Saturday 22 December 2018

மோடி..! என்ற மந்திர சொல்..!! நித்தமும் சொல்லாத..!!! மனிதனே இல்லை......!!

மோடி..!
என்ற மந்திர சொல்..!!
நித்தமும் சொல்லாத..!!!
மனிதனே இல்லை......!!!!

என்ன மனுஷன்யா நீ...
2001 லேர்ந்து... இன்று வரை...

உன்னை நினைத்தாலே
நம்பிக்கை கூடுகிறது...

உன் பெயர் சொன்னாலே
உடலில் அதிர்வலைகள்...

2001 ல உலகமே... அதனை மீடியாவும் அதனை எதிர் கட்சிகள்....
உண்மையை மறைத்து பேசின...

நீயோ...பொறுமையாய் எல்லாவற்றையும் ஒற்றை ஆளாய் சந்தித்தாய்...

2003இல் வாஜ்பாய் அரசு வந்த/இருந்த பொழுது... நீ குஜராத்தில் கொடி ஏற்றினாய்... பின்பு... எத்தனை பிரச்சனைகள்... எத்தனை சட்ட கேள்விகள்...

எத்தனை போலி வழக்குகள்... எல்லாவற்றையும் சட்டரீதியாக சந்தித்தாய்...

மத்திய பிஜேபியிடம் கையேந்தி நிற்காமல் தனி ஒருவனாய்....

பிறகு குஜராத் மக்கள் உன்னை புரிந்துகொண்டார்கள்... பிறகு மூன்று முறை... தொடர்ந்து மூன்று முறை...

குவார்ட்டர் கோழி பிரியாணி 2,000 ஓவா என்று இல்லாமல் இலவசம் விலையில்லா என்று இங்கே இருக்கும் தீரா விடங்கள் வார்த்தை ஜாலத்தில் இருந்த பொழுது நீ...நீ செய்த வளர்ச்சி பணிகளை சொல்லி ஆட்சி கேட்டாய்

அவர்கள் என்ன தனி குணம் உள்ள தமிழர்களா!!! பிச்சைக்காரர்களா...?? உனக்கே வாக்களித்து.. ஆட்சி பீடத்தில் அமர்த்தி அழகு பார்த்தார்கள்...

உன் சேவை இந்தியாவுக்கு தேவை என்றபொழுது மறு பேச்சு இல்லாமல் ஏற்று கொண்டாய்... மோடி அலையில் பேடிகள் காணாமல் போனவர்கள்... 21 மாநிலம்.... உன் ஆட்சி....

இன்றும் மீடியா உன்னை எவ்வளவு தூற்றினாலும்... எதற்கும் பதில் சொல்லாமல்.. கிருஷ்ணன் சொன்னது போல்... கடமையை செய்... என்று கர்மாவை நோக்கி..... ஈசன் உன்னை இதற்கு தான் படைத்தானோ...

ஆளுமை, பொறுமை, கையாளுதல், பேச்சு திறமை, இன்னும் உன்னைசொல்ல... எப்படி சொல்ல....

மோடி என்னும் மந்திர சொல்... உன்மீது உள்ள அபரித்த பாசத்தில் ஒருமையில் அழைக்கிறேன்...

2019இல் உனக்காக மேடையேறி ஒருமுறையேனும் பேசணும்... என் ஆசை... ஈசன் வழி தரணும்....

மோடி..!
என்ற மந்திர சொல்..!!
நித்தமும் சொல்லாத..!!!
மனிதனே இல்லை......!!!!

NEW DELHI: The Railways' fastest train - 

Train 18

, which is scheduled to be flagged off by Prime Minister 

Narendra Modi

 on December 29, was pelted with stones on Thursday during a trial run between Delhi and Agra, a senior official said.

