Sunday 25 November 2018

குபேர கிரிவலம் என்றால் என்ன? அ

குபேர கிரிவலம் என்றால் என்ன?

அண்ணாமலைக்கு ஆண்டுக்கு ஒருமுறை செல்வத்தின் அதிபதியான குபேரன் (சூட்சுமமாக) வருவது வழக்கம்;அப்படி அவர் வரும் நேரத்தில் அவரது தலைமையில் நாமும் அண்ணாமலை கிரிவலம் வந்தால்,அண்ணாமலையாரின் அருளும்,சித்தர்களின் ஆசியும்,குபேர சம்பத்தும் ஒன்றாகக் கிடைக்கும்;

பல நூற்றாண்டுகளாக மறைவாக இருந்த இந்த ரகசியமானது 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வாழ்ந்து வந்த ஜோதிட பேராசியர் பி.எஸ்.பி. ஐயா அவர்களால் ஜோதிட மாத இதழ்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது;

கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் நாளில் குபேரன்,வான் உலகில் இருந்து அண்ணாமலைக்கு வருகிறார்;வந்து தாம் ஸ்தாபித்த குபேரலிங்கத்திற்கு ஒரு மணி நேரம் பூஜை செய்கிறார்;பிறகு அங்கிருந்து கிரிவலம் புறப்படுகிறார்;

(தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் நாளையே தேய்பிறை சிவராத்திரி என்று நாம் பல கோடி ஆண்டுகளாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்)

இந்த வருடம் 5.12.2018 புதன்கிழமை மதியம் 12.47 முதல் 6.12.2018 வியாழக்கிழமை மதியம் 12.41 வரை அமைந்திருக்கின்றது;
 

5.12.2018 புதன்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணிக்குள்  அண்ணாமலை குபேரலிங்கத்திற்கு குபேரன் பூஜை செய்வார்;

     மாலை 5 மணி முதல் 5.30 க்குள் அங்கிருந்து கிரிவலம் புறப்படுவார்;

நாமும் 5.12.2018 புதன்கிழமை அன்று மாலை 4 மணிக்குள் குபேரலிங்கம் இருக்கும் இடத்தில் இருந்து 1 சதுர கி மீ பரப்பளவுக்குள் இருக்க வேண்டும்;அந்த ஒரு மணி நேரம் வரை  குபேரலிங்கம் இருக்கும் பகுதியில் இருந்து நமது கோரிக்கைகளை நினைத்து குபேரலிங்கத்திடம் வேண்டிக்கொள்ள வேண்டும்;மாலை 5 முதல் 5.30க்குள்  அங்கிருந்து கிரிவலம் புறப்பட வேண்டும்;

கிரிவலத்தை குபேரலிங்கத்திலேயே நிறைவு செய்ய வேண்டும்;பிறகு, அங்கிருந்து ஆட்டோ பிடித்து நமது தங்கும் விடுதிக்குச் செல்ல வேண்டும்;குபேரலிங்கத்தில் நிறைவு செய்யும் போது,இரவு 11 முதல் 12 மணி ஆகியிருக்கும்;

விடிந்ததும்,வேறு எங்கும் (உறவினர் வீடு,வேறு ஆலயங்கள்) செல்லாமல் நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்;அப்படி சென்றால் மட்டுமே குபேர கிரிவலம் சென்றமைக்கான முழுப்பலனும் நமக்குக் கிட்டும்;

ஏதாவது ஒரு காரணத்தினால் மேலே கூறிய நேரத்திற்குள் வர இயலாதவர்கள்,6.12.2018 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் குபேரலிங்கம் இருக்கும் பகுதியில் இருந்து வேண்டிக் கொள்ளலாம்;காலை 7 மணி முதல் 7.30க்குள் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12.41க்குள் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;

கடந்த 8 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை இந்த கிரிவலத்தில் கலந்து கொண்டவர்களுக்குக்கூட பலவிதமான நன்மைகள் கிடைத்திருக்கின்றன;

புதன் கிழமையாக இருப்பதால் பச்சை நிற ஆடை அணிந்து கொண்டு வருவது நன்று;

