Friday 22 March 2019

15 மில்லியன் (ஒன்றரைக் கோடி) பேர் வேலை வாய்ப்புக்கள் பெற்றிருக்கிறார்கள். ஆதாரம் இதோ

திமுக கூட்டணியைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் "மோடி ஆட்சியில் இத்தனை ஆயிரம் வேலைகள் பறி போயின" என்று தினமும் தொலைக்காட்சி விவாதங்களில் சொல்லி வருகிறார்கள்
.
ஆனால் உண்மை என்ன?

15 மில்லியன் (ஒன்றரைக் கோடி)  பேர் வேலை வாய்ப்புக்கள் பெற்றிருக்கிறார்கள்.

என்ன ஆதாரம்?

பி.எப் ( EPFO)   ESI ஆகிய நிறுவனங்களில் எத்தனை பேர் புதிதாக உறுப்பினர்களாகச் சேருகிறார்கள் என்பதன்  அடிப்படையில் இந்த எண்ணிக்கையை கண்டறிந்திருக்கிறார்கள்.

அரசு விதிகளின்படி எல்லா நிறுவனங்களும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தங்களிடம் புதிதாகப் பணியில் சேருவோரின் எண்ணிக்கையை  EPFO விடம் தெரிவிக்க வேண்டும் 

அதே போல GST கணக்குகள் தாக்கல் செய்யும் போது  அந்த நிறுவனத்தில் எத்தனை நிரந்தரப் பணியாளர்கள் இருக்கிறார்கள், எத்தனை பேர் ஒப்பந்தப் பணியாளர்கள் என்ற விவரம் தெரிவிக்கப்பட வேண்டும் (இது 2018 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது)

எனவே புதிதாக வேலை பெற்றவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை இவற்றின் மூலம் அறியமுடியும். இந்தத் தகவல்கள் நிறுவனங்களிடமிருந்து வருவதால் தவறாக இருக்க முடியாது. This is a verifylable data

இப்போதுதான் இந்த முறை முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டு கணக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முறையில் தயாரிக்கப்பட்ட Towards Payroll reporting in India  என்ற அறிக்கை 2018 நிதி ஆண்டில் மட்டும் 3.68 மில்லியன் (36.8 லட்சம்) வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது

இதை முடிந்தவரை பகிருங்கள்.

#மாலன்

மோடி அரசின் நல்ல திட்டங்கள்

நண்பர் Sasi Kumar அவர்கள் பதிவு.

'தூய்மை இந்தியா' திட்டத்தின் மூலம் 8 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது..

'தீன்தயாள் உபாத்யாயா கிராம ஜோதி திட்டத்தின்' கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 464 கிராமங்கள் 100 சதவீதம் மின்சாரம் பெற்றுள்ளன..

'உன்னத் ஜோதி'திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் 35.83 கோடிக்கும் மேற்பட்ட LED பல்புகள் வினியோகம் செய்யப்பட்டு மின்சார விரயம் குறைக்கப்பட்டுள்ளது..

'சுரக்‌ஷா காப்பீடு திட்டம்' மூலம் வெறும் ரூ.12 மட்டும் பிரீமியமாக செலுத்தி ரூ.2 லட்சம் பெறக்கூடிய காப்பீட்டில் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து உள்ளன..

'ஆயுஷ்மான் பாரம்' உலகின் மாபெரும் சுகாதார காப்பீடு திட்டமாகும். 5 லட்சம் காப்பீட்டில் 50 கோடி மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டம்..

'இந்திரதனுஷ் திட்டத்தின்' மூலம் 4 கோடிக்கும் அதிகமான குழந்தை மற்றும்  கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்து (Vaccine) அளிக்கப்பட்டுள்ளது..

'சுரக்‌ஷித் மாத்ரிதவா அபியான் திட்டம்' கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 9-ஆம் தேதி தரமான மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.

'உஜ்வாலா திட்டத்தின்' மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ்யுள்ள 3.5 கோடி குடும்பங்கள் இலவச கேஸ் இணைப்பு பெற்றுள்ளனர்..

'முத்ரா திட்டத்தின்' மூலம் 12 கோடி சிறு தொழில் முனைவோருக்கு 6 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது.. முத்ரா திட்டத்தின் 50 % பயனாளிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..

திறன் இந்தியா' திட்டத்தின் கீழ் 2 கோடி இளைஞர்கள் திறன் மேற்பாட்டு பயிற்சி பெற்றுள்ளனர்..

'ஆவாஸ் யோஜனா திட்டத்தின்' மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்ற 1 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்ட உதவி..

'சுகன்யா சம்ரிதி' என்ற செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 1.30 கோடிக்கு மேல் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு
கடந்த நவம்பர் மாதம் வரை சுமார் ரூ.20,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது..

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் செயல்படுத்தப்படும் 104 மாவட்டங்களில் பெண் பிறப்பு விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது..