இது மிக முக்கியமான கட்டுரை தயவு செய்து முழுவதும் படித்து ஏற்புடையதாய் இருந்தால் பகிருங்கள் -

இது மிக முக்கியமான கட்டுரை தயவு செய்து முழுவதும் படித்து ஏற்புடையதாய் இருந்தால் பகிருங்கள் -

மோடியை ஏன் - இந்தியாவுல இருக்கற அத்துனை எதிர்க்கட்சிகளும் -
திரைத்துறையினரும், வியாபாரிகளும், தொழில் அதிபர்களும், மிக முக்கியமாக மிஷனரிகளும், எதிர்க்கிறார்கள் -

இவர்களோடு சேர்ந்து பொதுமக்களும் கூட தமிழகத்தில் எதிர்க்கத் தூண்டப்படுகிறார்கள் -

ஒரு ஆட்சியாளன் மீது மக்கள் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுப்பது அவர் நமக்கு நன்மைகள் செய்யப்போகிறவர் என்பதற்காகவே -

சில நேரங்களில் புதிதாக வந்த ஒரு அரசு - மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கும் பொழுது பொதுமக்களுக்கு சில சிரமங்கள் ஏற்படுவது உண்மை தான் -

நாட்டின் எதிர்கால நன்மை கருதி அவற்றை நாம் ஏற்று கொள்ள வேண்டும் -

புரையோடிப் போன வியாதிகளைக் குணப்படுத்த சில கசப்பு மருந்துகளை உட்கொண்டு தான் ஆக வேண்டும் -

அது போன்ற ஒரு நடவடிக்கை தான் -
பணமதிப்பிழப்பு நடவடிக்கை -

முதலில் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் -

நாட்டை தொடர்ந்து ஆள விரும்பும் - எந்தக் கட்சியும் 125 கோடி மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நினைக்காது -

கஷ்டப்படுத்தினால் வாக்குகள் கிடைக்காது என்றே எண்ணும் -

ஆனால், மோடி அப்படி ஆட்சி செய்தால் மட்டும் போதும் - என்று எண்ணுபவர் அல்ல -

அதனால்தான் இந்த கடுமையான சீர்திருத்த நடவடிக்கையை மேற்க்கொண்டார் -

இதனால் பொதுமக்களில் சிலர் பாதிக்கப்பட்டிருந்தாலும் -
மிக அதிகமாக பாதிக்கப்பட்டது -

இந்த லஞ்சம், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும்,
தொழில் அதிபர்களும் -
திரைத்துறையினரும் _
மிஷனரிகளும் தான் -

மோடி நினைத்திருந்தால் இந்த நடவடிக்கையை எடுக்காமல் இருந்து இவர்களின் எதிர்ப்புகள் இல்லாமல் இருந்திருக்கலாம் -

அவர் செய்தது நமக்காகத்தான் - மக்களுக்காக தான்

இந்தியாவில் கள்ள நோட்டுகள் பற்றிய புள்ளிவிவரங்களை ஓட்டுக்கு பயந்து காங்கிரஸ் அரசு கண்டு கொள்ளவே இல்லை

50, வருடங்களுக்கும் மேலாக சந்தைகளில் கள்ள நோட்டுக்களின் ஆதிக்கம் பெருமளவில் இருந்து வந்துள்ளது -

பசும்பொன் தேவர் அவர்கள் -
----------------------------------------------------
1957-லேயே பசும்பொன் தேவர் அவர்கள் -
அரசாங்கம் 500 கோடிகள் அச்சிட்டால் கள்ளநோட்டு அச்சிடுபவர்கள் 500 கோடிகளை அச்சிடுவதாக மேடையில் பேசி இருக்கிறார் -

பாகிஸ்தான் திவால்
--------------------------------------
அதிலும், பாக்கிஸ்தான் நம் நாட்டில் புழக்கத்தில், விட்டிருக்கும் கள்ள நோட்டுக்களை கண்டறியவே முடியாது அவ்வளவு துல்லியமாக இருக்கும் -

