Wednesday 9 January 2019

ரூ.100 கோடி வரிஏய்ப்பு : சோனியா, ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு .

ரூ.100 கோடி வரிஏய்ப்பு : சோனியா, ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

https://www.dinamalar.com/news_detail.asp?id=2187863

.

ரூ.100 கோடி வரிஏய்ப்பு : சோனியா, ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
.

2011 - 2012 ம் நிதியாண்டில் அசோசியேட்டட் ஜோர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் சோனியா ரூ.155.41 கோடியும், ராகுல் ரூ.154.96 கோடியும் வருமானம் ஈட்டி உள்ளனர். ஆனால் வருமான வரிதாக்கலில் ரூ.68.12 லட்சம் மட்டுமே வருமானம் பெற்றதாக கணக்கு காட்டி உள்ளனர். இதே போன்று காங்., கட்சியின் ஆஸ்கார் பெர்னாண்டசும் தனது ரூ.48.93 கோடி சொத்து மதிப்பை குறைத்து காட்டி வரிஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

இவர்களின் சொத்து கணக்கை மறுமதிப்பீடு செய்த போது சோனியா குடும்பத்தினர் ரூ.300 க்கும் அதிகமான வருமானத்தை மறைத்து ரூ.100 கோடி அளவிற்கு வரிஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் சோனியா குடும்பத்திற்காக வாதாடிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அந்த நிறுவனம் ரூ.90 கோடி கடனில் உள்ளதாகவும், வருமான வரித்துறையினர் அதனை மறைத்து ரூ.407 கோடி சொத்து இருப்பதாக கூறுவதாகவும் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட், ஒரு வாரத்திற்குள் பிரமான பத்திரம் தாக்கல் செய்ய சோனியா குடும்பத்திற்கும், வருமான வரித்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை ஜனவரி 29 க்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும் பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கின்றனர் : ஆர்.டி.ஐ தகவல்


https://www.facebook.com/groups/634094756779113/permalink/975527329302519/

காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும் பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கின்றனர் : ஆர்.டி.ஐ தகவல்

A delegation of Sufi Scholars calls on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on August 27, 2015.

#பிரதமர்_மோடிஜி அரசுக்கு எதிரான விரோத சிந்தனைகளை  சிறுபான்மை மக்களிடையே எதிர்கட்சிகளும், சில மத அமைப்புகளும் தொடர்ந்து கிளப்பிவிட்டு வருகின்றன. குறிப்பாக பா.ஜ.க ஆட்சியில் தான் சிறுபான்மை மக்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதாக விஷமிகள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவர்களின் முகத்தில் கரி பூசுவதுபோல கீழ்கண்ட ஆர்.டி.ஐ தகவல்களை ஆங்கில பத்திரிகையான MyNation தற்போது வெளியிட்டுள்ளது.

#நரேந்திரா_மோடிஜியின் கடந்த 2017 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற ஆட்சியுடன்  2004 ஆம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை வரை இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் ஐக்கிய முன்னணி ஆட்சியையையும் ஒப்பிட்டு எந்த ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன என்பது குறித்து நொய்டாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அமித் குப்தா உள்துறை அமைச்சகத்திடமிருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல தகவல்களை பெற்றுள்ளார். அந்த தகவல்களை மை நேஷன் என்கிற ஆங்கிலப் பத்திரிகை பகிர்ந்துள்ளது .

அதன்படி 2004 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் 10,399 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த சம்பவங்களில் 30,723 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், 1,605 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இவற்றில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணியின் முதல் ஆட்சியின் போது மட்டும் (2004 மற்றும் 2008 ஆண்டுகளில்) 3,858 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

இதே காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முன்னணியின் 2 வது கட்ட ஆட்சியின்போது (2009 மற்றும் 2013) 3,621 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. ஆனால் #மோடிஜி_சர்க்காரின் 2014 முதல்  2017 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற வன்முறை சம்பவங்கள்  2,920  மட்டும்தான் .