மறுநாள் வியாழக்கிழமை கிரிவலம் வருபவர்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டு வரலாம்;

மழை மற்றும் புயல் காலமாக இருப்பதால்,தகுந்த முன் ஏற்பாடுகளுடன் வருவது நன்று;

வாழ்க்கையில் சாதாரண நிலையில் இருந்தவர்களுக்கு ஒரு நிரந்தரவேலை அல்லது தொழில் அமைந்திருக்கிறது;

பலருக்கு தொழிலில் அமோக வளர்ச்சி கிடைத்திருக்கிறது;

பலர் தமது சக்திக்கு மீறிய கடன் வாங்கி பல ஆண்டுகளாக திண்டாடியிருப்பர்;அவர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் அத்தனை கடனும் தீருமளவுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது;

பூர்வ புண்ணியம் மிகுந்த ஆத்மாக்கள் வெகு சிலருக்கு குபேரனின் தரிசனமும் கிடைத்திருக்கிறது;அதனாலேயே.அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கின்றனர்;

இன்றைய கால கட்டத்தில் நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் பணம் நமக்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது;கொஞ்சம் அதிகமாகவே பணம் தேவைப்படுகிறது;

நேர்மையாளராக வாழ்ந்து வருவதாலேயே நிறைய பணம் சம்பாதிக்க முடியாமல் தவிப்பவர்கள் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்:

அவர்களுக்கு அண்ணாமலையின் ஆசி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரையை வெளியிடுகிறோம்;

ஓம் அகத்தீசாய நமஹ!
ஓம் அருணாச்சலாய நமஹ!!!

திமுக கூட்டணி

தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் போட்டி யிடும் தொகுதிகளையும், வேட்பாளர் பெயர் பட்டியலையும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தேர்வு செய்து, டில்லி மேலிடத்திற்கு அனுப்பியுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க., கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, தலா, இரு தொகுதிகளும், முஸ்லிம் லீக் கட்சிக்கு, ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்வது, ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.சமீபத்தில், ஸ்டாலினை, அவரது இல்லத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலர், சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலர், சுதாகர் ரெட்டி ஆகியோர் சந்தித்து, தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சு நடத்தி உள்ளனர்.அதேபோல், சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலினை, முஸ்லிம் லீக் தலைவர், காதர் மொகிதீன் சந்தித்து, ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து பேசியுள்ளார். ஏற்கனவே, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோவும், ஸ்டாலினும் சந்தித்து பேசியுள்ளனர்.அப் போது,வட சென்னை தொகுதியை, வைகோவுக் கும், ஈரோடு தொகுதியை, கணேச மூர்த்திக்கும் ஒதுக்குவது பற்றி பேசப்பட்டு ள்ளது.மேலும், வைகோ, மத்திய அமைச்சராகி, டில்லிக்கு
செல்ல வேண்டும் என்ற, தன்விருப்பத்தையும், ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், அறிவாலயத்தில், ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்தும், எண்ணிக்கை குறித்தும் பேசினார்.அப்போது, தி.மு.க., தரப்பில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள், வேட்பாளர் கள் பெயர்கள் குறித்து, திருநாவுக்கரசரிடம், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: திருநாவுக்கரசர், தன் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரசில் போட்டியிட விரும்புகிற முக்கிய பிரமுகர்களின் பெயர் பட்டியலுடன், அறிவாலயத் திற்கு சென்றார். அங்கு, ஸ்டாலினை சந்தித்து, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு ஒதுக்கியபடி, 15, 'சீட்' கேட்டுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின், 'காங்கிரஸ் கட்சிக்கு, எந்தந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்; எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்ற பட்டியல், ஏற்கனவே, காங்., மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.உடனே, திருநாவுக்கர சர், 'அந்த பட்டியலில் நான் இருக்கிறேனா' என, கேட்டதும், ஸ்டாலின் சிரித்தபடியே, 'நீங்களும் இருக்கிறீர்கள்; ஆனால், உங்களுக்கு, உங்கள் கட்சியில் கடும் எதிர்ப்பு இருக்கிறது' என, கூறியிருக்கிறார்.வைகோ ஜெயித்து மத்திய மந்திரியானால் திருநெல்வேலி, ராமநாதபுரம், திண்டுக்கல், கோவை, ஈரோடு மாவட்டங்களை கிருஸ்துவ தேசமாக்குவதாக சோனியாவுக்கு உறுதி அளித்துள்ளார்39 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டு ஒரே ஒரு தொகுதியில் நின்ற திமுகவும் deposit இழந்து படுதோல்வி அடைந்தது வரப்போகும் செய்தி

