Wednesday 22 May 2019

இனி இந்தியாவில் தாமரை வாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்..

நம் இந்தியாவில் இனி தாமரை வாடாமல் அன்று மலர்ந்த மலர் போல் என்றும் இருக்கும்.

கேரளாவை தவிர அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி ஊத்தி கொள்ளும் என்பதே தேர்தல் ரிசல்ட்டாக இருக்கும்.

நிறைய திமுக இடதுசாரி நண்பர்களுக்கு எக்சிட் போல் முடிவுகளை ஜீரணிக்க முடியவில்லை.

ஆறு மாதங்களுக்கு முன்பு தான் பிஜேபி மூன்று மாநிலங்களில் பிஜேபி தோல்வியடைந்தது.

இப்பொழுது
மட்டும் எப்படி பிஜேபி ஜெயிக்க முடியும்? என்று கேள்வி கேட்கிறார்கள்.

அவர்களுக்கு என்னுடைய ஒரே பதில் மோடி என்பது தான்.

இந்தியாவில் இப்பொழுது வலிமை வாய்ந்த ஒரேதலைவர் மோடி தான்.

அது மட்டுமல்ல.

இப்பொழுது இந்தியா முழுவதும் செல்வாக்கு உள்ள ஒரே கட்சி பிஜேபி தான்.

இப்பொழுது உள்ள பிஜேபிக்கு சுதந்திரம் அடைந்து 40 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கு மாதிரி இருக்கிறது.

1989 க்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி உறுதி எத்தனை தொகுதிகள் என்று ரிசல்ட்டில் பார்த்துகொள்வோம் என்கிற மனநிலையே மக்களிடம் இருந்து வந்தது.

எமர்ஜென்சி் மூலம் இந்தியாவையே இந்திரா மிரட்டி அடக்கி வைத்ததற்கு எதிராக எழுந்த எதிர்கட்சிகளின் ஒற்றுமையும் அதனால் விளைந்த  மொரார்ஜி தேசாயின் தலைமையும் அதனால் மக்களிடம் உருவான நம்பிக்கையும் சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற 6 வது லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முதன் முதலில் தோல்வியை அளித்த பொழுதும் 189 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தது.

அதே மாதிரி 1989 ல் போபர்ஸ் ஊழலை எதிர்த்து விபி சிங் தலைமையில் எதிர் கட்சிகள் ஒன்று திரண்ட பொழுதும் காங்கிரஸ் தோல்வியடைந்தது.

இருந்தாலும் 197 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. எனவே  காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்களிடம் அலை வீசிய பொழுதும் 200 தொகுதிகளுக்கு குறைவில்லாமல் வெற்றி பெற்று வந்தது.

ஆனால் 1996 க்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு அதிக பட்ச வெற்றியே 2009 ல் கிடைத்த  206 தொகுதிகள் தான்.
இதற்கு காரணம் வட மாநிலங்களில் பிஜேபியின் வளர்ச்சி என்றே கூற வேண்டும்.

இனி காங்கிரஸ் கட்சி 200 இடங்களைப் பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு பிஜேபி மிகப்பெரிய அளவில் மக்களிடம் எதிர்ப்புகளை சம்பாதிக்க வேண்டும்.

டீமானிட்டிசேசன், ஜிஎஸ்டி என்று பிஜேபி ஆட்சியில் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு மோடி மீதோ பிஜேபி மீதோ வெறுப்பு வரவில்லை . மாறாக நாட்டிற்க்கு மோடி நல்லதுதான் செய்கிறார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கை மோடியின் 2019 -2024 ஆட்சியில் மேலும் அதிகரிக்குமே தவிர நிச்சயமாக குறையாது.

அது மட்டுமல்ல மோடியின்
2019 -2024 ஆட்சி பிஜேபியின் எதிர்ப்பாளர்களையும்  பிஜேபி பக்கம் கொண்டு வரும் அளவிற்கு இருக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி 200 தொகுதிகளை எல்லாம் கனவில் கூட இனி நினைக்க முடியாது

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி முடிந்த அளவில் கூட்டணி வைத்து போட்டியிட்டது. பீகார், மகாராஷ்டிரா ,தமிழ்நாடு, கர்நாடகா, ஜார்கண்ட் , ஒடிசா கேரளா, உத்தரபிரதேசம் ,ஜம்மு காஷ்மீர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி வைத்து போட்டியிட்ட பொழுதும் காங்கிரஸ் கட்சியால் 50 தொகுதிகளில் கூட  வெற்றி பெற முடியவில்லை என்பதால் காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வரும் என்று கனவு காண வேண்டாம்.

இனி வரும் காலங்களில் பிஜேபி மிக மோசமானஆட்சியை அளித்தாலும் அதற்கு 200 தொகுதிகளுக்கு குறையாது என்பதால் பல மாநில கட்சிகளின் துணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும்.

ஆனால் இனி பிஜேபி எவ்வளவு மோசமாக ஆட்சி செய்தாலும் காங்கிரஸ் கட்சியால் 100 தொகுதிகளை எட்டிப் பிடிக்க பல குட்டிக் கரணம் போட வேண்டும்.

எனவே இனி வருகின்ற 2024 மற்றும் 2029 தேர்தல்களில் எந்த ஒரு சூழ்நிலையிலும்  காங்கிரஸ் 100 தொகுதிகளை கைப்பற்றவே கதற வேண்டும்.மாறாக பிஜேபி மிக மோசமான சூழ்நிலையிலும் 200 தொகுதிகளை எட்டி விடும்.என்பதால் இன்னும் இரண்டு தேர்தலுக்கு காங்கிரஸ் ஆட்சியை பற்றி கனவு காண முடியாது.

இருந்தாலும்  #பிஜேபியின் #அடுத்த  #5ஆண்டு #கால #ஆட்சி #இந்தியாவின் #பொற்கால #ஆட்சியாக  #இருக்கும் என்பதால் அடுத்த 2024 லோக்சபா தேர்தலில் எந்தவொரு கூட்டணியின் துணையின்றியே தேர்தலில் போட்டியிட்டு மெஜாரிட்டி யோடு வெற்றி பெறுகிற அளவிற்கு உயர்ந்து நிற்கும்.

மோடி ,அமித்ஷா இருவரும் தமிழ்நாடு ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ,பஞ்சாப் இந்த 5 மாநிலங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் பிஜேபி யை ஓரளவிற்கு வளர்த்து விடுவார்கள் என்பதால்
இனி இந்தியாவில் தாமரை வாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்..

ஜெய்ஹிந்த்.
பாரத் மாதாகி ஜெய்

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...