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த சமயத்தில் மதவாத வன்முறை சம்பவங்கள் முதல் மூன்று ஆண்டுகளில் மிக அதிக அளவில் இருந்தன.

2008 ஆம் ஆண்டில் அதிகபட்சம் 943 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் 849 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2013 ல், 823 மதவாத கலவரங்கள் நடந்தன. அப்போது நடைபெற்ற சம்பவங்களை #மோடிஜி_சர்க்கார் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களோடு ஒப்பிடுகையில் #மோடிஜி_சர்க்கார் ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்கள் மிகவும் குறைவானவை. 2004-2014 காலப்பகுதியில் நடைபெற்ற இனவாத வன்முறை சம்பவங்களில் கொல்லப்பட்ட மக்களின் சராசரி எண்ணிக்கைக்கையை கணக்கிடும்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒரு சந்தேகத்திற்குரிய வேறுபாட்டை சம்பாதிக்கின்றது.

2004 மற்றும் 2013 க்கு இடையே ஒவ்வொரு ஆண்டும் 1,216 பேர் கொல்லப்பட்டனர். அந்த எண்ணிக்கை #மோடிஜி_அரசாங்கத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு சராசரியாக 97  ஆக வீழ்ச்சி அடைந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த சமயத்தில் ஒரே ஆண்டில் வகுப்புவாத ஊடுருவல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அரசாங்க தகவல்களின்படி, 2008 ல் 167 பேர் கொல்லப்பட்டனர், இது மிக உயர்ந்ததாகும், 2004 ல் 134 மற்றும் 2013 இல் 133 பேர் கொல்லப்பட்டனர். 2014 க்குப் பிறகு, வகுப்புவாத கலவரங்களில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது என்பதை இந்த தகவல்கள் மூலம் அறியலாம்.

நொய்டாவில் தகவல் தொழில்நுட்ப நிபுணர் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அமித் குப்தா 2004 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற வகுப்புவாத கலவரங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் எத்தனை பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது என்பது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்கள் மூலம் இந்த தகவல்கள் பெறப்பட்டன. இது சம்பந்தமான தகவல்கள் மாநில அரசாங்கங்களால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியை செருப்பால் அடித்த நீதிமன்றம். முதல்வர் பினராய் விஜயன் முகத்தில் விழுந்த அடி இது தான்.


https://www.facebook.com/groups/1700782293271895/permalink/2541639085852874/
.

மார்க்சிஸ்ட் கட்சியை செருப்பால் அடித்த நீதிமன்றம். முதல்வர் பினராய் விஜயன் முகத்தில் விழுந்த அடி இது தான்.

*உண்மையான பக்தர்களா?...
சபரிமலைக்கு அழைத்துச் சென்ற
இரண்டு பெண்கள் உண்மையான ஐயப்பன் பக்தர்களா? என்றும்...

*ரகசிய திட்டமா?....
வேறு எதாவது ரகசிய திட்டம் போட்டு இந்த இரண்டு பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்றார்களா என்று விளக்கம் தருமாறு கேரள பினராய் விஜயனுக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது...

*எச்சரிக்கை...
கேரள அரசு தரும் பதில் திருப்திகரமாக இல்லையென்றால்....
மத்திய அரசின் புலனாய்வு துறை மூலம் விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்கப்படும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் பினராய் விஜயனுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்...

*நீதிமன்றம் அவமதிப்பு செயல்....
எப்படி மனிதி அமைப்பைச் சேர்ந்த பெண்களை தனியார் வாகனங்கள் மூலம் போலீஸ் பாதுகாப்பு தந்து அழைத்துச் சென்றீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்...