கிறிஸ்தவ பாதிரியார் கள்

கிறித்துவ மதத்தின் லட்சனம் இது...
இன்றுவரை ஒரு பெண் பாதிரியாராகக்கூட ஆகமுடியாது!
அப்படி கண்ணியாஸ்த்திரிகளாக வந்தவர்களையும் வேட்டையாடும் கூட்டமிது..
போதாக்குறைக்கு சிறுவர்களை சின்னாபின்னப்படுத்தும் இந்த கயவர்களை எந்த நாட்டு சட்டத்தாலும் தண்டிக்கவும் முடியாது...
ஆனால் பாருங்கள் சிலப்பதிகாரத்தில் பெண்ணடிமைத்துனத்தைப்பற்றி பேச பெருங்கூட்டத்தை கூட்டுகின்றனர்!
அடேய் 2000 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தில் பெண்ணடிமைத்தனம் தேடும் நீங்கள் இப்போது நடத்தும் பெண்கள், சிறுவர்கள் மீதான பாலியல் தாக்குதல்களை நிறுத்தர வழியைப்பாருங்கடா!

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !

1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.

2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.

3  தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.

4  தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.

5  கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.

6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே  கோட்டையூரில்    நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.

7  சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )

8  சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.

9  திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.

10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.

11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான  வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.

12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

13 ஈரோடு  காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.

14  மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.

16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.

18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது  பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.

19  தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.

20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

21  தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.

22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி  சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை        செங்குத்தாக    நிற்கிறது.

23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.

24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும்  சுடுவதில்லை.

25  சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.

26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.

27  திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில்  பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

28  ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

31 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது. 

32 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

33 திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது.

34  திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

35  சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.  அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.

36  நாகர்கோவில் கேரளபுரம்  சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.

திமுக கூட்டணி

தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் போட்டி யிடும் தொகுதிகளையும், வேட்பாளர் பெயர் பட்டியலையும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தேர்வு செய்து, டில்லி மேலிடத்திற்கு அனுப்பியுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க., கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, தலா, இரு தொகுதிகளும், முஸ்லிம் லீக் கட்சிக்கு, ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்வது, ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.சமீபத்தில், ஸ்டாலினை, அவரது இல்லத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலர், சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலர், சுதாகர் ரெட்டி ஆகியோர் சந்தித்து, தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சு நடத்தி உள்ளனர்.அதேபோல், சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலினை, முஸ்லிம் லீக் தலைவர், காதர் மொகிதீன் சந்தித்து, ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து பேசியுள்ளார். ஏற்கனவே, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோவும், ஸ்டாலினும் சந்தித்து பேசியுள்ளனர்.அப் போது,வட சென்னை தொகுதியை, வைகோவுக் கும், ஈரோடு தொகுதியை, கணேச மூர்த்திக்கும் ஒதுக்குவது பற்றி பேசப்பட்டு ள்ளது.மேலும், வைகோ, மத்திய அமைச்சராகி, டில்லிக்கு
செல்ல வேண்டும் என்ற, தன்விருப்பத்தையும், ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், அறிவாலயத்தில், ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்தும், எண்ணிக்கை குறித்தும் பேசினார்.அப்போது, தி.மு.க., தரப்பில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள், வேட்பாளர் கள் பெயர்கள் குறித்து, திருநாவுக்கரசரிடம், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: திருநாவுக்கரசர், தன் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரசில் போட்டியிட விரும்புகிற முக்கிய பிரமுகர்களின் பெயர் பட்டியலுடன், அறிவாலயத் திற்கு சென்றார். அங்கு, ஸ்டாலினை சந்தித்து, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு ஒதுக்கியபடி, 15, 'சீட்' கேட்டுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின், 'காங்கிரஸ் கட்சிக்கு, எந்தந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்; எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்ற பட்டியல், ஏற்கனவே, காங்., மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.உடனே, திருநாவுக்கர சர், 'அந்த பட்டியலில் நான் இருக்கிறேனா' என, கேட்டதும், ஸ்டாலின் சிரித்தபடியே, 'நீங்களும் இருக்கிறீர்கள்; ஆனால், உங்களுக்கு, உங்கள் கட்சியில் கடும் எதிர்ப்பு இருக்கிறது' என, கூறியிருக்கிறார்.வைகோ ஜெயித்து மத்திய மந்திரியானால் திருநெல்வேலி, ராமநாதபுரம், திண்டுக்கல், கோவை, ஈரோடு மாவட்டங்களை கிருஸ்துவ தேசமாக்குவதாக சோனியாவுக்கு உறுதி அளித்துள்ளார்39 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டு ஒரே ஒரு தொகுதியில் நின்ற திமுகவும் deposit இழந்து படுதோல்வி அடைந்தது வரப்போகும் செய்தி