'பயிர் காப்பீடுத்திட்டத்தின்' மூலம் மிக குறைந்த பிரிமியத்தில் விவசாயிகள் முழுமையான பாதுகாப்பு பெற்றுள்ளனர்.
கரீப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக உற்பத்தி விலையின் 1.5 மடங்கு பெறுதல்.12.5 கோடிக்கு மேலான மண்வள அட்டைகள் விநியோகிக்கப் பட்டுள்ளது..

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 29 % அதிகரித்துள்ளது..

கருப்புப்பணம் மற்றும் வரி ஏய்ப்புச் சட்டம் 2015 ல் நிறைவேற்றப்பட்டு அயல் நாட்டில் பதுக்கப்பட்ட கருப்புப்பணத்தின் மதிப்புக்கு இணையான சொத்தினை கைப்பற்ற அனுமதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

மொரீசியஸ், சைப்ரஸ், சிங்கப்பூருடன் இரட்டை வரிவதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம். சுவிட்சர்லாந்துடன் பகிருடன் உண்மை கால தகவல் மீதான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது..

பினாமி சொத்து சட்டம், கருப்பு பணம் மற்றும் வரிவிதிப்பு சட்டம், வருவாயை தாமாக முன்வந்து தெரிவிக்கும் சட்டம் போன்றவைகள் அறிமுகம் செய்யப்பட்டு வெற்றியும் பெற்றுயுள்ளது..

'விளையாடு இந்தியாவின்' கீழ் திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் வருடாந்திர நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலான மருந்துகளுக்கு அரசே அதிகபட்சவிலை இவ்வளவுதான் என்று நிர்ணயம் செய்து விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.. நேரடியாக 'பிரதமர்மந்திரி மருந்துக்கடைகள்' மூலம் மருந்துகள் விலை மேலும் குறைக்கப் பட்டுள்ளது.

மூட்டு மாற்று சிகிச்சைகள் மற்றும் இதய ஸ்டன்ட்கள், 50-70 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது.

இந்தியாவின் யோகா கலை உலகளவில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் ஏறத்தாழ 1.69 லட்சம் கிலோமீட்டர் ஊரக சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை கட்டமைக்கும் வேகம் முந்தைய அரசில் இருந்த ஒரு நாளைக்கு 12 கி.மீ என்பது ஒரு நாளைக்கு 27 கி.மீ ராக உயர்ந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் 5469 ஆளில்லா ரயில் கடவுப்பாதைகள் நீக்கப்பட்டு. பெரும்பாலான பகுதிகள் அகலப்பாதையாக மாற்றப்பட்டு வலைத்தொடர்புடன் வடகிழக்கு பகுதிகள் முற்றிலும் இணைக்கப்பட்டள்ளது.

பணவீக்கம் 36 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 60.08 பில்லியன் டாலராக உயர்ந்தது.

நில வணிகம் ஒழுங்கு முறை சட்டம் (தஉதஅ) மூலம் வீடு வாங்குவோரின் உரிமைகள் மற்றும் முதலீடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளது.

எளிதாக வர்த்தகம் செய்யும் நாடுகள் தரவரிசையில் இந்தியாவின் தரவரிசை 142 என்பதிலிருந்து 100 உயர்ந்தது.

கணவனை இழந்த ஆதரவு இல்லாத பெண்களுக்காக நாட்டின் முக்கிய பகுதிகளில் தனியாக தங்கும்விடுதிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

SC, ST பிரிவினருக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.95 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

சிறுபான்மையினர் நலனுக்கான ஒதுக்கீடு 62 % அதிகரிக்கப்பட்டு 4 ஆயிரத்து 700 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பெண்களுக்கு 'அதிகாரம்' அளிக்கும் வகையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.

பிரதமரின் முதியோர் பாதுகாப்பு திட்டத்துக்கான ஓய்வூதிய முதலீட்டு வரம்பு ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் 92 மருத்துவ கல்லூரிகள் (46 அரசு மற்றும் 46 தனியார்) அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 646 பட்ட மேற்படிப்பு இடங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் இருந்து சுமார் 87லட்சம் போலி கார்டுகள் நீக்கம். இதன் மூலம் அரசுக்குத் தினமும் 87கோடி இழப்பு சரி செய்யப்பட்டுள்ளது..

நாட்டின் இன்றைய மிம்சார உற்பத்தித் திறன் : 344,002 மெகா வாட்.. மன்மோகன் அரசு விட்டுச்செல்லும்போது வெறும் 199,877 மெகா வாட் தான். (லின்கேஜ் பாதையை முறைப்படுத்தி ஆண்டுக்கு 3000 கோடி இழப்பும் சரி செய்யப் பட்டுள்ளது)

மன்மோகன் சிங் அரசு விட்டுச்செல்லும் போது 1.6 billion units ஆக இருந்த சோலார் உற்பத்தி.. இன்று 25.90 billion unit ஆக உயர்ந்துள்ளது..