நில முதல் பம்பை வரைக்கும் தனியார் வாகனங்கள் செல்ல தடை இருக்கும் நிலையில் எப்படி மனிதி அமைப்பின் பெண்களை காவல்துறை அழைத்துச் சென்றனர் என்பதற்கு சரியாக விளக்கம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
இப்படி கேரள அரசு நடந்து கொண்டது நீதிமன்றம் அவமதிப்பு குற்றம் என்று தெரிவித்துள்ளார்கள் நீதிபதிகள்....

பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது: ஜாதிகளை கடந்து ஏழைகளுக்கு சேவை செய்வதாக பிரதமர் மோடி பெருமிதம்


https://www.facebook.com/185115731901122/posts/609010379511653/

பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது: ஜாதிகளை கடந்து ஏழைகளுக்கு சேவை செய்வதாக பிரதமர் மோடி பெருமிதம்

http://www.kathirnews.com/2019/01/09/economically-weaker-reservation-bill-passed-in-ls/

பாண்டிச்சேரி.காங்கிரஸ்.முதல்வருக்கே..!தெரிஞ்சுபோச்சு!!..GST நல்ல திட்டம்..!!அட .போங்கப்பா.!! பாஜக..மோடிஜி நல்ல பிரதமர்..


https://www.facebook.com/groups/634094756779113/permalink/975196979335554/
.

பாண்டிச்சேரி.காங்கிரஸ்.முதல்வருக்கே..!தெரிஞ்சுபோச்சு!!..GST நல்ல திட்டம்..!!அட .போங்கப்பா.!! பாஜக..மோடிஜி நல்ல பிரதமர்..

உண்மையான விவசாயி எப்படி தனது பொருட்களுக்கு விலை வாங்கணும்னு தெரியும்.இதற்கு மோடி ஏற்படுத்தி கொடுத்த திட்டம் தான் E-Namஎன்ற ஆன்லைன் சந்தை.இதில் தமிழ்நாடும் சேர்ந்திருக்கு.


https://www.facebook.com/100027250731072/posts/254835415434814/
.
.

உண்மையான விவசாயி எப்படி தனது பொருட்களுக்கு விலை வாங்கணும்னு தெரியும்.இதற்கு மோடி ஏற்படுத்தி கொடுத்த திட்டம் தான் E-Namஎன்ற ஆன்லைன் சந்தை.இதில் தமிழ்நாடும் சேர்ந்திருக்கு.

இதில் இருக்கும் விஷயம் இதுதான். இந்த விவசாயி சத்யா என்பவர் ஒரு க்வின்டால் (100 கிலோ)1800 ருபாய்க்கு கேட்டார்கள்.ஆனால் அவர் சந்தைக்கு எடுத்து வந்து விற்றதில் ₹1921 கிடைத்தது. இதெல்லாம் தான் வளர்ச்சியின் வழிமுறைகள்.கடன் தள்ளுபடி என்ற விஷயம் ஏமாற்று வேலை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பாண்டிச்சேரி.காங்கிரஸ்.முதல்வருக்கே..!தெரிஞ்சுபோச்சு!!..GST நல்ல திட்டம்..!!அட .போங்கப்பா.!! பாஜக..மோடிஜி நல்ல பிரதமர்..

காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும் பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கின்றனர்

https://www.facebook.com/289157994567792/posts/1203469369803312/
.

காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும் பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கின்றனர் : ஆர்.டி.ஐ தகவல் - கதிர்

http://www.kathirnews.com/2019/01/08/rti-info-about-communal-violences/
.

திராவிட கட்சிகளின் துரோகம்

ரஃபேல்ஸ் பிரிஞ்சு மேயும் தமிழாக்க பதிவு. ரபேல் : பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமனின் பேச்சை கேட்க முடியாதவர்களுக்கான பதிவு.

https://www.facebook.com/groups/1802075443422233/permalink/1952088018420974/
.

ரஃபேல்ஸ் பிரிஞ்சு மேயும் தமிழாக்க பதிவு.
ரபேல் : பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமனின் பேச்சை கேட்க முடியாதவர்களுக்கான பதிவு.