திமுக வரக்கூடாது ,, வந்தால் என்ன நடக்கும்,,?

திமுக வரக்கூடாது ,, வந்தால் என்ன நடக்கும்,,?

ஒரு சின்ன ரிவியூ....

கருணாநிதியின் 2006 - 2011 வரையான கேடுகெட்ட ஆட்சி நினைவுகள் ..

இந்த அலங்கோலங்கள் ஜெயா ஆட்சியில் அறவே இல்லை .. ஏன் கடந்த 1 வருட எடப்பாடி ஆட்சியில் கூட இந்த நாட்டை சூரையாடும் கொள்ளை கும்பல் அராஜகங்கள் கிடையவே கிடையாது ...

ஏதோ திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சொர்க்கபுரி ஆகிவிடும் என்று நினைக்கும் மறதி வந்த மனிதர்களுக்கு தமிழ்நாடு நாறிவிடும் என்று நினைவூட்ட இந்த பதிவு.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஜூலை 2011 தேதிவரையிலும் 2 மாதத்தில் நில மோசடி புகார்கள் நான்காயிரத்தைத் தாண்டியது..

முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா, தான் கேட்டும் தனக்கு நிலத்தை விற்க மறுத்த கோபத்தினால் சிவபாலன் என்பவரை தனது வீட்டு முன்னால் இருந்த போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய சவுக்கால் தனது வப்பாட்டியுடன் சேர்ந்து அடித்துத் துவைத்த கதையையும் கேட்டு தமிழகமே பதறியது.

12 முதல் 18 மணி நேர மின் தடை .. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் சர்வநேரமும் பாராட்டு விழா மற்றும் திரை துறையினர் குத்தாட்ட விழாவில் முதல்வர் தவறாமல் பங்கேற்றது ஞாபகம் ..

2011ல் ஆட்சியை இழந்த உடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது நிலத்தை மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மிரட்டி வாங்கியதாக சேஷாத்ரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..

ஆரம்பத்தில் முடிந்தால் கைது செய்யுங்கள் என்று வீரம் காட்டிய ஸ்டாலின் ஒரே மாதத்தில் பணத்தை பைசல் செய்து வழக்கை வாபஸ் பெற சுமூகமாக வழக்கை தீர்த்துகொண்டார் மு.க.ஸ்டாலின்...

ஏப்ரல் 25, 2010 அன்று இந்திய தலைமை நீதிபதி பாலக்ருஷ்ணன் , போலீஸ் டி ஜி பி லத்திகா , மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி , முதர்வர் கருணாநிதி மேடைக்கு முன்பு வழக்கறிஞர்கள் திமுக ரவுடிகளால் தாக்கப்பட்டது அன்று இந்திய தலைப்பு செய்தியானது ...

வழக்கறிஞர் ஒருவரை ரவுடி ஒருவன் முழு செங்கல்லால் ஓங்கி அடிக்க முனையும் புகைப்படம் வைரல் ஆனது .. அப்போது தமிழ்நாட்டின் கருணாநிதி ஏவல் துறை தாக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் கைது செய்தது ..