நாம் பண மதிப்பிழப்பு எடுக்கும் போது பாகிஸ்தானில் 7 .5 லட்சம் கோடி கள்ள நோட்டு அச்சிட பட்டு இருந்ததாம் ,, இந்த கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் பரிமாற்றம் செய்தால் அவர்களுக்கு கிடைக்கும் தொகை 3 .5 லட்சம் கோடி லாபம் ,,,

எந்த ஏற்றுமதியும் பண்ணாமல், உழைக்காமல் இவ்வளவு வருமானத்தை பாகிஸ்தான் வெறும் பேப்பர் செலவிலேயே ஈட்டி வந்தது,, அதனால் தான் இவ்வளவு நாளும் அதன் கதை ஓடியது ,, தீவிரவாதிகளுக்கு அள்ளி அள்ளி கொடுத்தது ,, ஆனால் இப்போது திவால் ஆகி பணத்திற்கு அலைகிறது ,,

இந்த பல லட்சம் கோடிகள் மோடியின் நடவடிக்கையினால் அழிந்தே போய்விட்டன இதுதான் உண்மை -

அதே போலத்தான் GST-யும் -
----------------------------------------------------
இதுவரை நாட்டில் இருந்த பல வகையான வரிகளை ஒழித்து விட்டு ஒரே வரியாகக் கொண்டு வந்துள்ளார் -

அதுவும் முன்பிருந்த வரிகளை விட குறைவாக -

இதற்க்கு முன் 6 வகையான வரிகள் இருந்தன , ஒரு வியாபாரி ஒரு வரியை கட்டுவார். 5 வரியை மறைப்பார் , இதுதான் இவ்வளவு நாளும் நடந்தது. ஆனால் இப்போது ஒரே வரி, கட்டித்தான் ஆக வேண்டும் என்றவுடன் கோபம் வருகிறது ,,,,

ஆனால், இதற்குமுன் நம்மிடம் வரியைப் பெற்றுக் கொண்டு அதை அரசாங்கத்திற்கு செலுத்தாத (நம்பர் 2 பில்கள் மூலம்) வியாபாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும் தான் இழப்பு -

இனிமேல் ஒழுங்காக கட்டியாக வேண்டும் என்பதால் - பதுக்கி வைத்து விலையை ஏற்ற முடியாது என்பதால் - அவர்களும் சேர்ந்து மோடியை எதிர்க்கிறார்கள் -

உதாரணம் சிதம்பரம் மகன்,,
-------------------------------------------------------
விடியோகான் நிறுவனத்தின் சரக்கு ஏற்றி இறக்கும் உரிமையை சிதம்பரம் மகன் பெற்றிருந்தார்..காஸ்மீரில் இருந்து தமிழ் நாடு வரை விடியோகான் நிறுவனத்தில் எந்த சரக்கு ஏற்றினாலும் சிதம்பரம் மகன் ஏஜென்சி மூலமாக தான் செல்லும் ,,

அரசு கணக்கு படி ஒரு பொருளுக்கு ஒரு சீரியல் நம்பர் தான் ,, அதற்க்கு வரி கட்ட வேண்டும்,, ஆனால் அந்த நிறுவனத்தில் ஒரு சீரியல் நம்பரில் 1 லட்சம் பொருள்கள் உற்பத்தி பண்ணுவார்கள் .. ஒரு சீரியல் நம்பருக்கு வரி கட்டி விட்டு மீதியை வரி
கட்டாமல் விற்பார்கள் ,,பிரச்னை வந்தால் கார்த்திக் சிதம்பரம் பார்த்து கொள்வார் ,, இப்படித்தான் அரசை ஏமாற்றினார்கள் ..

