Friday 16 November 2018

சிவன் சொத்து குல நாசம்..! டி.எஸ்.பி கைது Nov 15, 2018 8:52 PM Polimer news

சிவன் சொத்து குல நாசம்..! டி.எஸ்.பி கைது
Nov 15, 2018 8:52 PM Polimer news

நெல்லை மாவட்டம் பழவூர் நாறும் பூநாதர் கோவிலில் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 சாமி சிலைகளை திருடி வெளி நாட்டிற்கு கடத்திய விவகாரத்தில் வெளிநாட்டு குற்றவாளிகளை தப்பவிட்ட டி.எஸ்.பி ஜீவானந்தம் என்பவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

நெல்லை மாவட்டம் பழவூரில் பழமையான நாறும் பூநாதர் கோவிலில் இருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு 13 சாமி சிலைகள் திருடப்பட்டன. 24 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சிலை திருட்டு வழக்கை முதலில் அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஜீவானந்தம் விசாரித்தார்.

சென்னை ஆழவார்பேட்டையில் உள்ள சிலைக்கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டில் இருந்து 4 சிலைகளை மீட்டதாக கூறி நீதிமன்றத்தில் ஒப்படைத்த காவல் ஆய்வாளர் ஜீவானந்தம், இந்த வழக்கில் பல் உண்மைகளை மறைத்ததோடு தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தப்பவிட்டதாகவும் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைக்கு தடை பெற்ற, நிறுத்திய சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், இந்த சிலைகடத்தல் குறித்து பல திடுக்கிடும் உண்மைகளை கண்டறிந்தார்.

சிலைகள் களவு போவதற்கு முன்பாக அமெரிக்காவின் நியூயார்க்கில் அருங்காட்சியம் நடத்திவரும் சுபாஷ் சந்திர கபூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வது போல நாரும் பூநாதர் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த அர்ச்சகரின் தட்டில் 1000 ரூபாய் போட்டு விட்டு கோவிலில் உள்ள சிலைகளை புகைபடம் எடுத்து வந்துள்ளார். அந்தபுகைபடங்களையும், 50 லட்சம் ரூபாய் பணத்தையும் கொடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சிலைகடத்தல் மன்னன் தீனதயாளனிடம் அந்த சிலைகளை கடத்தி அனுப்பி வைக்கும்படி கூறி உள்ளார்.

அதன்படி தீனதயாளனிடம் பணத்தை பெற்றுக் கொண்ட கொள்ளையர்கள் நாறும் பூநாதர் கோவிலின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவிலில் உள்ள தொன்மையும், பழமையும் வாய்ந்த ஆனந்த நடராஜர், ஆவூடையம்மாள், மாணிக்க வாசகர், காரைக்காலம்மையார் சிலை உள்ளிட்ட 13 சிலைகளை சிலை கடத்தல் கும்பல் திருடி கடத்தி சென்றுள்ளது.

அருப்புக்கோட்டையில் வைத்து ஆனந்த நடராஜர் மற்றும் ஆவூடையம்மான் சிலைகளை தங்கம் என நினைத்து சிலைகளின் கை பகுதியை அறுத்து சோதித்த போது, அது தங்கம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பின்னர் சிலைகள் அங்கிருந்து கண்டம் கோட்டை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் 4 சிலைகளில் அமிலங்கள் ஊற்றி சோதித்த போது உருக்குலைந்து விட்டன.

இந்த நிலையில் சென்னை கொண்டு வரப்பட்டு தீனதயாளனிடம் ஒப்படைக்கப்பட்ட ஆனந்த நடராஜர் சிலை உள்ளிட்ட 4 சிலைகளை மட்டும் மும்ப்பையில் உள்ள இந்தோ நேபாள் ஆர்ட் கேலரி மூலம் கலைபொருட்கள் என்ற பெயரில் ஹாங்காங் அனுப்பி அங்கிருந்து லண்டன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அங்கு நீல்ஸ்பெரி ஸ்மித் என்ற சிற்பி 2 கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு ஆனந்த நடராஜர் சிலைக்கும், ஆவுடையம்மாள் சிலைக்கும் புதிதாக கை செய்து ஒட்டவைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுபாஷ் கபூரின் அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனை தனக்கு கிடைத்த பெருமையாக நினைத்து அருங்காட்சியகத்தின் அட்டவணை புத்தகத்தின் முகப்பில் இந்த சிலைகளின் படத்தை போட்டு விற்பனைக்கு தயாராக இருப்பதாக விளம்பரம் செய்துள்ளார் கபூர்..!