பாஸ்போர்ட் பெற எளிய நடைமுறை மற்றும் 58 நாடுகளுக்குச் செல்ல விசா தேவை இல்லை. உலகத்தில் passport index இந்தியாவின் கடவுச்சீட்டு ரேங்க் 74 (henleypassport ரேங்க் 81) மோடி பல நாடுகளுக்கு பறந்து பறந்து வேலை செய்ததால் வந்த வரவுகளில் ஒன்று..

எல்லை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 209 கோடி அனுமதிக்கப்பட்டு எல்லை பகுதியில் 246 கி.மீ க்கு வேலி - 566 கி.மீ தூரத்துக்கு எல்லை சாலைகள் - 785 கி.மீ க்கு பேரொளி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

எல்லையில் வன்முறை சம்பவங்கள் 36.6 சதவீதம் குறைந்துள்ளது.

ரூ.2 லட்சம் கோடி செலவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் மேம்படுத்தப் படுகின்றன.

ரூ.5,35,000 கோடிக்கு மேலான மதிப்பில் நாடு முழுவதையும் இணைக்கும் பாரத் மாலா திட்டம்..

பனிரெண்டு வயதுக்கு குறைவான சிறுமியர் கற்பழிப்புக்கு மரண தண்டனை.. பதினாறு வயதுக்கு குறைவான சிறுமியர் கற்பழிப்புக்கு குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது..

முக்கியமாக இவை அனைத்தும் Aadhar திட்ட இணைப்பு மூலம் உண்மையான பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்கப் பட்டுள்ளது..