ஆனால் இப்போது GST வந்த பிறகு அந்த கம்பெனி மூடப்பட்டது,, இனி காங்கிரஸ் ஆட்சி வந்தால் திறப்பார்கள் ,, இது தான் தொழில் அதிபர்கள் மோடியை எதிர்க்க காரணம் ,,

பினாமி கம்பெனிகள் என்றால் என்ன ,
------------------------------------------------------------------------
அதே போல் 230000 பினாமி கம்பெனிகள் ரத்து செய்யபட்டன,,, ஒரு தொழில் அதிபர் அரசாங்கத்தை மறைத்து 20 கம்பெனிகள் உருவாக்கி செயல் படுத்தி வருவார் ,, தன் வேலைக்காரன் , டிரைவர் பெயர்களில் பல நுறு கம்பெனிகள் உருவாக்கி அதை கோடிக்கணக்கான ரூபாய்க்கு வர்த்தகம் செய்து அரசை ஏமாற்றி வருவார்கள் ,, இந்த ஆதார் எண் இணைப்பு மூலம் அனைத்தும் வெளியே வந்து விட்டது,,

இதுவும் சாதாரன பொது மக்களுக்காக அவர் மேற்க்கொண்ட சீர்திருத்தம் தான் -

ஆனால், இதற்கு முன் எந்தவித வரியும் இல்லாதது போலவும், மோடி வந்து புதிதாக GST - வரியை தினித்தது போலவும் பொய்களைப் பரப்புகிறார்கள் -

இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைதான் ஆதார் எண் இனைப்பும் -

இதன் மூலம் பல லட்சக்கணக்கான போலிகள் கண்டறியப்பட்டுள்ளன. -

புள்ளி விவரங்கள் பல இருக்கின்றன -

ஒன்றே ஒன்று இதுவரை 1,30,000 போலி ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பெயரில் சில ஆயிரம் கோடிகளை கேடிகள் இதுவரை மோசடியாக பெற்று வந்துள்ளனர் -

ஆதார், இனைப்பின் மூலமே இது சாத்தியம் ஆயிற்று -

இன்று போலியாக ஒரு சிம் கார்டு கூட பெற முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளார் -

இவையெல்லாமே நாட்டின் வளர்ச்சிக்காகவும் சாமானிய மக்களின் நலனுக்காகவும் அவர் செய்த செயல்கள் -

மூன்று முறை முதல்வராகவும், நான்கு ஆண்டுகள் பிரதமராகவும் இருந்தும் -
ஒற்றை ரூபாய் கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் இருப்பவர் இவர் மட்டும்தான் -

ஆனால், இங்கே தமிழ்நாட்டில் -
லட்சக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்த கூட்டங்கள் ஒன்று சேர்ந்து அவரை எதிர்க்கின்றனர் -

ஆனால், சாதாரன மக்களாகிய நாம்தான் இந்த நேரத்தில் அவரை ஆதரிக்க வேண்டும் -

இவர் போன்ற ஒரு தலைவனை இனிமேல் பெறமுடியாமல் போகலாம் -

தயவுசெய்து போலியான செய்திகளையும், திருடர்களின் பொய்யான பிரச்சாரங்களையும் நம்பி ஒரு நல்ல தலைவனை இழந்து விடாதீர்கள்-

நல்லது செய்தால் நம் மக்களுக்குப் பிடிக்காது என்ற எண்ணத்தை உருவாக்கி விடாதீர்கள்

ஏன் மோடி மீண்டும் வேண்டும் தெரிகிறதா?

*ஏன் மோடி மீண்டும் வேண்டும்?-

அனில் மிஸ்ரா என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் , மத்திய அரசிடம் ஒரே ஒரு கேள்விக்கு விடை கேட்கிறார்:

‘ மோடி தன் அலுவலகத்தில், உணவுக்காகவும், பானங்களுக்காகவும் இது வரை செலவழித்த தொகை என்ன?’

பதில் வருகிறது: “0”

‘மோடி அலுவலகத்தில் இருக்கும்போது உண்பதுமில்லை; பருகுவதுமில்லை.

எப்போதாவது , தன் சொந்த செலவில், டீ வரவழைத்துப் பருகுவார்.’ ‘சொந்த செலவில்’ என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

மோடியின் சம்பளமே தர்ம ஸ்தாபனங்களுக்குத் தான் அனுப்பப் படுகிறதாம். அவர் நெருங்கிய சுற்றத்தார் இன்றும் கீழ்த்தட்டு மத்தியதர மக்களாகவே வசித்து வருகின்றனர்.