தீனதயாளன் மூலமாக சிலை கடத்தப்பட்ட தகவல் தெரிந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம், அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, தீனதயாளனிடம் பணத்தை பெற்றுக் கொண்டு சிலை திருட்டு வழக்கை மிகவும் மெத்தனமாக விசாரித்துள்ளார். ஒரு கட்டத்தில் சிலைகடத்தல் காவல் அதிகாரிகள் அதிக அளவு பனம் கேட்டு மிரட்டியதால் , பாங்காக் சென்ர தீனதாயாளன் , சுபாஷ் கபூருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்றில் தங்கி தன்னுடைய நெருக்கடி நிலை குறித்து விளக்கி உள்ளார்.

மேலும் இந்த 4 சிலைகளுக்கு பதிலாக இரண்டு தொண்மையான ஓவியங்களை கொடுத்து சிலைகளை விமானம் மூலம் நேபாளம் கொண்டு வந்து, அங்கிருந்து கொல்கத்தா வழியாக சென்னைக்கு லாரியில் ஏற்றி தீனதயாளன் மீட்டு வந்தது உள்ளிட்ட எந்த தகவலையும் நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் ஏமாற்றி உள்ளார் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம்.

அதோடில்லாமல் முக்கிய குற்றவாளியான சுபாஷ் கபூர். வல்லபபிரகாஷ், ஆதித்ய பிரகாஷ் உள்ளிட்டோரை தப்பவிட்டதும், கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கபிரிவு டி.எஸ்.பியாக பனிபுரிந்து வந்த ஜீவானந்தத்தை சிலை கடத்தல் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில காவல்துறை அதிகாரிகளும் இந்த வழக்கில் சிக்க இருப்பதால் முன்பு சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் ஏற்கனவே பணியாற்றி ஓய்வு பெற்ற பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிவன் சொத்து குல நாசம் என்பது போல இந்த சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொருவராக போலீசில் சிக்கி வருவது குறிப்பிடதக்கது.!

அடுத்த பிரதமர் வேட்பாளர்

"பாஜக கட்சிக்குள்ளேயே மோடி பலம் இழந்து வருவதால் அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்து பாஜக யோசனை செய்து வருகிறது.." --#திருநாவுக்கரசர்

ஆமாம்..இவுரதான் அடுத்த பிரதமர் ஆக பாஜகவுலேந்து கூப்டாங்களாம்...😁
இவுரே "இன்னைக்கு நான்தானேங்க தமிழக காங்.தலைவரு" ன்னு டெல்லில ஃபோன் போட்டு கேட்டுட்டுதான் வெளீலயே தலை காட்டுறாரு..இந்த நெலமையில பேச்சைப் பாரு..😂

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான CBI யின் FIR* சிதம்பரத்தின் சொத்து...!!!* கண்ணை கட்டுதே... . .

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான CBI யின் FIR*

சிதம்பரத்தின் சொத்து...!!!*

கண்ணை கட்டுதே... . .

சென்னையில் 12 வீடுகள், 40 மால்கள் , 16 சினிமா தியேட்டர்கள் , 3 சபாக்கள்

தமிழ்நாட்டில் 300 ஏக்கர் நிலங்கள்,

நாடு முழுவதிலும் உள்ள 500 வாசன் கண் மருத்துவமனைகள்

ராஜஸ்தானில் 2000 ஆம்புலன்ஸுகள்

பிரிட்டனில் 88 ஏக்கர்.

ஆப்பிரிக்காவில் 3 திராட்சைத் தோட்டம் + குதிரைப் பண்ணைகள்.

