Friday, 23 November 2018

ருத்ராட்ஷத்தின் – மகிமையைப் பற்றி ம

ருத்ராட்ஷத்தின் – மகிமையைப் பற்றி மஹா
பெரியவா சொல்வது

ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன்
ஒருபோதும்யமலோகம் செல்வதில்லை.
ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம்
ஆன்மாவிற்கு மஹாபேரானந்தத்தைத் தரும்
ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித
மந்திரம்கூறினாலும்,அதை 1,00,00,000 முறை
உச்சரித்த பலனைத்தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம்
உச்சரிப்பவன்எல்லாவித நோய்களிலிருந்தும்
விடுபடுகிறான். அவனைஅகால மரணமோ,
துர்மரணமோ நெருங்குவதில்லை.
ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது
ருத்ராட்ஷம்.அதை அணிபவரை அவர் கண்போலக்
காப்பாற்றுவார்.எனவே அனைவரும்
கண்டிப்பாக ஐந்து முக ஒருருத்ராட்ஷமாவ
து எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்கவேண
்டும்
ஆப்படியானால் யார்
வேண்டுமானாலும் ருத்ராட்ஷம்அணிய
லாமா?
ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார்
வேண்டுமானாலும்அணியலாம். எல்லா
நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர்பருகும்
போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும்
எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம்அணிந
்திருக்க வேண்டும் என்று சிவ பெருமானே
கூறியுள்ளதாக சிவபுராணம்
தெரிவிக்கிறது.
சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால்
அவர்களின்படிப்புத் திறமை பளிச்சிடும்.
ருத்ராட்ஷத்தை பெண்கள்அணிந்தால்
தீர்க்க சுமங்களியாக மஞ்சள்
குங்குமத்தோடுவாழ்வார்கள். இதனால்
அவர்களுடைய கணவருக்கும்தொழிலில்
வெற்றியும் இல்லத்தில் லட்சுமி
கடாசமும்நிறைந்திருக்கும். ஆகையால்
கண்டிப்பாக ருத்ராட்ஷம்அணியவேண்டும்.
எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக
சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக
ருத்ராட்ஷம்அணிவதே போதுமானது.
பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய
ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம்,
நீர்,நெருப்பு, காற்று மற்றும்
ஆகாயம்).நமது கை கால்விரல்கள் ஐந்து.
புலன்கள் ஐந்து. ஆகையால் மிகஅதிகமாக
ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.ஆ
கையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே
மிகச்சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும்
குழந்தைகள் எனசகலமானவர்களும்
அணியலாம். ஐந்து முகருத்ராட்ஷத்திலேயே
மற்ற எல்லா முகருத்ராட்ஷங்களினால்
கிடைக்கின்ற பலன்களும்அடங்கிவிடும்.,
பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது
என சிலர் சொல்கிறார்களே?
பெண்களின்
பெருந்தெய்வமாக
விளங்குபவள்ஆதிபராசக்தி அவள்
ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை,
கொந்தளகம் சடை பிடித்து விரித்து
பொன்தோள் குழைகழுத்தில் கண்டிகையின்
குப்பை பூட்டி என்று விவரிக்கிறது(அருணாசலபுராணம்) பழி,
பாவம்முதலியவற்றை முழுவதுமாகத தீர்த்துக்
கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது
திருமேனிமுழுவதிலும் அகிலாண்டேஸ்வரி
அணிந்துகொண்டாளாம்.
பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்?நமக்கு
வழி காட்டுவதற்காகத்தானே
அம்பிகையேருத்ராட்ஷம் அணிந்து
கொள்கிறாள்!. எனவே
பெண்கள்தாராளமாக அம்பிகை
காட்டும் வழியைப் பின்பற்றிருத்ராட்ஷம்
அணிய வேண்டும். மேலும்,
சிவமஹாபுராணத்திலும் பெண்கள்
கட்டாயம் ருத்ராட்ஷம்அணிய வேண்டும்
என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்
ளார்.