நேரு காலம் தொட்டு , இது வரை , லால் பகதூர் சாஸ்திரி, ராஜேந்திரப் பிரஸாத், மோடி ஆகிய மூவரே, அரசுப் பணத்தில் சாப்பிடாமல் இருந்துள்ளனர். மற்றவர்கள் அரசு செலவில், கோடிக் கணக்கில் உணவுக்காகவும், பானத்துக்காகவும் செலவழித்துள்ளனர்.

ஏ ராசா, தயாநிதி மாறன், பி சிதம்பரம், டி ஆர் பாலு போன்றோர் மந்திரிகளாக இருந்த போது, தங்கள் அலுவலகத்தில், சாப்பாட்டுக்காகவும், பானங்களுக்காகவும் எவ்வளவு செலவழித்துள்ளனர் என்று தகவல் அறியும் சட்டத்தில் கேட்டுப் பாருங்கள். மயக்கம் அடைந்து விழுந்து விடுவீர்கள். இவர்களா மக்கள் தொண்டர்கள்?

ஓர் அரசியல்வாதிக்கு மன சுத்தமும், கை சுத்தமும் வேண்டும். நம்மிடை இப்போது இரண்டும் உள்ள ஒரே மகாத்மா, மோடி தான்.

மற்றவர்கள் நம் பணத்தை சாப்பிட்டே-அதற்குக் கணக்குக் காண்பித்தே-அழித்து விடுவார்கள்.

ஏன் மோடி மீண்டும் வேண்டும் தெரிகிறதா?

*மோடி2019*

திமுக காங்கிரஸ் கூட்டணியைய் கிழித்து தொங்க விட்ட

திமுக காங்கிரஸ் கூட்டணியைய்  கிழித்து தொங்க விட்ட திரு ஓமபுலியூரார் அவர்கள்...

https://youtu.be/F-g3qvhmpYk

தமிழகத்திற்கு 200-க்கும் மேற்பட்ட டையலைசிஸ் இயந்திரங்கள் : மருத்துவர் தமிழிசை பெருமிதம் -

பிரதமரின் தேசிய டையலைசிஸ் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 200-க்கும் மேற்பட்ட டையலைசிஸ் இயந்திரங்கள் : மருத்துவர் தமிழிசை பெருமிதம் -  கதிர் #Dialysis #NationalDialysis

http://www.kathirnews.com/2018/12/15/200-dialysis-equipment-for-tn-says-tamilisai/

இன்னொரு மோடி பிறந்துவர எத்தனை நூற்றாண்டுகளாகுமோ யாருக்குத் தெரியும்?

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி அடைந்த பின்னடைவு பெரியதொன்றுமில்லை என நிரூபிக்கும் புள்ளிவிவரங்களைப் பார்க்கிறேன்.  புள்ளி விவரங்கள் பொய் சொல்வதில்லை என்கிற வகையில் அது நல்லதுவே.

ஆனால் என்னுடைய எண்ணம் அதற்கு நேர்மாறானது. பா.ஜ. கட்சியின் இந்தத் தோல்வி சாதாரணமான ஒன்றல்ல என்பதே என்னுடைய கருத்து. எனவே அதனைக் குறித்து உள்ளது உள்ளபடி கொஞ்சம் ஆராயலாம். Shall we?

First of all, it is a morale booster for the Congress Party. மோடி என்கிற சுனாமியால் அடித்துத் துரத்தப்பட்டு எங்கோ ஒரு அதலபாதாளத்தில் கிடந்த காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றியை காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டனாலேயே நம்ப முடியாததொரு விஷயம். ‘காங்கிரஸ் முக்த் பாரத்’ படைக்கும் எண்ணமுடைய மோடி/அமித்ஷாவின் மீதான சம்மட்டி அடி இது. இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் ஊட்டியிருக்கிறது. Let us admit.

