Thursday 28 March 2019

Microsoft CEO Satya Nadella praises PM Modi's record on ease ..  Read more at: https://m.timesofindia.com/tech-news/Microsoft-CEO-Satya-Nadella-praises-PM-Modis-record-on-ease-of-doing-business/articleshow/49681313.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

https://www.facebook.com/groups/1700782293271895/permalink/2677267442290037/

12 REASONS TO ELECT MODI AS PRIME MINISTER

https://timesofindia.indiatimes.com/blogs/mentor-counsel-coach/12-reasons-why-mr-modi-will-be-pm-again-in-2019/

12 REASONS TO ELECT MODI AS PRIME MINISTER

https://timesofindia.indiatimes.com/blogs/mentor-counsel-coach/12-reasons-why-mr-modi-will-be-pm-again-in-2019/

இமயமலையில் நடக்கும் ஒரு இமாலய சாதனை 卐

卐 இமயமலையில் நடக்கும் ஒரு இமாலய சாதனை 卐

மோடி அரசு  இமயமலையில் தேவபூமியான ரிஷி கேசில் இருந்து பத்ரிநாத் வரை மலைகளை குடைந்து சுமார் 900 கிலோ மீட்டர் தூரத்திற்கு பூகம்பங்களையும் தாங்கும் வகையில் அமைக்க போகும் இரு வழி சாலைகள் தான் மிக முக்கியமானது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் இந்துக்கள் மேற்கொள்ளும் சார்தாம் யாத்திரையை ஊக்குவிக்க ரிசிகேசில் இருந்து இந்தியாவின் கடைசி கிராமமான மானா வரைக்கும் அனைத்து சீதோசன நிலைகளையும் தாங்கும் வண்ணம் சுமார் தொள்ளாயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழி சாலைகளை பன்னிரெண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ளனர். மூன்று வருடங்களுக்கு முன் உத்தரகாண்ட்டில் பெய்த கனமழையினால் வெள்ளம் வந்த பொழுது இந்தசார் தாம் யாத்திரைக்கு வந்த பக்தர்கள் ஐந்தாயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் நிலச்சரிவில் சிக்கி இறந்து போனார்கள் அல்லவா. அந்த நிலை மீண்டும் வரக்கூடாது என்று மோடி அரசு நினைத்து அதற்க்கான செயல் திட்டங்களில் இறங்கியது.

இதற்காக பதிமூன்று பைபாஸ் ரோடுகளை மறு சீரமைத்து இரண்டு சுரங்கப்பாதைகளை அமைத்து இருபத்தஞ்சு பாலங்களை உருவாக்கி மூன்று மேம்பாலங்களை கட்டி நூற்றி ஐம்பது நான்கு பஸ் நிறுத்தங்களை ஏற்படுத்தி மக்களின் யாத்திரை பயணத்தை பாதுகாப்பாக்கி இமயமலை எங்கும் பதினோராயிரம் அடி உயரத்தில் ஹர ஹர மகாதேவா என்கிற மனித உயிரின் ஆத்ம ஒலியை ஒலிக்க இருக்கிறது மோடி அரசு.  ஏழு பகுதிகளாக நடைபெறும் இந்த வேலை இன்னும் மூன்று ஆண்டுகளில் முடிந்து விடும்.

இந்துக்களின் புண்ணிய பூமி தனுஸ் கோடியில் புயலினால் அழிந்து ஐம்பத்தியிரண்டு வருடங்களுக்கு பிறகு மோடி ஆட்சியில் தான் ரோடு போடப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நான்கு வழி சாலை திட்டம் இந்த வருடம் தான் ஆரம்பிக்கப்பட்டு பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்டது.

இதெல்லாம் விட உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்படுத்தப் போகும் பேரிடரிலும் அழியாத இரு வழிச்சாலை அது தாங்க மோடி அரசின் மாஸ்டர் பீஸ் என்று சொன்னால் மிகையாது. கடும் பனி சூழ்ந்த மலைகளை குடைந்து சுரங்கம் உருவாக்கி மேம்பாலம் கட்டி அதுவும் பூகம்பம் நிகழ வாய்ப்புள்ள பகுதியான அங்கே பத்தாயிரம் அடி உயரத்தில் அனைத்து பேரிடர்களையும் தாங்கக்கூடிய இரு வழி சாலைகளை அமைக்க இருப்பது சாமானிய வேலையா? சொல்லுங்கள்.