எல்லா நாட்களிலும் பெண்கள்
ருத்ராட்ஷம் அணியலாமா?
பெண்கள், தங்களுடைய தாலிக்
கொடியில்
அவரவர்மரபையொட்டி சைவ, வைணவச்
சின்னங்களைக்கோர்த்துதான் அணிந்திருக்கின்
றனர். அதை எல்லாநாட்களிலும் தானே
அணிகிறார்கள்? சில பெண்கள்,
யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து
போன்றவற்றையும்எப்போதும் அணிந்திருப்பதுண்டே?
இவற்றைப் போல்ருத்ராட்ஷத்தையும் எல்லா
நாட்களிலும் கழற்றாமல்அணிய வேண்டும்.
ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக
அல்ல. உயிரின் ஆத்மாவிற்காக
சிவபெருமானால் அருளப்பட்டது.
ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய
வேண்டுமா?
இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள்
வரை ஆண் -பெண் இருபாலரும்
கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.
ஏனெனில் நம்மைப் படைத்ததே
பாவங்களைப்போக்கி சிவபெருமானின்
திருவடியை அடைவதற்காகவேநம் வாழ்க்கையில்
வரும் கஷ்டம், வேதனை, துன்பம்,
வலிஇவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே
ருத்ராட்ஷம்அணிய வேண்டும். ருத்ராட்ஷம்
அணிந்தால் மறுவிறவிஇல்லை மஹா
பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதைசிலபேர் நீ
அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான்
அணியவேண்டும் என்று
சொல்வார்கள், அதைப்
பொருட்படுத்தக்கூடாது. இறைவனுக்கு
ஒருவர் மீது கருணை இருந்தால்மட்டுமே
ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும்
பாக்கியம்கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க
முழுக்கசிவபெருமானுடையது.
சிவபெருமான் கண்களை விழித்து1000
வருடங்கள் கடும் தவம் இருந்து அவர்
கண்களில்இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம்.
ருத்ராட்ஷத்தைஅணிந்து
கொண்டவர்கள் சிவ குடும்பத்தில்
ஒருவராவார்.சிவபெருமான் தன்
குடும்பத்தில் இருப்பவர்களுக்குகஷ்டத்தையும்,
துன்பத்தையும் கொடுப்பாரா?.
அதனால்யார் என்ன
சொன்னாலும் கண்டிப்பாக
ருத்ராட்ஷத்தைஅணியவேண்டும். ருத்ராட்ஷதை
அணிந்த பின் எந்தசூழ்நிலையிலுமே கழற்றவே
கூடாது. நீங்கள் இப்பொழுதுஎப்படி
வாழ்க்கை நடத்திக்கொண்டிரிக்கின்றீர்களோஅதேபோல் வாழ்ந்தால் போதும்
இதில் எவ்விதமாற்றத்தையும் செய்யத்
தேவையில்லை. நெற்றியில்திருநீறு அணிந்து
ஓம் நமசிவாய சொல்லி
வந்தாலேபோதுமானது.
நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு,
கணவன் - மனைவி இல்லற தாம்பத்யம்
நேரங்களில் ருத்ராட்ஷம்அணியலாமா?
முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே
இயற்கையானதே.இதில் எந்த நிகழ்ச்சியும்
செயற்கையானதே கிடையாது.நீத்தார்
கடன் போன்றவற்றை செய்யும் போது
அதைசெய்விப்பவரும், செய்பவரும்
ருத்ராட்ஷம்அணிந்திருப்பது அவசியம்.
இதனால் பித்ருக்களின்ஆன்மாக்கள்
மகிழும் என்று சிவபெருமானேஉபதே
சித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம்
ஆகையால்இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது
கண்டிப்பாக ருத்ராட்ஷம்அணியலாம்.
அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.
சரி ருத்ராட்ஷத்தை அணிந்து
கொண்டேன், இதன்பலன்கள் தான்
என்ன?
நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால்
கங்கையில்குளித்த புண்ணியம் கிடைக்கும்
என்கின்ற புராணங்கள்,கங்கையில்
மூழ்கினால் பாவம் போகும் என்பது
நம்அனைவருக்கும் தெரியும்.
பாவங்களினால் தான் நமக்குக்கஷ்டம்
உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால்
கொடியபாவங்கள் தீரும்.
இதனால் நம் வாழ்வில் ஏற்படும்துன்பங்
களும் படிப்படியாகக் குறைந்து விடும்.
மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி
கடாஷ்சமும்,செய்யும்
தொழிலில் மேன்மையும்,
சகலவிதமானஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு
பகவானின் பேரின்பமும்,ஆனந்தமும் கிடைக்கும்
என்று சிவ மஹா புராணம்அறுதியிட்டுக்
கூறுவதையும் கருத்தில் கொள்க.
இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால்
இதய நோய்,ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,
புற்றுநோய்போன்றவற்றின் தீவிரம் குறைவதாக
வெளிநாட்டவர்களின்ஆய்வுகள்
கூறுகின்றன. எனவே தூங்கும்போதும்
கூடருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய
அவசியம்கிடையாது. திருமணம்
ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம்இல்லாத
வர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும்க
ண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து
தினந்தோறும் 108முறை எழுத்தாலோ மனதலோ
பஞ்சாட்சரத்தைசொல்லிவந்தால் 18
மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள்நிறைவேறும்.
ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை
கிட்டுமா?
சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன்
தால் வணங்கிஅவர் கருணை
செய்தால்தான் அவருடைய
நாமத்தைக்கூடநாம் சொல்ல முடியும்.
அப்படியிருக்க அவர்ருத்ராட்ஷத்தையே நமக்கு
அளித்துள்ளாரே அதனால்திருநீறு தரித்தல்,
ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சரமந்திர
மான "ஓம் நமசிவாய" உச்சரித்தல்,
இம்மூன்றும் ஒருசேரச் செய்து வந்தால்
முக்தி எனும் மஹா பேரானந்தத்தைஅடைவீர்.
இம்மூன்றும் இந்து தர்மங்கள்,
தர்மத்தைவிடாதவர்களை இறைவன்
கைவிடமாட்டார். மேலும்நவகிரஹங்கள்
நன்மையே செய்யும், (ஏழரைச்
சனி,அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின்
தாக்கங்கள்குறையும். ருத்ராட்ஷம்
அணிந்திருக்கும் வேலையில் உயிர்பிரிந்தால்
சிவபெருமான் திருவடியை அடைந்து
நற்கதிஎற்படும். பேய், பிசாசு, பில்லி, சூனியம்,
மந்திரம், தந்திரம்,இவை அனைத்தும் ருத்ராட்ஷம்
அணிந்திருப்பவர்களைஒன்றுமே
செய்யமுடியாது. ஆகையால்
ஒவ்வொருவரும்கண்டிப்பாக
ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.
ஒருவர்ஏழுஜென்மங்கள்
தொடர்ந்து புன்னியம்
செய்திருந்தால்மட்டுமே அவர்களுக்கு
ருத்ராட்ஷம் அணியும் மஹாபாக்கியம்
கிடைக்கும்,.
இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர்
திருநீறு,ருத்ராட்ஷம் அணியத்
தயங்குகிறார்களே?
உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள்
அவர்களின் மதசின்னங்களை அணிய
வெட்கப்படுவதில்லை. நாம் நமதுமதச்
சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம்
மற்றும்நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை
ஏன்விடவேண்டும்இதற்காக யாராவது
நம்மைக் கேலிபேசினாலும்
பொருட்படுத்தக்கூடாது.
அப்படிப்பேசுகிறவர்களா நமக்குச் சோறு
போடுகிறார்கள்?அவர்களா நம்மைக்
காப்பாற்றுகிறார்கள்? ஆனால்
மதச்சின்னங்களை அணிந்து நமசிவாய என்று
எல்லாக்காலத்திலும் சொல்லிக்
கொண்டிருப்பவர்க
ளசிவபெருமான் நிச்சயம்
காப்பாற்றுவார். அவரவர்,
தங்கள்வாழ்க்கையிலேயே இதை அனுபவப்
பூர்வமாக உணரலாம்.ருத்ராட்ஷம்
அணிபவர்கள் கண்டிப்பாக எந்தசூழ்நிலையிலும் ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது.
யார்என்ன சொன்னாலும் அதைப்
பொருட்படுத்த
வேண்டாம்.சிவபெருமானின்
அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும்இருந்தால்
மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்ஷம் கிடைக்கும்.இப்பேற்பட்ட மஹிமை பொருந்திய
ருத்திராக்ஷத்தை நாம் எப்போதும் அணிந்து
நற்பயன் அடைவோம்.