இலங்கையில் 3 ரிசார்ட்கள். இலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலா பொழுதுபோக்கு நிறுவனமான... 'லங்கா பார்ட்சூன் ரெசிடன்ஸ்'ன் பெரும்பாலான பங்குகளை கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் வாங்கியுள்ளது. (இலங்கை சொத்துக்கள் அனைத்தும் ஈழ இனப்படுகொலை நடத்த உதவியதற்காக சிதம்பரத்துக்கு ராஜபக்சேவால் அன்பளிப்பாக தரப்பட்டது. )

சிங்கப்பூர்,மலேசியா & தாய்லாந்தில் சொத்துக்கள்.

பார்சிலோனாவில் (ஸ்பெயின்) 4 ஏக்கரில் 11 டென்னிஸ் கோர்ட்டுகளோடு டென்னிஸ் அகடெமி.

இதேபோல கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிதிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து... சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் தொடர்பில் பங்கேற்கும் ஒரு அணியையும் விலைக்கு வாங்கியுள்ளது.

துபாய், பிரான்ஸ் ல நிறைய்ய்ய முதலீடுகள் பல லட்சம் கோடி ரூபாய்க்கு... (பல நூறு கோடி,
பல ஆயிரம் கோடி அல்ல பல லட்சம் கோடி

மொத்தம் 14 நாடுகளில் - லண்டன், துபாய், சவுத் ஆப்ரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிசர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின்..... முதலிய நாடுகளில் பல லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடாக பணம் முதலீடு செய்துள்ளார்.

இந்த முதலீடுகள் அனைத்தும் ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகம் நடைபெற்ற 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகே நடைபெற்றுள்ளது

இங்கிலாந்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பவுன்ட் மதிப்பிலான சொத்து...
கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மூலம் வாங்கப் பட்டுள்ளது.

இதே போல துபையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்...
'டெசர்ட் டியூன்ஸ் லிமிடெட்', `ஃபேல் துபை எப்.எக்ஸ். எல்எல்சி' நிறுவனங்களும்...
கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.

கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து...
மலேசியாவில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதும்...
தாய்லாந்து நாட்டில் 16 நிலங்களை வாங்கியிருப்பதும்...
அமலாக்கத் துறை கைப்பற்றிய ஆவனங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

கார்த்தி சிதம்பரத்தின் 'அட்வான்டேஜ் ஸ்ட்ரடிஜிக் கன்சல்டிங்' நிறுவனத்தின் மூலமே
ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகத்தின் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக பணியாற்றிய
2006 முதல் 2014 ஆண்டு வரையிலான காலக்கட்டத்திலேயே
கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உங்களுக்கு வேண்டுமானால் சிபிஐயிடம் கேட்டு தகவலை
பெற்றுக் கொள்ளலாம் !!!

இவையனைத்தும் உண்மையான தகவல்களேயாகும். கேட்டால் நாங்கள் பிறக்கும்போதே  'அரச குடும்பம்'  என்பான் சிதம்பரம்.

அடுத்த பிரதமர் வேட்பாளர்

"பாஜக கட்சிக்குள்ளேயே மோடி பலம் இழந்து வருவதால் அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்து பாஜக யோசனை செய்து வருகிறது.." --#திருநாவுக்கரசர்

ஆமாம்..இவுரதான் அடுத்த பிரதமர் ஆக பாஜகவுலேந்து கூப்டாங்களாம்...😁
இவுரே "இன்னைக்கு நான்தானேங்க தமிழக காங்.தலைவரு" ன்னு டெல்லில ஃபோன் போட்டு கேட்டுட்டுதான் வெளீலயே தலை காட்டுறாரு..இந்த நெலமையில பேச்சைப் பாரு..😂

கலைஞர் கட்டிய கல்லனை

படேலின் பேத்தி செய்யும் தொழில்

600 km distance:: 40 km பாலம்

இந்து அன்பர்களுக்கு வணக்கம்.* *எ

*இந்து அன்பர்களுக்கு வணக்கம்.*

*எதையும் தெரியாது என்று சொல்லாதே,
"சாதிக்கும் துணிவோடு"*
*அஞ்சாத போர் வீரனைப் போல் செயல்படு*
                  