ராஜராஜ சோழனிடம் நான் வியந்தது

ராஜராஜ சோழனிடம் நான் வியந்தது

1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
.
ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985–1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம்.பொருளாதாரம்,கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.
.
தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு
தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை.
அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்.இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல அதை விட மிக கடினமான மற்ற துறைகளை பற்றியது.
.
தஞ்சை பெரிய கோவில் தன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில்.கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை.
சுடு செங்கல் இல்லை பூராங்கல் இல்லை மொத்தமும் நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே (சிற்பங்கள் மற்றும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உட்பட அனைத்திலும் க்ரானைட் கற்கள்தான்).
.
1,30,000ton இடையுள்ள கற்களை கொண்டு கோவில் எழுப்ப வேண்டும் என்றால் கோவில் அஸ்திவாரம் எந்த அளவுக்கு பலமாக இருக்கவேண்டும்,அதேபோல் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கூர்நுனி வெற்று விமானம் (HollowTower , அதாங்க கர்ப்பக்கிரகத்துல இருந்து பார்த்தா விமானம் உச்சி தெரியும்) .விமானத்தின் உச்சியில் 80ton (ரொம்பலாம் இல்ல just 72574.779kg தாங்க) இடையுள்ள கலசத்தை ஏற்ற வேண்டும்,இது போக விமானத்தின் மேல் 8 நந்தி சிலைகள் வேறு. கட்டிடக்கலையின் உச்சபட்ச அறிவு இல்லாமல் இது சாத்தியம் ஆயிருக்காது.
.
1000 வருடங்களுக்கு முன் தஞ்சை கோவில் கட்டும்பொது அது தான் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் கொண்ட கோவில். விமானம் முழுக்க கிரனைட் கற்களை சிற்பமாக செதுக்க வேண்டும்,மேற்கூறிய 80ton காலசத்தை வேறு ஏற்ற வேண்டும் என்றால் மிக பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள், இது போக எவ்வளவு கயிறு,மரக்கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும் , இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைபட்டு இருக்கும்.
.
தஞ்சை பெரிய கோவிலை கட்ட 7 வருடம் ஆனது என்று வரலாறு சொல்கிறது.கோவிலை ஒரு லட்சத்திற்குக்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் காட்டியுள்ளனர்,கைதிகள் மட்டும் இல்லை மக்களின் உதவியும் கூட.
.
கைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம்,சற்று யோசித்து பாருங்கள்,இன்றைய நிலமையில் டெல்லி நகரில் ஒரு லட்சம் பாகிஸ்தான் கைதிகளை வைத்து ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால், நம் மிலிட்டரி எவ்வளவு கட்டுகோப்பாக இருக்க வேண்டும், நம் பாதுகாப்பு எவ்வளவு நேர்த்தியாக இருக்கவேண்டும்.ஒரு நிமிடம் அசந்தாலும் நாட்டின் தலைநகரம் வரைபடத்தில் இருந்து காணாமல் போகிவிடும். எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகள் கலவரத்தில் ஈடுபடலாம்,தற்கொலை தாக்குதல் நடத்தலாம். எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால் 7 வருடமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரமஎதிரி நாட்டு கைதிகளை வைத்து தஞ்சை தலைநகரில் வேலை வாங்கி இருப்பார்கள்.
.
7 வருடம் கைதிகளை அடக்கிஒடுக்கி வேலை வாங்குவது சாத்தியம் இல்லை,அதேபோல் மற்ற கட்டிடக்கலை வல்லுனர்களும் மனம்கோணாமல் வேலை செய்ய வேண்டும்,மக்களிடம் இருந்தும் எதிர்ப்பு வராமல் பார்த்து கொள்ளவேண்டும் என்றால் HRM எனப்படும் மனித வள மேலாண்மையை மிக நேர்த்தியாக நடைமுறை படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஓங்கி உயர்த்து நிற்க்கும் கோவில் தான் சாட்சி.
.
சரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள்,ஆயிரம் ஆயிரம் யானைகள்,குதிரைகள்,1000க்கும் மேற்பட்ட சிற்பிகள்,ஓவியர்கள்,ஆசாரிகள், கொல்லர்கள், நடனகலைஞர்கள் ,சமையல் வேலையாட்கள்,கற்களை பிளக்கும் வீரர்கள் என ஒரு மாபெரும் படைக்கும் 7 வருடம் உணவு வழங்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 7 வருடம் சோழதேசத்தில் விவசாயம் மற்றும் பொருளாதாரம் தங்குதடை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஒரு முழு படைக்கும் தேவையான மருத்துவ வசதியும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.
.
இது மட்டுமா
.
7 வருடம் கோவில் கேட்ட தேவையான பொருட்செலவை ஈடுகெட்ட தொடர்ச்சியாக போர்களும் நடந்து இருக்கவேண்டும், வெற்றியும் அடைந்து இருக்கவேண்டும் .அதே நேரத்தில் எதிரிநாட்டு படையெடுப்பையும் தடுத்து இருக்க வேண்டும்.
.
ஒரு வேலை ராஜராஜ சோழனோ இல்லை மற்ற முத்த கட்டிடக்கலை நிபுணர்கள் இறந்தாலும் கோவில் வேலை தடை இல்லாமல் தொடர சுமார் 1000 வரைப்படங்களை தயார் செய்து இருக்கிறார்கள்.
.
கிரானைட் கற்களை செதுக்க என்ன வகை உளி, இரும்பு பயன்படுத்த வேண்டும் என்று முன்பே கொல்லர்கள் ஆராய்ச்சி செய்து இருக்கவேண்டும். அதே போல் கற்களை நெம்பிதூக்க உதவும் கம்பிகளை தயார் செய்ய வேண்டும் என்றால் பழுக்கக்காய்ச்சி உரமேற்றும் உத்தியும் தெரிந்திருக்க வேண்டும்.
.
தஞ்சையை சுற்றி 50 கிலோமீட்டருக்கு க்ரானைட் கற்கள் கிடையாது, கோவில் கட்ட தேவையான கற்களை திருச்சிக்கு சற்று தெற்கே 50km தூரத்தில் உள்ள நார்த்தாமலையில் இருந்து கொண்டு வரவேண்டும் என்றால் சோழதேசத்தின் சாலைகள் மற்றும் போக்குவரத்தும் மிக மிக தரமாகவும் சீராகவும் இருந்திருக்க வேண்டும்.
.
இது எல்லாவற்றையும் சமாளித்தலும் மிக பெரிய பூதம் ஒன்று உள்ளதே, அது தான் அரசியல். எந்த ஒரு சாம்ராஜ்யமாக இருந்தாலும் அரசியல் குழப்பம் இருக்காமல் இருக்காது.7 வருடம் அரசியல் குழப்பம் எதுவும் நடக்காமல் மிக நேர்த்தியாக ஆட்சி செய்திருக்க வேண்டும்.சோழ அரசியலில் பெண்களின் பங்கு கவனிக்கத்தக்கது ஆண்மகன்கள் கோவில் வேலையில் மும்முரமாக இருக்க பெண்கள் ( அதிகாரிச்சி ) அரசு இயந்திரத்தை திறன்பட இயக்கியுள்ளனர் என்று வரலாறு சொல்கிறது.
.
1000 வருடம் 6 நிலநடுக்கத்தை கண்டும் அசராமல் நிற்க்கும் தஞ்சை பெரிய கோவில் வெறும் தேவாலயம் இல்லை.
மருத்துவம்,பொருளாதாரம்,
கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் மிக மிக சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் எடுத்துக்காட்டு.

தஞ்சை பெரிய கோவில் என்கின்ற மாபெரும் பொக்கிஷத்தை நமக்கு தந்த அருள்மொழிவர்மன் (எ) ராஜராஜ சோழனின் பெருமையை உலகம் முழுக்க பரப்புவோம்.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...