இந்த இமயமலையில் இந்துக்கள் மேற் கொள்ளும் சார் தாம் யாத்திரை மிக புகழ் பெற்றது. இந்த சோட்டா சார் தாம் யாத்திரை உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைத் தொடரில் உள்ள யமுனோத்ரி கங்கோத்ரி,கேதார் நாத்,பத்ரிநாத் என்ற நான்கு புண்ணிய ஸ்தலங்களுக்கு பயணம் செய்வதையே உத்தரகாண்ட் யாத்திரை அல்லது சோட்டா சார்தாம் யாத்திரை என்று சொல்கிறார்கள். இந்துக்களின் மிக முக்கியமான யாத்திரை சார்தாம் யாத்திரையாகும். இந்த சார்தாம் யாத்திரை யில் இரண்டு உள்ளது. ஒன்று தெற்கே ராமனாதரையும் மேற்கே துவாரக நாதரையும் வடக்கே பத்ரிநாதரையும் கிழக்கே ஜெகனாதரையும் ஒரே நேரத்தில் சென்று தரிசிப்பதே சார்தாம் யாத்திரையாகும். இந்த யாத்திரையை ஓவ்வொரு இந்துவும் தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும் என்று இந்து தர்மம் சொல்கிறது. இது தான் பெரிய சார்தாம் யாத்திரையாகும். இதே மாதிரி வட இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் ஒரு சார் தாம் யாத்திரை உண்டு இதற்கு பெயர் சோட்டா சார்தாம் யாத்திரை யாகும். இந்த யாத்திரையில் ஆதி சங்கரர் சுமார் ஆயிரத்தி எட்டுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே சென்றுள்ளார்.

இந்த சார்தாம் யாத்திரையில் முதலில் உள்ள யமுனோத்ரி கோயில் யமுனை நதி உற்பத்தியாகி வரும் இடத்தில் உள்ளது. இந்த யமுனை நதியில் தான் கண்ணன் பால பருவத்தில் தனது லீலைகளை செய்து மகிழ்ந்தான். கண்ணனின் பாதம் பட்டு புண்ணியம் அடைந்த யமுனை ஆறு அந்த கிருஷ்ணனின் நிறமான கருப்பு வண்ணமாகவே உள்ளாள். கடலில் நேராக கலக்காத புண்ணிய நதி யமுனை நதியாகும். யமுனோத்ரி ஆலயம் கடல் மட்டத்திலிருந்து மூவாரத்தி இருநூத்தி தொன்னுத்தி மூன்று மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

அடுத்து கங்கோத்ரி கடல் மட்டத்தில் இருந்து மூவாயிரத்தி நானுத்தி பதினைந்து மீட்டர்உயரத்தில் அமைந்துள்ளது. கங்கோத்ரி கோயில் தான் கங்கை பூவுலகை முதலில் தொட்ட இடம். இந்த கோயில் பகீரதன் காலை ஊன்றி கங்கையை பூமிக்கு வர வேண்டி தவம் செய்த இடத்தில் தான் அமைந்துள் ளது. இங்கு தான் பாண்டவர்கள் அசுவமேதயாகம் செய்ததாக கங்கோத்ரி வரலாறு சொல்கிறது.

அடுத்து கேதார்நாத் ஆலயம் திருஞானசம்பந்தராலும், சுந்தரராலும் தேவாரபதிகம் பாடப்பட்ட தலம் இது. அத்தோடு பாரததேச மெங்கும் அமைந்துள்ள பன்னிரண்டு ஜோதி ர் லிங்கங்களுள் ஒன்று இந்த கேதாரீஸ்வரர் தான். கடல் மட்டத்திலிருந்து மூவாயிரத்து ஐநூத்தி ஐம்பத்தி மூன்று மீட்டர் உயரத்தில் பனி மூடிய சிகரங்களுக்கு நடுவில் மந்தாங்கினி ஆற்றின் உற்பத்தி ஸ்தானத்தில் ருத்ர இமய மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு தான் ஆதிசங்கரர் தன்னுடைய உடலை விட்டு ஆத்மாவை மட்டும் எடுத்து சென்று பரமேஸ்வரனை தரிசித்து பஞ்ச லிங்கத்தை வாங்கி வந்த இடம் உள்ளது. பரசு ராமர் வழிபட்ட தலம் இது.