ஓம் நமச்சிவாய. திருச்சிற்றம்பலம்.

திருவண்ணாமலையில் #சித்தர்கள்_அதிகம்_ஏன்?

#திருவண்ணாமலையில் #சித்தர்கள்_அதிகம்_ஏன்?

திருவண்ணாமலை மலை இருக்கிறதே. அதுவே பிரஹ்மாண்டம். பிரபஞ்ச ரகசியம். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.

சுமார் 260 கோடி வருடப் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மலையே சிவம்.அதாவது சிவலிங்கம். அந்த மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 108 சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச்
சொல்கின்றனர். இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 108 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் கிரிவலம் வந்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு சிவலிங்கமும் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அலைகளை மலை முழுவதும் பரப்பி வருகின்றன. இதனால்
மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாதத்தின் பிறப்பான முதல் நாளிலும், ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் , சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும் , சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம் வந்து, ஈசனை வணங்கி வழிபடுகிறார்கள் என்பதாக ஐதீகம்!

மலையின் மகாத்மியம் மலையளவு இருக்கின்றன. திருவண்ணாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரம், நம்மைப் போன்ற பக்தர்களுக்கான திருத்தலம் தான். ஆனால் அது... சித்தர்களின் பூமி. புனித பூமி. எத்தனையோ சித்தர்கள், இங்கு வந்திருக்கிறார்கள். வந்து தவம் இருந்து அருளுகிறார்கள். திரும்ப மனமில்லாமலேயே இங்கேயே தங்கி, ஜுவ சமாதியாகி இன்னும் தவத்தில் மூழ்கியிருக்கிறார்கள். இன்றைக்கும் சூக்ஷம ரூபமாய் இருந்து, தவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதாக ஐதீகம்!

ஏன் சித்தர்கள் பூமியாக திருவண்ணாமலை இருக்கிறது?

நம் மன அதிர்வுகளை புத்தி தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வராமல் எத்தகைய சித்துக்களையும் செய்ய இயலாது.இயல்பாகவே புவியியல் அமைப்பிலேயே எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய அதிர்வுகளை கொண்டு திருவண்ணாமலையானது அமைந்துள்ளது.

நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம்,கவலை ஆகியவை எழும் போது நம் உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். இந்நிலையில் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்காது.
நம் ஓய்வெடுக்கும் போது(ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்ஃபா அலைகள் என கூறுகின்றனர். முயற்சி செய்தால் நம் எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும்.அதை தீட்டா அலைகள் என்கிறனர் விஞ்ஞானிகள். நம் எண்ணங்களை நம் இயக்கங்களை எளிதாக நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். இதற்காகவே உலகெங்கிலும் உள்ள சித்தர்கள் இங்கே தேடி
வருகின்றனர்.