திரும்ப திரும்ப ஒரு பொய்யை சொன்னால் அது உண்மையாகும். ஆனால் அதை சரியான விவரங்களுடன் அது பொய் என்று நிரூபித்தால் , அந்த பொய்யை சொன்னவர்கள் அதள  பாதாளத்தில் விழுவார்கள். பிறகு அவர்கள் என்றாவது உண்மையை சொன்னாலும் அதை மக்கள் நம்பமாட்டார்கள். அது தான் நடந்தது பாராளுமன்றத்தில்.

ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சி தலைவர்களும் உச்சநீதிமன்றமே இதில் எந்த ஊழலும் இல்லை, எந்த தவறும் நடக்கவில்லை என்று கூறிய பிறகும்  ரபேல் விமான ஒப்பந்தத்தை பற்றி சில பொய்களை மக்களிடம் பரப்பி வருக்கிறார்கள். இதில் ஊழல் நடந்திருக்கிறது என்பதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்

1. 126 விமானங்கள் வேண்டிய இடத்தில் எதற்காக 36 விமானங்கள் மட்டும் வாங்குகிறார்கள்?

2. நாங்கள் செய்த ஒப்பந்த விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட 3000 கோடி ஊழல் நடந்திருக்கிறது.

3. இவ்வளவு தொகை கொடுத்து வாங்கும்போது பேங்க் கியாரண்டி ஏன் வாங்கவில்லை?

4. HAL  க்கு கிடைத்திருக்கவேண்டிய ஒப்பந்தத்தை தடுத்து அம்பானிக்கு கொடுத்துவிட்டார் மோடி. இதில் அம்பானி பல நூறு கோடிகள் மோடிக்கு லஞ்சமாக கொடுத்து இருக்கிறார்.

இவை தான் குற்றச்சாட்டுகளாக முன் வைக்கப்பட்டது. இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டால் பாராளுமன்ற கூட்டு குழுவின் விசாரணை தேவை என்று தேய்ந்துபோன ரெகார்ட் போல அதையே சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

சரி இதற்கு இந்தியாவின் ராணுவ மந்திரி  நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் அளித்த பதில் இதோ.

இந்திய விமானப்படையில் உபயோகப்படுத்திக்கொண்டிருந்த போர்விமானங்கள் பழையதாகி அதன் திறன் குறைந்துவிட்டதாலும், அதை விட அதிக திறனுள்ள போர்விமானங்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டதாலும்,கார்கில் போருக்கு பிறகு இந்திய விமான படையின் பலத்தை தக்கவைத்துக்கொள்ள போர்விமானகள் வாங்கவேண்டும் என்று மறைந்த பாரத பிரதமர்   வாஜ்பாய் அரசால் 2002 ஆண்டு முடிவு செய்யப்பட்டது. சீனாவும் பாகிஸ்தானும் தங்களிடம் உள்ள போர்விமானங்களை அதிகப்படுத்தி கொண்டிருந்த வேளையில் இந்தியாவின் விமானப்படையில் ஸ்குவாட்ரன் குறைந்துகொண்டே வந்தது. (ஒரு ஸ்குவாட்ரன் என்பது 18 போர்விமானங்கள் கொண்ட யூனிட்). அதன்படி தங்களுக்கான தேவையை சரியாக அறிந்து தெரிவிக்கும்படி விமானப்படை பணிக்கப்பட்டது

