahara நிறுவனம்?? அவன் தான் பலவருசம் இந்திய கிரிகெட் டீமுக்கு ஸ்பான்சர், அவன் இன்றைய நிலை என்ன???? சின்ன முதலீட்டாளர்கள் விசயத்தில் தவறு செய்ய மொத்தம் தூக்கி சிறையில் வைத்துவிட்டது நீதிமன்றம். அவர் இத்தனைக்கு திறமையான நிர்வாகி ஆனால் செய்த குற்றத்தால் மொத்தமாக மதிப்பிழந்தார். இன்று எவரும் அவரை நம்பி முதலீடு செய்ய தயார் இல்லை. விஜய் மல்லையா விசயம் நாம் முன்னரே தெளிவாக விளக்கிவிட்டேன்.

இங்கே எப்படி ஆகிவிட்டது என்றால் நீதி மன்றம் ஒன்று இல்லவே இல்லை ; மக்கள் தான் நீதி கொடுக்கவேண்டும் என்ற ரீதியில் ஆகிவிட்டது.

இன்னொரு கொடுமை என்னவென்றால் ONGC , GAIL எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகிவிட்டது நம்ம நாம் தமிழர் கட்சி போராளிகளுக்கு. டேய் அறிவுகேட்டவனுகளா அது இந்திய அரசு நிறுவனம்டா.. என்னடா அநியாயம் பன்னுறேங்க. என்று சொன்னால் அதைக் காதில் வாங்காமல் அவன் இஷ்டத்துக்குக் கத்தி கத்திப் பேசி திரிகிறான்.

சலுகைகள் வழங்கவே இல்லை என்று கூறமுடியுமா ? என்றால் அப்படிக் கூறமாட்டேன்.

இந்தியா அனைத்து வாகனங்களையும் 2030க்குள் எலக்ரிக் வாகனங்களாக மாற வாகன உற்பத்தி ஆலைகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் என்னும் பொது அதற்கு ஆராட்சிகளை மேற்கொள்ள நிறுவனங்கள் உதவிசெய்யக் கேட்டு கொண்டன , அதற்கு மோடி அரசு 60%செலவினை ஏற்கத் தயார் என்று ஆதரவு தெரிவிப்பது சலுகை தான். ஆனால் அது நியாயமான சலுகை.

அதைவிட்டு விட்டு sun tv கேபிள் ஒளிபரப்புக்கு BSNL323 ISDN lines முறைகேடாகப் பயன்படுத்த அனுமதிப்பது , நிலக்கரி அல்ல நிறுவனங்களுக்குச் சலுகை என்ற பெயரில் விலை நிர்ணயம் செய்ததில் பெரும் நஷ்டத்தை உருவாக்குவது என்று அரசு சலுகை என்று கூறி பெரும் நிறுவனங்களிடம் பெரும் தொகைக்கு விலை போவது தவறு.
---------------------------------------------------------------------------------------------------------------

இறுதியாக :

நீ கையில் வைத்திருக்கும் போன்??? பேசும் நெட்வொர்க்???? உன் வீட்டில் இருக்கும் TMT கம்பி??? Facebook whatsapp???? youtube???? google??? நீ வோட்டும் கார் பைக்???? உன்னைச் சுற்றி பார் அனைத்துமே கார்ப்பரேட் தான்.... நீங்கள் முழுவதும் ஒரு விசயத்தைத் தமிழ் சினிமா கதா நாயகர்களால் தவறாக வழி நடத்தப்படுகிறீர்.. அவர்கள் உங்கள் உணர்வுகளைத் தூண்டி வியாபாரம் பார்க்கிறார்கள் அதை உணருங்கள்...