திருவண்ணாமலையானது இயல்பாகவே தீட்டா அதிர்வுகளை கொண்டுள்ளது. இதனால் தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து இந்த அலைகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். இதற்காகவே இங்கே சித்தர்கள் சமாதி அடைந்திருக்கிறார்கள். சித்தர்களின் பூமியாக திருவண்ணாமலை விளங்கும் மர்மம் இதுதான்..

இறைவன் எங்கு குடியிருக்கிறானோ அங்குதான் சித்தர்களும் குடியிருப்பார்கள். சித்தர்களுக்கு எல்லாம் தலயாயச் சித்தர் ஆதி சித்தர் சிவபெருமான்தான்.தலைவர் இருக்கும் இடத்தில்தானே தொண்டர்களும் குடியிருப்பார்கள்?.அதனால் தான் திருவண்ணாமலையில் சிவ பெருமானுக்கு உறுதுணையாக,காலம் காலமாக நாம் பெரிதும் போற்றும் பதினெட்டு சித்தர்களும், அவர்களுக்கு பக்கபலமாக 188 சித்தர்களும் இன்றும் அரூபமாக நடமாடி கொண்டு இருக்கிறார்கள். கைலாய மலையில் கூட காண கிடைக்காத அதிசயம் இது.

அத்திரி மகரிஷி, மச்ச முனிவர், கோரக்கர், கிராம தேவர், துர்வாசர், சட்டை முனிவர், அகத்தியர், போகர், புசுண்டர், உரோமா மச்சித்தர், யூகி முனிவர், சுந்தரானந்தர், அழகனந்தா, பிரம்ம முனி, காலங்கி நாதர், நந்தி தேவர், தன்வந்திரி, குரு ராஜரிஷி, கொங்கனர், உதயகிரிச் சித்தர்,
பிகுஞ்சக ரிஷி, மேக சஞசார ரிஷி, தத்துவ ஞான சித்தர், காளமீகா ரிஷி, விடன முனிவர், யாகோபு முனிவர், அமுத மகாரிஷி, சூதமா முனிவர், சிவத்தியான முனிவர், பூபால முனிவர், முத்து வீரமா ரிஷி, ஜெயமுனி, சிறு வீரமா முனி, வேதமுனி, சங்கமுனி, காசிபமுனி, பதஞ்சலி முனி, வியாகிரம மகாரிஷி, ஜனகமா முனி,சிவப்பிரம்ம முனி, பராச முனி, வல்ல சித்தர், அஸ்வணி தேவர், குதம்பைச் சித்தர், புண்ணாக்கு சித்தர், யோகச்சித்தர், கஞ்சமலைச் சித்தர், திருமூலநாதர், மவுனச்சித்தர், தேகசித்திக் சித்தர், வரரிஷி, கவு பாலச்சித்தர், மதிராஜ ரிஷி, கவுதமர், தேரையர், விசுவனித் தேவர், அம்பிக்கானந்தர், டமாரானந்தர்,கையாட்டிச்சித்தர்கண்ணானந்த சித்தானந்தர், சச்சிதானந்தர், கணநாதர், சிவானந்தர், சூரியானந்தர், சோகுபானந்தர், தட்சிணா மூர்த்தி, ரமநாதர் மதி சீல மகாமுனி, பெரு அகத்தியன், கம்பளி நாதர், புலஸ்தியர், திரி காலாக்கயான முனி, அருட் சித்தர், கவுன குளிகைச்சித்தர், ராஜரிஷி வசந்தமாமுனி, போதமுனி, காங்கேய ரிஷி, கான்சன முனி, நீயான சமாதிச்சித்தர், சாந்த மஹா ரிஷி, வாசியோகச்சித்தர், வாத சாந்த மகாரிஷி, காலாட்டிச் சித்தர், சத்தரிஷி, தேவ மகரிஷி, பற்ப மகாரிஷி, நவநாதச்சித்தர், அடவிச்சித்தர், நாதந்தச்சித்தர், ஜோதிரிஷி, பிரம்மானந்த ரிஷி, அநுமாதிச்சித்தர், ஜெகராஜ ரிஷி, நாமுனிச்சித்தர், வாசுதேவ மகாரிஷி, பாலையானந்தர், தொழுகன்னிச்சித்தர்....