அடுத்து கடல் மட்டத்திலிருந்து மூவாயிரத்து நூறூ மீட்டர் உயரத்தில் நரநாராயண சிகரங்களுக்கிடையில் அலக்நந்தா ஆற்றின் வலக்கரையில் பத்ரிநாத் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நூத்தி எட்டு திவ்யதேசங்களுள் பத்ரிநாத்தும் ஒன்று இங்கே ஆதி சங்கரருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு தான் வியாசர் குகை விநாயகர் மகாபாரதம் வடித்தது போன்ற இந்து தர்மத்தின் ஆதார சம்பவங்கள்அரங்கேறிய இடங்கள் உள்ளது.

இப்படி இந்துக்களின் வாழ்வில் புண்ணியம் சேர்க்கும் இந்த இடங்களுக்கு மே மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை தான் மக்கள் யாத்திரை செல்வார்கள். ஒருவருட யாத்திரியில் குறைந்தது முப்பது லட்சத்திற்கும் மேலாக மக்கள் சென்று கொண்டிருக்கும் இந்த புனித யாத்திரையை மேம்படுத்துவதே ஒரு உன்னதமான அரசின் நோக்கமாக இருக்க முடியும். இதை தான் மோடி அரசு செய்து வருகிறது.
படித்ததில் பிடித்தது.

ராகுல் எங்கு நின்றாலும் அவரை எதிர்த்து ஸ்மிரிதி ஈரானி போட்டியிருகிறாரா?

ராகுல் எங்கு நின்றாலும் அவரை எதிர்த்து ஸ்மிரிதி ஈரானி போட்டியிருகிறாரா? ஏன் இப்போதைய பிஜேபி வாஜ்பேயி காலத்து பிஜேபி அல்ல?

அமேதியிலே தோற்றுவிடுவோம் என பயந்து பப்பு ராகுல் கான் கேரளாவிலே வயநாட்டிலே போட்டியிடலாம் என செய்தி வந்ததவும் பிஜேபி அங்கேயும் ஸ்மிரிதி இரானியை நிறுத்துவோம் என மறைமுகமாக சொல்லியுள்ளது.

இது ஒரு மிகப்பெரும் மாற்றம். அமேதியிலே ராகுலுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவது என்பதே பெரும் மாற்றமாக 2014 இல் இருந்தது. இப்போது அதற்கு ஒரு படி மேலாக போய் எங்கு நின்றாலும் எதிர்ப்பு உண்டு என சொல்கிறது பிஜேபி.

வாஜ்பேயி காலத்திலே எப்படி இருந்தது? அமேதியிலும் ரே பரேலியிலும் எந்த கட்சியுமே வேட்பாளர்களை நிறுத்தாது. அப்படியே நிறுத்தினாலும் மொக்கையாக யாரையேனும் நிறுத்துவார்கள். இதனால் பல லட்சம் ஓட்டுவித்தியாசத்திலே கான் காந்திகள் ஜெயித்துவந்தார்கள்.

2014 இல் மோடியும் அமீத்ஷாவும் இதை மாற்றி ஸ்மிரிதி இரானியை வேட்பாளராக்கினார்கள். கடும் பிரச்சாரமும் செய்தார்கள். முன்பு பல லட்சம் ஓட்டுவித்தியாசம், தொகுதி பக்கமே வராம இருந்தது என்றெல்லாம் போய் எல்லா வேட்பாளர்களையும் போல் ஓட்டு எண்ணும் போது கூட இருந்து பார்த்தும் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்திலே தான் ஜெயிக்க முடிந்தது.