  *சுவாமி விவேகானந்தர்.*

*மாற்றம் என்பது சொல் அல்ல அது செயல்,நமது செயல்பாடுகள் தான் எதையும் தீர்மானிக்கும்.*

*சொல் அது காற்றில் கரையும்,செயல்தான் காவியமாகும் அதனால் காவியம் படைக்கும் நோக்கில்...*

*1.இந்துக்களுக்கான தலைமையிடம் அமைப்பது.*
*2.இந்துக்களுக்கான வணிக்க கட்டமைப்பை உருவாக்குவது.*
*3.இந்துக் கோயில்களை பாதுகாப்பது.*

*இந்த மூன்று நோக்கங்களை முன் வைத்து...*

*தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்.*

*இந்துக்கள் அனைவரும் வருக.!*

*நேரம்:காலை:10.00 மணி.*
*நாள்:25.11.2018.*
*இடம்:விவேகானந்தா கேந்திரம்.*
*விவேகானந்தபுரம்.*
*கன்னியாகுமரி.*

*தொடர்புக்கு.*
*வ.சிவாஜி.*
*இந்து சங்கம்.*
*+917867890890.*

16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஷேக் அப்துல்லா கம்பம் திருட்டு திமுக இளைஞர் அணி தலைவர்

ஆசிஃபாவுக்கு விடிய விடிய பதிவு செய்தவன் ஒருத்தனையும் காணோம்.

16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஷேக் அப்துல்லா கம்பம் திருட்டு திமுக இளைஞர் அணி தலைவர்

Nehru first prime minister a HOT BOY

Nehru first prime minister a HAUGHTY BOY

நேரு ஒரு கழிசடை

ஈ வெ ரா பட்டிமன்றம்

Driving license valid in some countries

ஊழலுக்கு மரண அடி

ஒரு ரூபாய் கூட உலக வங்கியில் கடன் வாங்காமல்

ஒரு நடுத்தர குடும்பத்தைச்சார்ந்தவர் ஒரு மூன்றுமாதத்தை
எந்த ஒரு கடனும் வாங்காமல்
தன் குடும்பத்தை ஓட்ட முடியுமா??

சத்தியமாக முடியாது.

ஆனால் ....
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட
இரண்டாவது நாடான
பாரதத்தை

அதன் பிரதமரான
#நரேந்திரமோடி

ஒரு ரூபாய் கூட உலக வங்கியில் கடன் வாங்காமல்

நான்கு
வருடத்தை கடந்துள்ளார்.

இதுவே
பெரிய சாதனையல்லவா ?

அதற்கு நிகராக
ஒரு ஊழல் குற்றச்சாட்டு
கூட கிடையாது.

இது ஒரு காரணம் போதாதா 
அவர் மீண்டும்
பாரதத்தின் பிரதமராக

நான் தயாராக உள்ளேன்

மீண்டும் பாஜக விற்கு
வாக்களிக்க

நீங்களும் தயார்
என்றால்

ஒரு #ஓம் சொல்லி பதிவிடவும்

இந்து விரோதிகள்

ஆனால் நான் ஏன் மோடியை எதிர்க்க வேண்டும்?

🚩(PCR எனப்படும் வன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதும் அதனால் அப்பாவிகள் பலர் பாதிக்கப்படுவதும் நாடறிந்த ஒன்று. அதனால் மோடி அரசு PCR எனப்படும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முனைந்ததாலும்,
சாதியை காட்டி சலுகை பெறுவதையும் சாதிய இட ஒதுக்கீட்டையும் RSS & BJP எதிர்ப்பதாலும் "திருமாவளவன்" மற்றும் அவரை சார்ந்தவர்கள் மோடி மீது விஷத்தை கக்குவது இயல்புதான்.