என இருநூற்றுக்கும் அதிகமான சித்தர்கள் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்ததாகவும் , அவற்றில் சுமார் 25க்கும் அதிகமான சித்தர்கள் இங்கு ஜீவசமாதி ஆனதாகவும் அகத்தியர் தான் இயற்றிய அகத்தியப் பெருமான் ஜீவநாடியில் எடுத்துரைத்துள்ளார்
அவற்றுள் தகவல்கள் சேகரித்து கிடைக்க பெற்ற 20 சித்தர்கள் பற்றி ஒவ்வொரு பதிவாக காணலாம்.

திருவண்ணாமலையில் அவதரித்தவர் அருணகிரி நாதர். சிற்றின்ப மோகத்தால் சீரழிந்து வாழ்க்கையில் சலிப்படைந்து, பிறவியை வெறுத்து அண்ணாமலையார் ஆலய வல்லாள மகாராஜன் கோபுரத்தின் மீதிருந்து குதித்து உயிரைப் போக்கிக் கொள்ள முயன்றபோது, முருகப் பெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்டார். “முத்தைத்தரு’ என அருணகிரிக்கு முருகன் அடியெடுத்துக் கொடுக்க “திருப்புகழ்’ தோன்றியது. 15-ம் நூற்றாண்டிலே திருவண்ணாமலையிலே வாழ்ந்தவர்.

“திருவண்ணாலைக்கு வந்து ஞானகுருவாக இரு’ என்று அண்ணாமலையாரின் நேர்முக அழைப்பினால் ஞானியானவர், சீடரையே குருவாக்கிய செந்தமிழ் யோகி குகை நமச்சிவாயர்.

திருவண்ணாமலை தீர்த்தக் குளத்து நீரையே திரட்டிக் குடமாக்கி (கி.பி.1290) அதிலேயே தண்ணீரை எடுத்துச் சென்று, அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டவர் சித்த மகா சிவயோகி பாணி பத்திரசாமி.

உண்ணாமுலை அம்மனிடமே உணவைக் கேட்டுப் பாடி தேவியின் திருக்கரங்களால் பொங்கலைப் பெற்றவர். தில்லைக் கோயிலின் திரைச் சீலையிலே தீப்பிடித்ததை திருவண்ணாமலையில் இருந்தபடியே அறிந்த தீயைத் தேய்த்து அணைத்த ஞானச் செல்வர் குரு நமசிவாயர்.

திருவண்ணாமலை ஆதினத்தின் முதல் குருவாகி குன்றக்குடி ஆதினத்தை ஸ்தாபித்தவர் ஸ்ரீலஸ்ரீ தெய்வ சிகாமணி தேசிகர்.

திருவண்ணாமலைப் பகுதியிலே ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க, ஏரியை அமைத்து, உண்ணாமல் தவமிருந்து, மழையைப் பொழிய வைத்து ஊரையே செழிக்க வைத்தவர் மங்கையர்கரசியார்.

தொண்ணூறு வயது வரை நாள்தோறும், திருவண்ணாமலையைத் தவறாமல் வலம் வந்து, அந்தப் புண்ணியதால் அண்ணா மலையானை நேரில் கண்டு பேறு பெற்றவர் சோணாசலத் தேவர்.

யாழ்பாணத்திலே பிறந்து தில்லையாடியின் பேரருளால் திபரு அருணையிலே பெரும் புதையல் பெற்று, திருக்குளமும், திருமடமும் அமைத்து நல்லறங்களை நாளெல்லாம் கூறி மக்களைக் காத்த ஞானப்பிரகாசர்.