எப்படி பட்ட போர்விமானங்கள் வேண்டும் அதில் என்னவெல்லாம் சாதனங்கள், தளவாடங்கள் பொறுத்தப்படவேண்டும் என்ற  தங்களுடைய தேவையை ( SQR  - Services qualitative requirement ) விமானப்படை 2006 ம் ஆண்டு அப்பொழுது இருந்த காங்கிரஸ் அரசிடம்  தெரிவிக்க அதன்படி தயாரிப்பாளர்களிடம் இருந்து ஒப்பந்தம் கோரப்பட்டது. அதில் டாஸால்ட் என்ற பிரென்ச்  கம்பெனி தங்களுடைய ரபேல் போர் விமானங்களுக்கு மற்றவர்களை விட  குறைந்த விலையை கொடுத்து இருந்ததால் அந்த விமானத்தை வாங்க முடிவு எடுக்கப்பட்டு அதற்கான குழு அமைத்தது காங்கிரஸ். அவர்களும் அந்த கம்பெனியுடன் எல்லா விலை உட்பட  பேச்சுவார்த்தைகளையும் நடத்திமுடித்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ( Terms  & Conditions ) முடிவு செய்து  அரசுக்கு தெரிவித்தது. ராணுவ அமைச்சகம் அந்த கோப்பை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியது ( பா சிதம்பரம் - நிதி அமைச்சர் ). நிதி அமைச்சகம் தனது பங்கிற்கு          எல்லா வழிமுறைகளும் சரியாக பின்பற்றப்பட்டதா என்று பார்க்க மறுபடியும் ஒரு குழு அமைத்தது. இந்த குழு ஏற்கனவே அமைக்கப்பட்ட குழு செய்த வேலையையே திரும்பவும் செய்து அறிக்கையை சமர்ப்பித்தது. இருந்தாலும் காங்கிரஸ் அரசு ஒப்பந்தத்தை நிறைவு செய்யவில்லை. அப்போதைய ராணுவ அமைச்சர்  அமைச்சர் பத்திரிகையாளர்களிடத்தில் பணம் எங்கிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி விமானப்படை மிகவும் அவசரம் என்று சொல்லியும்  காங்கிரஸ் அரசு ஏன் விமானங்களை வாங்கவில்லை? எது அவர்களை தடுத்தது. இதற்கு காங்கிரஸ் தலைமைதான் காரணம். அவர்களுக்கு ஏதோ படியவில்லை. நாட்டின் பாதுகாப்பைவிட அவர்களுக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்பதாலேயே எல்லா செயல்முறைகளும் முடிந்தும்  அந்த ஒப்பந்தத்தை காங்கிரஸ் கிடப்பில் போட்டது.        

ஆனால் மோடி தலைமையிலான இந்த அரசுபதவி ஏற்று 15 மாதங்களில் ஒப்பந்தத்தை நிறைவேற்றியது . பிரெஞ்சு அரசாங்கத்துடன் நேரடியாக பேசி இடைத்தரகர்கள் இல்லாமல் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் அரசு கடைசியாக முடிவெடுத்த தொகையில் இருந்து 9% க்கு குறைவான விலையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

(இரண்டாம் கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும் ...)
அவசரத்திற்கு போர் விமானம் வாங்கும்போது குறைந்தது இரண்டு ஸ்குவாட்ரங்களுக்கு வாங்கவேண்டும் என்பது உலகெங்கும் விமானப்படையில் கடைபிடித்துவரும் நடைமுறை. அந்த நடைமுறைப்படி முதலில் 36 விமானங்கள் நேரடியாக அந்த டஸால்ட் கம்பெனியே தயாரித்து வாங்குவதென்றும் மீதம் இந்தியாவில் ட்ஸால்ட்டின் நேரடி கண்காணிப்பில் தயாரிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு முதலில் ஒரே ஒரு ஸ்குவாட்ரன்கு மட்டுமே அதாவது 18 போர்விமானங்கள் மட்டுமே நேரடியாக வாங்க முடிவெடுத்தது. (இது விமானப்படையின் அறிவுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கை என்றே பார்க்கவேண்டும்.)    

(முதல் கேள்வியான எதற்காக 36 விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கும்.)