(ஆனால் நான் ஏன் மோடியை எதிர்க்க வேண்டும்?🤔)

🚩எடப்பாடியின் மாநில அரசும், மோடியின் மத்திய அரசும் சுமூகமாக இருப்பதாலும் எடப்பாடியின் அரசை கலைக்க மோடி உதவாததாலும் "TTVதினகரன்" அனியினர் மோடி மீது வெறுப்பாக இருக்கலாம். (ஆனால் நான் ஏன் மோடியை வெறுக்க வேண்டும்🤔)

🚩. இந்திய இறையான்மையை நசுக்கி, நம் பாரம்பரிய கலாச்சாரத்தை சீரழித்து, சிலரது வறுமையை பயன்படுத்தி அவர்களை மதம்மாற்றுவதற்கு கிறிஸ்தவ அமைப்புகளுக்கு வெளிநாட்டு மதவாதிகளிடம் இருந்து வரும் சட்ட விரோத நிதியை (NGO) தடை செய்ததால் கிறிஸ்தவ மிஷனரிகள் மோடி மீது விஷமத்தையும் புரளிகளையும் பரப்பலாம் (ஆனால் நான் ஏன் மோடியை எதிர்க்கனும்🤔)

🚩. கடவுளே இல்லை என கூவி மத மாற்றத்திற்கு விதை போட்டு, பிராமணர்கள் மேல் உள்ள "பொறாமையால்" என் மத நம்பிக்கையை கேவலபடுத்தி மகிழும் "திக"வினருக்கு BJP சிம்ம சொப்பனமாக இருப்பதால் கருப்புசட்டை காரர்கள் பித்து பிடித்து அலையலாம்.. (ஆனால் நான் ஏன் மோடியை எதிர்க்கனும்?🤔)

🚩. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தி.க, போன்றைவைகளின் தயவால் பிழைப்பு நடத்திவருவதும் கடவுளே இல்லை என கூறி நடிப்பதுமான "திமுக" விற்கு மோடியின் கடுமையான சட்டத்தால் திருட முடியாமல் தவித்து வருவதாலும் கூட்டனி கட்சிகள் ஓடி விடுமோ என்ற பயத்தாலும் மோடி மீது வெறுப்பை உமிலளாம் (ஆனால் நான் ஏன் BJP யை வெறுக்க வேண்டும்🤔)

🚩. அயோத்தியில் இராமர் கோவில் கட்ட போவதாலும். நாட்டின் பிரதமர் ஒரு பக்திமானாக இருப்பதாலும், காவி நிறத்தை கண்டால் ஒவ்வாமை ஏற்படுவதாலும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளுக்கு மோடியை கண்டால் பயமாக இருக்கலாம் (ஆனால் நான் ஏன் பாஜக வை ஒழிக்க வேண்டும்🤔)

🚩.முட்டாள் தனமான தத்துவம் கொண்ட கம்யூனிஸ்ட்களுக்கு பாஜக தத்துவம் அதிர வைக்கலாம் (ஆனால் நான் ஏன் .....😂😂)

இப்படி பல பெருச்சாலிகளை கதற கதற வெச்சு செய்கின்ற மோடியை கண்டால் பெருமிதமாக உள்ளது.

🚩 50 ஆண்டுகளாக தமிழகத்தை குட்டிச்சுவராக மாற்றி நாசம் செய்த திருட்டு திராவிட ஊழல் பெருச்சாலிகள் ஒரே நேரத்தில் உங்களை கண்டு "மரண ஓலமிடுவதை" காண என்ன தவம் செய்தேன் எங்கள் தலைவா.🙏🌷. 