பாதகர்களைத் திருத்துவதற்காக, பழுக்கக் காய்ச்சிய இரும்புச் செருப்பை அணிந்து நடந்தவர் வீரவைராக்கிய மூர்த்தி சுவாமிகள்.

ஐந்நூறு சீடர்களைப் பாடுபட்டு உருவாக்கி, அண்ணா மலையானின் புகழைப் பரப்பியவர். நூல்கள் பலவற்றை எழுதி, சைவ சமயப் பெருமைகளை உலகறியச் செய்த வேதாகம, சமய சாத்திர வித்தகரான அப்பைய தீட்சிதர்.

காணாமற் போன பூஜைப் பேழையை, அண்ணா மலையானின் திருக் கரங்களால் பெறும் பேறு பெற்றவர்; 16-ம் நூற்றாண்டில் குருதேவர்

மடத்தில் தீக்ஷை பெற்று சிவப்பிரகாசர் எனும் ஞானியைக் கண்ட ஞானமணி குமாரசாமி பண்டாரம்.

வாய் பேச இயலாத ஊமையாய்ப் பிறந்து, திருவண்ணாமலையானின் பேரருளால் பாடும் திறனைப் பெற்றவர். தில்லையிலே திளைத்து, திருவாரூரிலே தியாகேசர் சன்னதி முன்னால் முக்தி பெற்றவர் தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள்.

காவிரியாற்றின் நீரையே எண்ணெயாக்கித் தீபமேற்றியவர். பூமியிலிருந்து தீ ஜுவாலையை வரவழைத்து தனது திருமேனியையே அக்னிதேவனுக்கு ஆஹுதியாக்கிய ஆதிசிவப்பிரகாசர் சுவாமிகள்.

கரிகாற்சோழன் காலத்திய பாதாளலிங்க மூர்த்தியை 16-ம் நூற்றாண்டு இறுதியில் பூஜித்தவர். அதே இடத்தில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் ஆயிரங்கால் மண்டபம் கட்டியபோது, பாதாளலிங்கத்தை மாற்றிவிடாமல் பாதுகாத்த ஞானயோகி தம்பிரான் சுவாமிகள்.

தனது மரணத்தைத் தானே உணர்ந்து “ஜீவ சமாதி’ கண்டவர். ஜில்லா கலெக்டர் ஐடன் துரையின் கடும்நோயைத் தீர்த்து வைத்தவர்.

இருபுறமும் வரிப்புலிகள் காவலிருக்க ஞானத்தவம் செய்தவர். ஈசான்ய மடாலயத்தின் ஆதிகுரு (1750-1829) ஸ்ரீலஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் சுவாமிகள்.

கேரள மாநிலத்தில் பிறந்து, பாரத நாடெங்குமுள்ள புண்ணிய ஷேத்திரங்கள் சென்று வழிபட்டு இறுதியாக தியானத்திற்குகந்த தெய்வத் திருமலை திருவண்ணா மலைதான் எனத் தீர்வு கண்டு மேட மலையில் முருகப் பெருமானுக்கு கோயில் அமைத்த வழிபட்டவர். தனது வாழ்நாள் முழுவதும் மக்களிடம் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு பக்தியை வளர்க்கப் பாடுபட்டவர் சற்குரு சுவாமிகள்.

திருவண்ணாமலை வீதியிலே புரண்ட போது கிடந்து அருவுருவான அண்ணாமலையே உமா மகேஸ்வரன் எனக் கண்டுணர்ந்து தியானித்தபடி வருவோர்க்கெல்லாம் பேரருள் புரிந்து பார் புகழ் பெற்றவர் பத்ராசல சுவாமிகள்.