ஏதாவது ஒரு கம்பெனியுடன் ஒப்பந்தம் போடும்போதுதான் அவர்களது வங்கியின் உத்திரவாதம் ( பேங்க் கேரண்ட்டி ) கேட்டு வாங்கப்படும்.  ஆனால் இரு நாடுகளுக்குள் ஒப்பந்தம் போடும்போது அப்படி பட்ட வங்கி உத்திரவாதத்திற்கு அவசியம் இல்லை. இதற்க்கு முன்பு இந்தியா அமேரிக்கா ரஷ்யாவுடன் ராணுவ தளவாடங்கள் விமானங்கள்  வாங்க ஒப்பந்த போட்டபோதும் இப்படிதான் நடந்தது.

( இவை வாங்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் )    

பிரான்ஸ் அதிபரே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதால் இதை விட வேறு உத்திரவாதத்திற்கு அவசியம் இல்லை.  

மூன்றாவது கேள்விக்கான விடை கிடைத்திருக்கும். 

HAL :

ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேயும் HAL வாசலில் போய் இது உங்களுக்கு கிடைத்திருக்கவேண்டிய ஒப்பந்தம். மோடி அரசு இதை அம்பானிக்கு தாரைவார்த்துவிட்டது என்று கோஷம் எழுப்பினார்கள்.

ஆனால்    நடந்தது என்ன?

காங்கிரஸ் அரசு பிரான்ஸ் கம்பெனி டஸால்ட் உடன்   சேர்ந்து முடிவெடுத்த விதிமுறைகள்  மற்றும் நிபந்தனைகள் ( Terms  & Conditions ) படி இந்தியாவில் தங்களது ரபேல் விமானங்களை தயாரிக்க தேவையான ஒப்பந்தகாரர்களை டஸ்ஸால்ட் கம்பெனியே முடிவெடுக்கும் என்ற நிபந்தனையும்  இருந்தது. அவர்கள் HAL உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்படிக்கையும் ஏற்படவில்லை. அதற்க்கு இரண்டு காரணங்கள்
1. HAL இதே ரபேல் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க 2 .7 பங்கு அதிக மனித நேரங்கள் ( Man  Hours ) ஆகும் என்று கூறியது. அதனால் விமானத்தின் விலை அதிகமாக இருக்கும் என்று கூறியது. 

2. HAL தயாரிக்கும் தங்களுடைய ரபேல் விமானத்திற்கு தாங்கள் கேரண்ட்டி கொடுக்கமுடியாது என்று டஸ்ஸால்ட் கூறிவிட்டது.

அதாவது HAL இந்த விமானங்களை தயாரித்து இருந்தால் அதன் ஒரிஜினல் தயாரிப்பாளரான டஸ்ஸால்டின் உத்திரவாதம் இல்லாமல் தான் உபயோகப்படுத்தி இருக்க முடியும்.   

இதனாலேயே HAL க்கு இந்த ஒப்பந்தம் வராமல் போனது.

HAL  வாசலில் நின்று இது உங்களது உரிமை என்று கோஷம் போட்ட ராகுல் காந்தியுடன் இருந்த மல்லிகார்ஜுன கார்கே தலைவராக இருக்கும் பாராளுமன்ற நிலைக்குழு  ( Standing  commitee )
HAL பற்றிய தனது அறிக்கையில் 30 வருடங்களுக்கு மேலாக HAL ஆல் ஒரு திறம் மிக்க போர்விமானம் கூட தயாரிக்க முடியவில்லை என்று அவர்களது திறனை பற்றியும் இந்த தொழில் நுட்பத்தில் அவர்களது நிபுணத்துவ குறைபாடு பற்றியும் காட்டமாக விமர்சித்துள்ளது. ஆனால் HAL ஐ ஊக்கப்படுத்தி அந்த நிறுவனத்திற்கு அதிக முதலீடு செய்து அவர்களது நிலையை பல வருடங்களாக காங்கிரஸ் உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடி அவர்களது தலைமையில் உள்ள இந்த அரசுதான் HAL க்கு கிட்டத்தட்ட 1 லட்சம் கோடிகளுக்கு ராணுவ தளவாடங்கள், ஹெலிகாப்டர் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தையும் கொடுத்து அந்த நிறுவனத்தை விரிவுபடுத்தியுள்ளோம். HAL  பற்றி பேசும் அருகதை காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.