அதன் பின்பும் தொடர்ந்து தொகுதிக்கு போனார் இரானி அவர்கள். சமீபத்திலே துப்பாக்கி தொழிற்சாலையை தொடங்கி வைத்தார் மோடி. இதிலே என்ன சிறப்பு என்றால் அந்த துப்பாக்கி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியது ராகுல் கான் 2007 இல். அதுக்கப்புறம் அது அப்படியே கிடந்து மோடி வந்து கட்டி முடிச்சு திறந்து வைத்தார்.

இப்போ எத்தினி லட்சம் ஓட்டு வித்தியாசத்திலே தோற்போம் என தெரியாததால் இங்கே ஒரு நல்ல தொகுதி பார்க்கவேண்டிய சூழ்நிலை. அதுவும் ராஜஸ்தான், கர்நாடகா, மேற்குவங்கம் என எங்கேயும் வெற்றி பெறக்கூடிய உறுதியான இடம் இல்லாததால் இங்கே வரவேண்டியிருக்கிறது.

யோசிச்சு பாருங்க? 70 வருடம் நாட்டை ஆண்ட கட்சி, கொள்ளுத்தாத்தாவிலே இருந்து பாட்டி, அப்பா, என மூன்று பேர் பிரதமராக இருந்தவர்கள். அம்மா மறைமுக பிரதமராக இருந்தவர். அந்த தொகுதியிலே இவர்கள் குடும்பம் தான் 1980 இல் இருந்து இன்று வரை வென்றது. 40 வருடமாக ஒன்றுமே செய்யாமல் அரச குடும்பம் போல தொகுதியை வைத்திருக்கிறார்கள்.

இதற்கு எல்லா கட்சிகளும் துணை போயிருக்கிறது. அப்போதைய பிஜேபி உட்பட.

இப்போ அதெல்லாம் முடியாது. எங்க நின்னாலும் எதிராக வேட்பாளரை நிறுத்துவோம் என பிஜேபி சொல்கிறது என்றால்

எவ்வளவு மாறியிருக்கிறது என பாருங்கள்?

ஏன் வாஜ்பேயியை ரொம்ப நல்லவர் என இவிங்க எல்லோரும் சொல்றாங்க ஏன் மோடியை எதிர்க்கிறார்கள் என பார்த்தால் இது தான் காரணம்.

அரசியல் என்பதை சும்மா பொழுது போக்குக்கு செய்யாமல் தேசப்பணியாக வாழ்வா சாவா போராட்டமாக செய்வது தான் மோடியின் புதிய பிஜேபி, புதிய இந்தியா.

இதிலே இன்னோன்றும் இருக்கிறது.

அது மோடிக்கு எதிராக ராஹூல் என இவர்கள் நிறுத்த முயலும் போது

ஸ்மிரிதி இரானிக்கு எதிராக ராஹுல் என பிஜேபி செய்து காட்டிவிட்டது.

ஸ்மிரிதி இரானியையே எதிர்த்து ஜெயிக்க முடியாத ராஹூலா, ஸ்மிரிதி இரானி கூட போட்டியிட பயப்படும் ராஹுலா மோடிக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள் என பிஜேபி கேட்கிறது?

மோடி மோடி என கூவிக்கொண்டிருந்த ராஹூல் இப்போது ஸ்மிரிதி ஸ்மிரிதி எனவும் கூவவேண்டும்.

சரி அப்படீன்னா மோடிக்கு எதிராகவும் கான்கிரஸ் இதை செய்திருக்கலாமே என நீங்கள் கேட்கலாம்.

செய்திருக்கலாம் தான். யார் தடுத்தார்கள்? வாரணாசிக்கு போய் வாக்காளர்களை பார்த்திருக்கலாம், அவர்களை குறைகளை கேட்டிருக்கலாம். ஆட்சியிலே இல்லை என்றாலும் அதை பற்றீ பேசியிருக்கலாம் பாராளுமன்றத்திலே குரல் கொடுத்திருக்கலாம்

லாம் லாம் தான். இதை செய்ய வாரணாசிக்கு ஏன் போகவேண்டும்? முதலிலே அமேதியிலும் ரேபரேலியிலும் செய்திருக்கலாமே?