இரண்டாவது, காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள். ஒவ்வொரு தொகுதியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் பெற்ற வாக்குகளுக்கும், பாரதிய ஜனதாக் கட்சி பெற்ற வாக்குகளுக்கும் உள்ள மிகச் சிறிய வித்தியாசத்தை மட்டுமே புள்ளிவிபரங்கள் திரும்பத் திரும்பச் சொல்கின்றன. அது உண்மைதான்.

அதேசமயம், இதற்கு முன்னர் அதே தொகுதியில் பாரதிய ஜனதாக் கட்சி பெற்ற வாக்குகளிலிருந்து எத்தனை சதவீதம் குறைந்திருக்கிறது அல்லது காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் அதிகரித்திருக்கிறது என்கிற விவரங்களை அதிகம் காண முடிவதில்லை. எதனால் அப்படி நடந்தது என்று ஆராய்வது மிக முக்கியமேயன்றி சப்பைக்கட்டுகள் கட்டுவதால் ஆவதொன்றுமில்லை.

மூன்றாவது, தேர்தல் செலவுகளுக்குப் பணமின்றித் தவித்துக் கொண்டிருந்த காங்கிரஸிற்கு இனி அந்தக் கவலையில்லை. ஏனென்றால் கர்நாடகா, இராஜஸ்தான், மத்தியபிரதேசம் போன்ற மூன்று பெரிய மாநிலங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் கணிசமானது. எனவே அங்கிருந்து சுருட்டும் பணம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்க காங்கிரசுக்கு உதவிகரமாக இருக்கும். இதுவும் சாதாரண விஷயமில்லை.

நான்காவது, பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்கள் மட்டுமே இருக்கையில் காங்கிரஸ் தனது ஓட்டுக்களைத் தக்கவைத்துக் கொள்ள பணத்தை வாறி இறைக்கத் தயங்கவே தயங்காது. விவசாயக் கடனை ரத்து செய்வது, வேலையில்லாப் பட்டதாரிக்குப் பணம் தருவதிலிருந்து சாப்பாட்டை ஊட்டிவிடுவது, கால் கழுவிவிடுவது வரைக்கும் காங்கிரஸ்காரர்கள் செய்யத் தயாராக இருப்பார்கள்.

இது நிச்சயமாக பாரதிய ஜனதாக் கட்சியின் வாக்கு வங்கியில் பெரும் ஓட்டையிடும். இதன் பாதிப்பு அருகிலிருக்கும் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

ஐந்தாவது, காங்கிரஸ் கட்சியின் மீதான ஊழல் வழக்குகள் தேங்கிப் போகும். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒருவேளை மோடி தோற்றால் காங்கிரஸ் கட்சிக்காரன் தன் மீது நடவடிக்கை எடுப்பான் என்கிற அச்சமே ஊழல் குற்றச் சாட்டுக்களை விசாரிக்கும் அதிகாரிகள் மத்தியில் குளிர் ஜுரத்தை ஏற்படுத்தும்.

அபிஷேக் மனு சங்வி போன்ற காங்கிரஸ் உத்தமர்கள் ஏற்கனவே இதற்கான எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறார்கள். எனவே எந்த அதிகாரியும் துணிந்து சோனியாவின் மீதோ அல்லது ராவுல் வின்ஸியின் மீதோ அல்லது ராபர்ட் வதேராவின் அல்லது ப.சிதம்பரம், மன்மோகன்சிங் போன்றவர்கள் மீதோ சுமத்தப்பட்ட ஊழல் குற்றத்சாட்டுகளின் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது சந்தேகம்தான்.