அது போல பிப் 10 2009 அன்று சென்னை உயர் நீதி மன்ற எல்லைக்குள்ளே , வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் மேல் போலீசார் தாக்குதல் நீதிபதிக்கு மண்டையில் அடிப்பட்டு ரத்தம் கொட்டிய காட்சி ...

கிண்டியில் அண்ணா சாலையில் உள்ள செக்கர்ஸ் நட்சத்ர ஹோட்டலை அடித்து நொறுக்கிய சக்சேனாவும் அவரது அடியாட்களும்.

சேலத்து இளவரசர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனான பாரப்பட்டி சுரேஷ்குமார் என்பவர் ஒரு நில விவகாரத்தில் தலையிட்டு தன் பேச்சைக் கேட்கவில்லையே என்கிற ஆவேசத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புசாமி என்பவரின் குடும்பத்தில் 7 பேரை வெட்டிச் சாய்த்ததாக தி.மு.க. ஆட்சியிலேயே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அவரைக் கைது செய்தது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் எங்கெங்கோ சுற்றி கடைசியில் கருணாநிதியின் குடும்பத்தினருக்கே வந்து சேர்ந்திருக்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

அவருடைய கட்சி உறுப்பினரான ஒரு நகர மன்றத் தலைவர் பட்டப் பகலில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டிருக்கிறார். மாநிலத்தின் முதல்வரான இவருக்கு அந்தத் தகவல் மாலைவரை சொல்லப்படவில்லை. மாலையில் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்ட பின்பு ஆச்சரியத்துடன் “அப்படியா..?” என்று அவர்களிடமே திருப்பிக் கேட்கிறார் கருணாநிதி .. இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்தியவர் கருணாநிதி..

13.10.2006-இல் சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பல்வேறு இடங்களில் நடந்த வாக்குப் பதிவு மையங்களில் திமுக-வினர் நடத்திய தாக்குதல்கள் காரணமாக 100க்கும் அதிகமான வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது...

வரலாறு காணாத அராஜகம் என்று சொன்னது ..கருப்பு பேன்ட் வெள்ளை சட்டை இளைஞர் அணி ரவுடிகள் ஒவ்வொரு வாக்கு சீட்டாக கிழித்து உதயசூரியனுக்கு குத்தி சாவகாசமாக ஓட்டு போட்டது டிவியில் பார்த்து பெருமைபட்டான் தமிழன் ..

முத்துக்குமார் என்னும் வீர இளைஞன் ஈழத் தமிழர்கள் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டான்.

அந்த இளைஞனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த அதேவேளையில் தான் பெற்றெடுத்த ரவுடி மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அறிக்கை வெளியிட்ட இந்த மகா உத்தமத் தலைவனை தமிழகம் பெற்றெடுத்ததற்கு நாம் நிச்சயமாகக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

பிரபாகரன் என்னும் ஒரு தமிழரின் தாயார்.. 80 வயது மூதாட்டி. பெயர் பார்வதியம்மாள். சிகிச்சைக்காக தமிழ்நாடு வருகிறார். படுத்தப் படு்க்கையாகக் கிடக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்குள் கால் வைத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடுமாம்.. அதனால் அவரை அப்படியே திருப்பியனுப்பிவிட்டார் இந்த மனுநீதிச் சோழன்.

கிருட்டிணன் கொலை வழக்கு தள்ளுபடி ,தினகரன் ஆபீசில் மூவர் கொலை,சென்னை சட்டக்கல்லூரியில் போலீசார் கண்முன்னே சாதி சங்க மாணவர்கள் வெறியாட்டம்..

அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும்.

திரையுலகைக் கபளீகரம் செய்ய கருணாநிதியின் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் திமுகவுக்கு எதிராக திரும்பியது..

திருநெல்வேலியில் இரண்டு அமைச்சர்கள் முன்னிலையில் ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம், தர்மபுரி, சேலம், கோவை போன்ற இடங்களில் காவல் துறையினரின் துப்பாக்கிகள் களவு போன விவகாரங்கள் அனைத்தும் கடந்த திமுக அரசின் சட்டம் ஒழுங்கின் லட்சணமாகும்.