அங்கு செய்திருந்தால் இந்த அவமானமே நேர்ந்திருக்காதே? ஒழுங்கா நாட்டை ஆண்டிருந்தால் வேலை செஞ்சிருந்தால் மக்களை மதித்திருந்தால் இப்படி மானங்கெட்டு நிற்கவேண்டியதில்லையே? 

இது அடுத்த கிட்டிபிடி.

மோடிக்கு எதிராகவும் வேட்பாளரை நிறுத்தமுடியவில்லை.
ராஹுலுக்கு எதிராக நிறுத்தபட்ட வேட்பாளரையும் சமாளிக்க முடியவில்லை.

முடிஞ்சதா சோலி?

சரி தோத்து தான் போயிருவோம் அப்படீனாலும் கமுக்கமாக பிரச்சாரம் செஞ்சிருக்கலாம். வெளியே சொல்லாம.

இப்போ வெளிப்படையா சொன்னதாலே தேர்தல் தோல்வியை இப்பவே ஒப்புக்கொள்ளும்படி ஆகிவிட்டது.

ஏன் இப்படி நடந்துக்கறாங்கன்னா இதை வாஜ்பேயின் பிஜேபி என நினைச்சு

மோடி திரும்பவும் இந்தியா ஒளிர்கிறது என பிரச்சாரம் பண்ணுவார் முன்னே பண்ணியது மாதிரி அடிச்சிடலாம் என இருந்தாங்க. அதனாலே தான் கூட்டணிக்கு கூட அவசரம் காட்டல. எப்படியும் வறுமையை காரணம் காட்டி மோடியின் பிரச்சாரத்தை அமுக்கிடலாம் என இருந்தாங்க.

ஆனா இது புதிய இந்தியா, புதிய பிஜேபி, புதிய திட்டங்கள்.

மோடி எங்க அடிச்சா வலிக்குமோ அங்க அடிச்சிட்டார். இப்ப என்ன பண்ணுறது?

பார்ப்போம். எப்படியும் நாலஞ்சு நாளிலே தெரிஞ்சிட போகுது யார் எங்கே போட்டியிட போறாங்க அப்படீன்னு.

வாட்ஸ்அப்பில் சுட்டது

அன்பான ஹிந்து சொந்தங்களே. வணக்கம்.

அன்பான ஹிந்து சொந்தங்களே. வணக்கம்.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதுவரை, ஹிந்து கோவில்களோ அல்லது ஹிந்து குருக்களோ, ஹிந்துக்கள் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று சொன்னதில்லை.

ஆனால்...

இந்த தேர்தலில் ஹிந்துக்கள் வோட்டு மிக முக்கியமானது. ஏனென்றால், சில வருடங்களாக ஹிந்து எதிர்ப்பு சக்திகள் மிக தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக, ஹிந்துக்கள் ஆகிய நாம் எந்தெந்த கட்சி ஹிந்துக்களுக்கு விரோதமானது  என்பதை  தெரிந்து கொள்ள வேண்டும். அண்மையில் நடந்த சில கட்சிகளின் ஹிந்து விரோத செயல்களை பார்ப்போம்.

🚩 தி மு க தலைவர் ஸ்டாலின், ஹிந்து திருமணங்களையும் சம்பிரதாயங்களையும் கேலி செய்து விமர்சித்து  ஒரு மாற்று மதத் திருமணத்தில் பேசியிருக்கிறார். கனிமொழி திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை கேலி செய்து பேசி இருக்கிறார். அது மட்டும் அல்ல. கலைஞர் இருந்த வரையில் அவர் அதிக அளவு ஹிந்து விரோத பேச்சுக்களை தான் பேசிவந்தார். தவிர தி கவின் சொல்படிதான் தி மு க நடந்து கொண்டிருக்கிறது.

🚩Congress - DMK ஆட்சியில் இருந்த போது ராம சேதுவை அழிக்க திட்டமிட்டார்கள். அப்பொழுது, "ராமன் ஒரு குடிகாரன். ராமன் எந்த Engineering கல்லூரியில் படித்தான் ?" என்று கருணாநிதி கேள்வி கேட்டார்.