மேலே சொன்ன காரணத்திற்க்காக HAL உடன்  டாஸால்ட்  ஒப்பந்தத்தை போடாமல் காங்கிரஸ் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  Terms & conditions  படி அவர்களே அம்பானியின் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்கும் இந்த அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இதையெல்லாம் நீதிமன்றம் கூர்ந்து கவனித்துதான் தீர்ப்பளித்துள்ளார்கள்.

-------------------------------------------------------------------------------------------------

எனது பக்கம் : மோடி என்ற தனி மனிதன் ஒரு இந்தியாவிற்கு கிடைத்த ஒரு தவப்புதல்வன். நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் மதம் இனம் பார்க்காமல் அன்பு வைத்துள்ளவன். அவன் தன்னுடைய எதிரிகளாக நினைப்பது   ஊழல்வாதிகளையும் தேசத்துரோகிகளையும் தான். ஒரு சாராருக்கு மட்டும் என்று எந்த சலுகையும் காட்டாதவன். தன்னுடைய பதவியின் நிழல் தன்னுடைய உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் மீது படாமல் வாழ்ந்து கொண்டிருப்பவன். இவனா ஊழல் செய்வான். ஊழல் செய்பவனாக இருந்தால் 15 வருடம் முதல்வராக இருந்தபோதே ஊழல் செய்திருக்கமாட்டானா? ஒரு புகார் கூட இல்லையே அவன் மீது. இன்றும் அவனது தாய் சிறு வீட்டில் வசித்துவருகிறார். அவரது சகசாதர சகோதரிகள் சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கையை அவர்களது சம்பாத்தியத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசின் மீது வேறு எந்த புகாரும் சொல்ல முடியாததால் காங்கிரஸ் கட்சியினரால்  ஜோடிக்கப்பட்டதுதான்  இந்த ட்ராமா.    

அவர்களுக்கு பயம் எதிர்க்கட்சிகளுக்கு பயம். அவரை எதிர்க்கும் பலருக்கும் பயம். எதற்காக? இன்னொரு முறை இவன் பதவிக்கு வந்தால் ஊழல் செய்யும் எல்லா வழிகளும் அடைபட்டு போய்விடுமே என்கிற பயம். நாட்டை திண்டாடும் சக்திகளுக்கு இவன் தங்களை வேட்டையாடிவிடுவான் என்னும் உயிர் பயம்.

என்னை போன்ற தேசத்தை நேசிக்கும் மக்கள் ஒன்றிணைந்து இவனை அடுத்தமுறையும் பதவியில் அமர்த்துவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது. இவனது தலைமையில் உலகத்தில் மிகவும் மதிக்கக்கூடிய நாடாக பலமிக்க நாடாக  முன்னேறிய நாடாக, ஆற்றலும் அறிவும் மிகுந்த இளைஞர்கள் உள்ள நாடாக இந்தியா மாறும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை.

SRK

திராவிட கட்சிகளின் துரோகம்

அதிக நம்பிக்கையை பெற்ற அரசாங்கம்: மோடி அரசுக்கு மூன்றாவது இடம் - ஓஇசிடி நடத்திய ஆய்வில் தகவல்

https://tamil.thehindu.com/business/article20609127.ece
.