🚩. பாஜக தமிழத்தில் காலூன்ற கூடாது, தாமரை மலரகூடாது ஏனென்றால் BJP தமிழகத்தில் நுழைத்தால் திருட்டு திராவிட கட்சிகளின் பிழைப்பு நாறிவிடும். திராவிட கட்சிகளால் திருட முடியாது என்று திராவிட கட்சிகளிடம் அண்டி பிழைப்பவர்கள் கதறலாம் (ஆனால் நான் ஏன் BJP யை ஆதரிக்க கூடாது🤔)

🚩.50 ஆண்டுகளாக ஊழலில் ஊறி தின்று கொழுத்த இத்தாலி விருந்தாளி சோனியாவிற்கு ஒரு இந்தியர் இந்தியாவை ஆள்வது நெருடலாக இருக்கலாம். (ஆணால் குப்பைகளை அகற்றிவரும் மோடியை கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன்)

🚩 நாட்டின் இறையான்மையை பாதுகாத்து 4 ஆண்டுகளில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி உலக அரங்கில் இந்தியா கவனிக்கப்படும் நாடாக வளர்ச்சிபாதை உருவாக்கி செயல்படும் பாரத பிரதமர் "மோடிஜி" பின்னால் நாங்களும் இருப்பது எங்களுக்கு பெருமையே........ ஜெய் மோடி சர்கார்.....🚩🚩🚩🚩🚩🚩

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன...? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன...?
குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
- சற்று ஒரு பார்வை...

குலதெய்வம்...
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குல தெய்வம் ஆகும்.

குல தெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.

மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குல தெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

அதன் சக்தியை அளவிடமுடியாது...

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.ஒரு ஊரில் நடக்கும் தொடர் சம்பவங்களே நம் குல தெய்வம் மகிழ்வோடு இருக்கிறாளா?இல்லையா? என்பதைக் காண்பித்து விடும்.

இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?

நம் முன்னோர்கள்...
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப் பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.
அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...

இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இதன்படி பார்த்தால், குல தெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!

நாம் அங்கே போய் நின்று...
அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்!...

விஞ்ஞான முறையில் யோசித்தால்...

ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே!...

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 குரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.

இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமசோமே முடிவு செய்கிறது.

தாயிடம் xx குரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.

தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட குரோமோசோம்கள் உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...

இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.

ஆண் குழந்தையை உருவாக்கும் y குரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது...

வழி வழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...
தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...

பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...

ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...

அதனால் ஏற்கெனவே பலவீனமான y குரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வணங்குவது கிடையாது...
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழி வகுக்கும்.

இது வரை யாரும் பிறந்த வீட்டின் குல தெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல் போல் தழைத்து, அருகு போல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...

குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குல தெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி அல்லது குறைந்தது வருடம் ஒரு முறையாவது செல்லுங்கள்.

அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.

அக்கோவிலுக்கு மனதார உதவுங்கள்.

குல தெய்வத்திற்கு
சரியான உணவு படைக்கப் படுகிறதா?
மகிழ்வூட்டும் மலர்கள் படைக்கப் படுகிறதா?
அபிஷேக பொருட்கள் தூய்மையாக உள்ளதா?
எத்தனை வகை அபிஷேகம் அளிக்கப் படுகிறது?
குல தெய்வத்தின் திருமேனி பழுதடையாமல் போற்றப் படுகிறதா?
தெய்வத்தை வழிபாடு செய்யும் மனமார்ந்த அர்ச்சகர் உள்ளாரா?
என்பதை கண்காணிப்பது ஒவ்வொரு பக்தனின் கடமை என்பது நினைவிருக்கட்டும்.
"நமக்கென்ன" என்று இருந்தீர்கள் என்றால் அதுவும் உங்களுக்கு தெய்வ குற்றமே!

நான் வெளியூரில் இருக்கிறேன் என்று தப்பவும் இயலாது.எங்க அம்மாவை பட்டினி போட்டு விட்டு நான் வெளி ஊரில் இருப்பதால் எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொன்னால் நீங்களும் தப்ப இயலாது.

பெற்றவளுக்கு நேரம் தந்து காப்பதும் உங்கள் கடமை.

ஒவ்வொருவரின் கண் கண்ட முதல் குலதெய்வம் பெற்ற தாயும், தந்தையும் தான்...

"தாயிற் சிறந்த கோவிலுமில்லை...
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை..."

எனவே, நம் முதல் குல தெய்வமான பெற்றோர்களை முதலில் போற்றி நம் குல தெய்வத்தை காத்து போற்றுங்கள்...

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...