இதுபோல் இன்னும் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நான் சொல்லவருவதனை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

காங்கிரசுக்கும், அதன் களவாணிகளுக்கும், முக்கியமாக தாவூத் இப்ராஹிம் போன்ற ஹவாலா ஆசாமிகளுக்கும் அதையெல்லாம் விட பாகிஸ்தானுக்கும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் ஒரு வாழ்வா, சாவா என்கிற போராட்டம். இந்தத் தேர்தலில் மீண்டும் மோடி ஜெயித்து வந்தால் மேற்படியாளர்கள் அடையவிருக்கும் நஷ்டம் அளவில்லாதது.

கள்ள நோட்டடித்தும், ஹவாலா பணத்தை வைத்தும் இதுவரை தாக்குப் பிடித்துவந்த பாகிஸ்தான் மோடியின் டிமானிடைசேஷனினால் ஏறக்குறைய திவாலாகும் நிலைக்கு வந்திருக்கிறது. மோடியின் வெற்றி பாகிஸ்தானைச் சிதறடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த தேர்தலில் மோடி வென்றால் கண்டெய்னர்களிலும், ரகசிய இடங்களிலும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுக்களைத் தூக்கியெறிவதனைத் தவிர காங்கிரசிற்கும், ஹவாலா பேர்வழிகளுக்கும், தி.மு.க. போன்ற கட்சிக்காரர்களுக்கும் வேறு வழியில்லை. எனவே எப்பாடு பட்டேனும் மோடி ஜெயிப்பதனைத் தடுக்கவே முயல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அந்தக் கட்சி இயற்றும் முதல் சட்டமே செல்லாத பழைய நோட்டுக்கள் மீண்டும் செல்லும் என்பதாகத்தான் இருக்கும் என உறுதிபடச் சொல்கிறேன். Mark my words.  அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் பல லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவெங்கும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

மோடி செய்த மிகப் பெரும் தவறு அருண் ஜெயிட்லி போன்றவர்களின் பேச்சைக் கேட்டு காங்கிரஸ் களவாணிகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததுதான் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயம். ஒரு குறைந்தபட்ச நடவடிக்கை கூட அவர்கள் மீது இதுவரை எடுக்காதது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் கசப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேசமயம் மோடி தன்னால் இயன்றதைச் செய்தார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.  ஊழல்வாதிகளால் நிறைந்த சுப்ரீம் கோர்ட் போடும் முட்டுக்கட்டைகள் ஒருபுறம். அருகிலேயே இருக்கும் ஊழல்வாதிகள், திறமையற்ற அதிகாரிகள் இன்னொருபுறம். இவர்களை வைத்துக் கொண்டு மோடியால் இதைவிட என்ன செய்திருக்க முடியும்?

தேர்தலில் தோற்றால் மோடி துண்டை உதறி தோளில் போட்டுப் போய்க்கொண்டே இருப்பார். அவர் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இந்தியா என்கிற ஏழைதேசம் இழப்பது அதிகமாயிருக்கும். இன்னொரு மோடி பிறந்துவர எத்தனை நூற்றாண்டுகளாகுமோ யாருக்குத் தெரியும்?

நமது மூடத்தனத்தால், சுயநலத்தால் வாராது வந்த மாமணியைத் தோற்போமோ? It’s Trillion Dollar question.

மோடி என்கிற தனி மனிதனை எதிர்க்க இத்தனை பேர் ஒன்றாக இணைந்திருக்கின்றார்கள்...


https://www.facebook.com/groups/1802075443422233/permalink/1942144282748681/

#மோடி என்கிற தனி மனிதனை எதிர்க்க
இத்தனை பேர் ஒன்றாக இணைந்திருக்கின்றார்கள்...

இதில் ஒருவனாவது தேசபக்தன் எனும் சொல்லுக்கு அருகதை உண்டா என்பதை கூறுங்கள்????

ஆங்கிலேயர்களின் புத்தாண்டை நாம் கொண்டாடலாமா.???!!