அதிக நம்பிக்கையை பெற்ற அரசாங்கம்: மோடி அரசுக்கு மூன்றாவது இடம் - ஓஇசிடி நடத்திய ஆய்வில் தகவல்

ரூ.100 கோடி வரிஏய்ப்பு : சோனியா, ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ரூ.100 கோடி வரிஏய்ப்பு : சோனியா, ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
வருமானத்தை குறைத்து காட்டி, வரிஏய்ப்பு செய்ததாக காங்., தலைவர்கள் சோனியா மற்றும் ராகுலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2011 - 2012 ம் நிதியாண்டில் அசோசியேட்டட் ஜோர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் சோனியா ரூ.155.41 கோடியும், ராகுல் ரூ.154.96 கோடியும் வருமானம் ஈட்டி உள்ளனர். ஆனால் வருமான வரிதாக்கலில் ரூ.68.12 லட்சம் மட்டுமே வருமானம் பெற்றதாக கணக்கு காட்டி உள்ளனர். இதே போன்று காங்., கட்சியின் ஆஸ்கார் பெர்னாண்டசும் தனது ரூ.48.93 கோடி சொத்து மதிப்பை குறைத்து காட்டி வரிஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
இவர்களின் சொத்து கணக்கை மறுமதிப்பீடு செய்த போது சோனியா குடும்பத்தினர் ரூ.300 க்கும் அதிகமான வருமானத்தை மறைத்து ரூ.100 கோடி அளவிற்கு வரிஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் சோனியா குடும்பத்திற்காக வாதாடிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்செட்டி, அந்த நிறுவனம் ரூ.90 கோடி கடனில் உள்ளதாகவும், வருமான வரித்துறையினர் அதனை மறைத்து ரூ.407 கோடி சொத்து இருப்பதாக கூறுவதாகவும் கூறினார்.
இனி சிதம்பரத்திற்கு தன்னுடைய வழக்கு , தன் மகன்மேல் உள்ள வழக்கு , சோனியா குடும்ப வழக்கு , அகஸ்டா வழக்கு என்று அணைத்து ஊழல் வழக்குகளை நடத்துவதற்கே நேரம் சரியாக இருக்கும்.
இப்படி ஒன்று வேற இவர்களை தொடந்து கொண்டு இருக்கிறதா? இவர்கள் எதை மனதில் நினைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் என்று நன்றாக புரிகிறது, நிலக்கரி விவகாரத்தில் தீர்ப்பும் வந்து விட்டது. எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 10 ஆண்டுகள் கொள்ளை அடித்த அனைத்தையும் இப்பொழுது மோடிஜி துருவி துருவி பிடித்துக்கொண்டு உள்ளார், நேஷனல் ஹெரால்ட், அகஸ்டா இப்பொழுது இந்த வரி ஏய்ப்பு இன்னும் சொல்ல பல உள்ளது, மருமகன் வதேரா தரகு வியாபாரம், கூட்டணி கட்சிகளின் கூட்டு கொள்ளை, BSNL muraikedu , ஹெலிகாப்டர் இப்படி எல்லா ஊழலை மறைக்கணும்னுதான் இவர்கள் ரபேல் என்று கத்தி கொண்டு, மக்கள் மனதில் குழப்பத்தை உண்டு பண்ணி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று துடித்துக்கொள்கிறார்கள், வெற்றி பெற்று விட்டால் அப்புறம் எல்லா வழக்குகளும் ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார்கள், இவர்களுக்கு மக்கள் நலன் எல்லாம் ஒன்றும் கிடையாது,ஆனால் இவர்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே இல்லை என்று நினைக்கிறேன்,வேறு என்ன சொல்லுவது,இங்கு இருக்கும் ஊழல் கூட்டாளிகளும் இவர்களுக்கு முட்டு கொடுத்து கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு பத்துவருஷம் மோடிஜி அரசு தான் வேண்டும். ஜனநாயக ஆட்சி தான் உலக அரங்கில் நம்மை தலை நிமிரச்செய்து உள்ளது. காண்+க்ரோஸ் போலி ஜனநாயாகத்தைவிட மோடியின் ஆணித்தரமான இந்தியஉணர்வு கொண்ட ஜனநாயகம் தான் தேவை. சர்வாதிகாரம் செய்தால் அதையும் அரசியல் ஆகிவிடுவார்கள் இந்த காங்கிரஸ் மற்றும் தேசநல விரோத கபோதிகள்.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...