நெல்லை துணை மேயர் திமுகவைச் சேர்ந்தவர் கூஜா வெடிகுண்டு தொடர்பான சர்ச்சையில் சிக்கினார் .. போலி மருந்து வழக்கில் கைதான மீனாட்சிசுந்தரம் ஸ்டாலின் சபரீசனுக்கு வாங்கி கொடுத்த மசராட்டி கார் வெளிச்சத்துக்கு வந்தது.

சென்னை பனையூர் ஓய்வுபெற்ற கப்பல் கேப்டன் இளங்கோ, அவரது மனைவி ரமணி ஆகியோர் ஆகஸ்ட் 24-ம் 2009 தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு பல ஏக்கர் சொத்து இருந்தது ..

பொதுமக்கள் மூலம் போலீஸôரிடம் பிடிபட்ட ராஜன் (எ) சண்முகசுந்தரம் போலீஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.. இதில் திமுக அமைச்சரின் பெயர் அடிப்பட்டது ..

அனைத்து அரசுத் துறைகளிலும் வஞ்சகமில்லாமல் புகுந்து விளையாடிய உடன்பிறப்புக்களின் லஞ்ச லாவண்யம்.. கட்சிக்காரர்களின் அடிதடி, மிரட்டல்,. கட்டப் பஞ்சாயத்து.. அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்களின் சொத்துக் குவிப்புகள்.. அத்தனை துறைகளிலும் தனது குடும்பத்தினரின் ஆதிக்கம்.. திரும்பிய பக்கமெல்லாம் தனது வாரிசுகளின் அராஜகச் செயல்கள்..” என்று அப்பாவி மக்களின் கூக்குரல்கள்..

ஆனால் இதெல்லாம் கருணாநிதி காதுகளை எட்டவில்லை... பொட்டு சுரேஷ் , அட்டாக் பாண்டி போன்ற ஈன கொலைகார அக்க்யூஸ்ட்டுளிடம் போலிஸ் டிஐஜி போன்ற IPS அதிகாரிகள் கை கட்டி வேலை செய்த வரலாற்றை நாடு கண்டது .. ...

திமுக ஆட்சியில் கிளை செயலாளர் கூட சுமோவில் பறந்து காவல் நிலையத்தில் புகுந்து அராஜகம் செய்த செய்திகள் வந்தனவே ...

இந்த ஆட்சியில் அப்படி கூற முடியுமா ?
மலை ராஜா என்கிற திமுக MLA நெல்லை பல்கலை கழக துணை வேந்தரை அனைவர் முன்பும் பளார் என்று அறைந்தார் . அராஜக ஆட்சியில் .அவமானத்தில் துணை வேந்தர் ராஜினாமா செய்தாரே ... 2 ஏக்கர் நிலம் என்று மயக்கி பட்டை நாமம் போட்டார் ...

இப்போது யார் கிடைப்பார் , தலையில் மிளகாய் அரைத்து முதுகில் ஏறி சவாரி செய்யலாம் என்று ஏங்கி தவிக்கிறார் .. ....

கருணாநிதியோ மாதத்தில் 20 நாட்கள், தான் பார்த்த வேலைக்காக, பாராட்டு விழாக்களை தானே ஏற்பாடு செய்து ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக.. தன்னைப் பற்றிய பாராட்டுக் கவிதைகளை ஏகாந்தமாக ரசித்துக் கொண்டிருந்தார்.

ஊழல் செய்தார்கள்.. கொள்ளையடித்தார்கள்.. கொலை செய்தார்கள்.. அராஜகம் நடத்தினார்கள் . அதைவிட அதற்குப் பின்பு காவல்துறையில் புகார் கொடுக்க வந்தவர்களிடமிருந்து புகார்களைக்கூட வாங்க மாட்டோம் என்று காவல்துறையே மறுத்திருக்கிறது என்றால், கருணாநிதியின் நிர்வாக லட்சணத்தை இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்...படித்ததில் பிடித்தது plz  forward at least one Whatsap group

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...