கார்ப்பரேட் எதிர்ப்பு என்று எடுத்த படத்தின் மதிப்பு 100 கோடி, கதா நாயகன் வாங்கிய சம்பளம் 20 கோடி , படம் எடுத்தவர் ஒரு கார்ப்பரேட் முதலாளி , படத்தை இயக்கியவர் சம்பளம் 10கோடி - ஆனால் பேசிய வசனம் ??? "உனக்குப் போக மீதம் இட்டிலி உன்னுடையது இல்லை அது தான் கம்யுனிஸம்".

இதை விட ஒரு கேடுகெட்ட ஏமாற்றும் வேலை ஒன்று உண்டோ????? அவர்கள் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள் எப்படி வாழ்வு வாழ்கிறார்கள் என்று கொஞ்சம் பார் அது உன் உணர்வுகளைத் தூண்டி அவர் சம்பாரித்த பணம்.... அவர்கள் அல்ல நீங்கள் தான் முட்டாள்கள்... எந்தச் செய்தி நிறுவனம் சொல் இங்கே சமூகத்திற்கு இயங்குகிறது என்று??? எல்லாமே வியாபாரம் தான்...

"பணம் சம்பாரிக்கும் இந்த பெரும் நிறுவனங்களைத் திட்டிய நாம் எத்தனைப் பேர் அவர்கள் எப்படி இவ்வளவு சம்பாரிக்கிரார்கள் என்றும் - அது போல் நாம் எப்படி சம்பாரிகளாம் என்று சிந்தித்தது உண்டா! அப்படித் தேடி இருந்தால் இந்நேரம் இங்கே பல படித்த பட்டதாரிகள் கார்ப்பரேட் வாசலில் போய் வேலை தேடமாட்டார்கள். உண்மையில் பிரச்சனை பணம் சம்பாரிப்பவனிடம் இல்லை. பணம் சம்பாரிப்பவனை பார்த்து பொறாமை கொள்பவனிடம் தான் உள்ளது".

1000 புத்தகங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட ஒரு சினிமா திரையில் ஏற்படுத்தும் தாக்கம் சமூகத்தில் அதிகம்.

ஆனால் இங்கே சினிமா என்பது முழுக்க வியாபார சிந்தனையாக மாறிவிட்ட நிலையில் எப்படி மக்கள் உணர்வுகளைத் தூண்டி ஆதாயம் அடையாளாம், சம்பாரிக்கலாம் என்று திரிவது ஒரு கேடுகெட்ட சமூகத்தை நாசம் செய்யும் செயல். திரைப்பட துறை ஒன்று போதும் இந்த நாட்டை நாசம் செய்வதற்கு என்று கூறும் அளவிற்கு விச செடியாக மாறி - மரமாக வளர்கிறது.

அம்பானி , பிர்லா , டாடா எவரும் நீங்கள் திரையில் பார்க்கும் எந்த நடிகரையும் விட அதிகம் உழைத்தவர்கள். எந்த முடிவும் கொள்ளாது கொஞ்சம் இவர்கள் வாழ்வின் தினமும் சந்திக்கும் விசயங்கள் பிரச்சனைகள் என்ன என்ன என்பதைத் தேடி புரிந்து கொள்ளுங்கள்.. அப்போது யார் உங்களுக்குச் சரியான வழிகாட்டியாக இருக்க முடியும் என்பதை உங்களால் உணரமுடியும்.

நம் நாட்டின் நிறுவனங்கள் நம் நாட்டின் சொத்துக்கள்.. நாளை நீயும் ஒரு பெரும் நிறுவனந்தை உருவாக்கினால் அதுவும் அப்படியே... தயவு கூர்ந்து பொறுமையாக நான் சொல்வதை சிந்திக்கவும்.

முதலில் கூறியதை மீண்டும் உனக்கு நியாபகபடுத்துகிறேன்

"காசு இல்லை என்றால் காதலிக்கு மட்டும் அல்ல தாய் தந்தையருக்கும் கூட நீ பாரமாவாய் இதை மனதில் கொள்".

-மாரிதாஸ்
{மீள் பதிவு}

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...