🚩இஸ்லாமிய தீவிரவாதத்தால் நாம் பல இந்திய உயிர்களை பறிகொடுத்திருக்கிறோம். ஆனால், விடுதலை சிறுத்தை கட்சி போன்றவர்கள் சனாதன தீவிரவாதம் என்று மாநாடு நடத்துகிறார்கள்.

🚩காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பொழுது ப.சிதம்பரம் காவி தீவிரவாதம் என்ற வார்த்தையை நிறுவினார்.

🚩சென்ற வருடம் நமது தாய் ஆண்டாளை தி மு க நட்புடைய வைரமுத்து தாசி என கூறினார். ஆனால், பா.ஜ.க தவிர வேறு கட்சியும் அந்த கருத்திற்கு எதிர்ப்பு  தெரிவிக்கவில்லை.

🚩ஐயப்பன்  கோவில் விவகாரத்திலும் பா.ஜ.க தவிர வேறு எவரும் எதிர்ப்பு  தெரிவிக்கவில்லை. சீமான் போன்றவர்கள் ஐயப்பனையே விமர்சித்தது பேசினார்கள்.

🚩லயோலா கல்லூரியில் ஹிந்து அவமதிப்பு ஓவியங்கள் வைத்து நமது மதத்தை இழிவு படுத்திய போதும் யாரும் வாய் திறக்கவில்லை. சிலர் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

🚩திரிபுவனம் ராமலிங்கம் காலையில் இஸ்லாமிய மத மாற்றத்தை தடுத்தார். மாலை அவர் கைகள் வெட்டப்பட்டு  கொல்லப்பட்டார். எந்த மீடியாவும் விவாதம் செய்யவில்லை. திருமாவளவன், இந்த கொலையை செய்தது ஹிந்துக்கள் என்கிறார்.

🚩மோகன் சி லாசரஸ் என்கிற கிறிஸ்துவ போதகர், ஹிந்து கடவுள்களை சாத்தன் என்றும், ஹிந்து கோவில்களை சாத்தானின் இருப்பிடம் என்றும் கூறுகிறான். ஆனால் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு பல பல ஹிந்து விரோதப் பேச்சுக்களும், செயல்களும் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் எவ்வளவு நாட்கள் ஹிந்துக்கள் இவை எல்லாம் சகித்தது கொள்ள வேண்டும். நம் பொறுமைக்கும் அளவு உண்டு. நமது கோபத்தை அறவழியில் காட்ட வேண்டும். அதற்கு, ஹிந்துக்களாகிய நாம் அனைவரும் ஒரு உறுதிமொழி எடுக்க வேண்டும்.

"வரும் தேர்தலில் ஹிந்துவாகிய நான், எனது மதத்தை ஏளன படுத்தும் கட்சிக்கும் அவர்களது கூட்டணிக்கும் நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் வாக்களிக்க மாட்டோம்."

இவ்வாறு நாம் ஹிந்துக்கள் ஒரு முறை DMK, Congress, VCK, NTK etc போன்ற ஹிந்து எதிர்ப்பு கட்சிகளுக்கு வோட்டு போடாமல் இருந்தால் போதும். அவர்கள் வாக்குக்காகவாவது ஹிந்து விரோத செயல்களில் ஈடுபட மாட்ட்டார்கள்.

இந்த விண்ணப்பம் ஹிந்து மதத்தை வளர்பதுக்காக இல்லை. காப்பதற்காக. இந்த ஹிந்து விரோதிகளிடம் ஆட்சி சென்றால், நமது கோவில்களையும் ஹிந்து கலாச்சாரத்தையும் அழித்து, நமது வருங்கால சந்ததியினர் ஹிந்து மதத்தை கடைபிடிக்காத அளவுக்கு செய்துவிடுவார்கள்.

யோசியுங்கள். சிந்தித்து வாக்களியுங்கள்.
ஹிந்து தருமத்தை காதித்திடுங்கள்.

பாரத்மாதா கிஜே..!

.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...