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1856608014461583/

இந்தியர்களை அடிமை படுத்தி, நாயைவிட கேவலமாக நடத்திய,
ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் படுகொலை நிகழ்த்திய,
வ.வு.சிதம்பரத்தை மாடு இழுக்கும் செக்கை இழுக்க வைத்த,
தொழு நோயாளியின் உடல் உறுப்புகளை
சுப்பிரமணிய சிவாவின் வாயில் வைத்து தினித்து தொழு நோய் வரவழைத்த,
நம் மொழியை, கடவுளை, கலாச்சாரத்தை மறக்கடிக்கும் மதம் மாற்றத்தை செய்த,
தேசபக்தியே இல்லாமல் வளரும் மெக்காலே என்னும் கல்வி திட்டத்தை நம்மீது தினித்த,
மாணவர்கள் தங்கள் தலை முடியை கூட (ஸ்பைக்) ஒழுங்காக சீவி வாரிகொள்ள தெரியாமல் அலைய வைத்த,
நம் குழந்தைகளின் பிறந்த நாளை  விளக்கை ஊதி, கேக்கை வெட்டி கொண்டாட வைத்த,
பாரத நாடு முழுக்க பலர் தங்கள் குடும்பங்களையே பலிக்கொடுத்து வாங்கிய சுதந்திரத்தை
நாங்கள் இன்னும் உங்களுக்கு அடிமைதான் என்று
டிச - 31அன்று நடு இரவு குடித்து விட்டு ஆப்பி நியூயியர் என்று கத்தும் மாணாக்கர்களை உருவாக்கிய,
அறிவியல் பூர்வமான சூரியன், சந்திரனை வைத்துக் கொண்டாடும் நம்முடைய புத்தாண்டை பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரிவிக்காத கல்வியாளர்களை உருவாக்கிய,
பரங்கியர்களின் புத்தாண்டான

ஆங்கிலேயர்களின் புத்தாண்டை நாம் கொண்டாடலாமா.???!!

ஆங்கிலேயர்களின் புத்தாண்டை நாம் கொண்டாடலாமா.???!!

https://www.facebook.com/groups/1318351861620537/permalink/1856608014461583/

இந்தியர்களை அடிமை படுத்தி, நாயைவிட கேவலமாக நடத்திய,
ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் படுகொலை நிகழ்த்திய,
வ.வு.சிதம்பரத்தை மாடு இழுக்கும் செக்கை இழுக்க வைத்த,
தொழு நோயாளியின் உடல் உறுப்புகளை
சுப்பிரமணிய சிவாவின் வாயில் வைத்து தினித்து தொழு நோய் வரவழைத்த,
நம் மொழியை, கடவுளை, கலாச்சாரத்தை மறக்கடிக்கும் மதம் மாற்றத்தை செய்த,
தேசபக்தியே இல்லாமல் வளரும் மெக்காலே என்னும் கல்வி திட்டத்தை நம்மீது தினித்த,
மாணவர்கள் தங்கள் தலை முடியை கூட (ஸ்பைக்) ஒழுங்காக சீவி வாரிகொள்ள தெரியாமல் அலைய வைத்த,
நம் குழந்தைகளின் பிறந்த நாளை  விளக்கை ஊதி, கேக்கை வெட்டி கொண்டாட வைத்த,
பாரத நாடு முழுக்க பலர் தங்கள் குடும்பங்களையே பலிக்கொடுத்து வாங்கிய சுதந்திரத்தை
நாங்கள் இன்னும் உங்களுக்கு அடிமைதான் என்று
டிச - 31அன்று நடு இரவு குடித்து விட்டு ஆப்பி நியூயியர் என்று கத்தும் மாணாக்கர்களை உருவாக்கிய,
அறிவியல் பூர்வமான சூரியன், சந்திரனை வைத்துக் கொண்டாடும் நம்முடைய புத்தாண்டை பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரிவிக்காத கல்வியாளர்களை உருவாக்கிய,
பரங்கியர்களின் புத்தாண்டான

ஆங்கிலேயர்களின் புத்தாண்டை நாம் கொண்டாடலாமா.???!!

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...