பழனியிலிருந்த திருவண்ணாமலை வந்து ஆலயத்தில் உழவாரப் பணி புரிந்தவர். தினமும் அன்னக்காவடி சுமந்து அடியார்களின் பசிப்பிணி தீர்த்தவர். ஏழை, எளிய மக்கள் மேல் இரக்கம் கொண்ட சேவை புரிந்தவர் (1922), பாதாள லிங்கக் குகையிலே பால ரமணரைப் பல காலம் பாதுகாத்த சிவ முனிவர் பழனி சுவாமிகள்.

பூமிக்குள் புதைந்து கிடக்கும் புதையலை ஊடுருவி காணும் ஞான விழி பெற்ற புண்ணியத்தால், முடிக்கப்படாது பாதிக்கோபுரமாய் நின்ற திருவண்ணாமலையில் உள்ள வடக்கு கோபுரத்தைப் பூர்த்தி செய்தவர். மக்களின் தீராத நோய்களையெல்லாம் பஞ்சாக்ஷர மந்திரம் சொல்லித் திருநீறு தந்ததன் மூலம் தீர்த்து வைத்த புனிதவதி அம்மணியம்மாள்.

திருநெல்வேலியிலே அவதரித்துத் திருவருணையிலே முருக தரிசனம் கண்டவர். எல்லையில்லாத் தமிழ் வண்ணப் பாக்களோடு கம்பத்து இளையனார் எனப்படும் திருவண்ணாமலை முருகப் பெருமானுக்கு வேல் கொடுத்து வாழ்த்திய இசைஞானி வண்ணச் சரபம் தண்டபாணி ஸ்வாமிகள் (1839-1898)

திருவண்ணாலை தீபத்திரு மலைப் பாதையிலே, அங்கம் புரள உருண்டு தவழ்ந்து அன்றாடம் வலம் வருவதையே லட்சியமாய்க் கொண்டவர். திருவண்ணாமலையிலுள்ள அறுபத்து மூவர் மடாலயத்தின் ஆரம்ப கால ஞான குரு அங்கப் பிரதக்ஷண அண்ணாமலை சுவாமிகள்.

கருவிலேயே திருவுடையவராய் காஞ்சியில் பிறந்து திருவண்ணாமலைத் தலத்தில் வாழ்ந்த மகான் ஞானச் சித்தர் சேஷாத்திரி சுவாமிகள் (1870-1929)

“அண்ணாமலையார்க்கே என்னை ஆளாக்குவேன்’ என்று கன்னிப் பருவம் வரை காத்திருந்தவர். கண்ணுதற் கடவுள் கனவிலே வந்து அருள் புரிந்தார். கண் விழித்ததும் தலைமுடி சடையாகி விட்டிருந்தது.

திருவண்ணாமலை சென்று இறுதிவரை ஆலயத்தில் பணியாற்றிய சடைச்சியம்மாள் என்ற ஐடினி சண்முக யோகினி அம்மையார்.

“துறவு கொள்வதே பொது சேவைக்கு உகந்ததென்று’ 36 வயது முதல் 103 வயது வரை (1882-1985) திருவண்ணாமலை மற்றும் தருமபுரி பாதையிலே திருப்பணி பலபுரிந்து, பொது மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளையும், அவசரத் தேவைகளையும் மேற் கொண்டு, பரிபூரண பக்தியால் அண்ணாமலையானின் பேரருள் பெற்ற “தம்மணம் பட்டி’ அழகானந்த அடிகள்.

உண்ணாமல் உறங்காமல் அண்ணாமலையானின் நினைவிலே பன்னிரண்டு ஆண்டுகள் தனிமையில் கடும் தவம் செய்து தொடர்ந்து மலையிலேயே வாழ்ந்தவர் ராதாபாய் அம்மையார்.

திருவண்ணாமலை மண்ணிலே ஓரடிக்கு 108 லிங்கங்கள் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்தியவர். பஞ்சாட்சர நமசிவாயம் 1008 மந்திர ஜபத்துடன் தெய்வீகத் திருமலையை ஒவ்வொரு அடியாக நடந்து கொண்டு வலம் வந்து பேரின்ப ஞானநிலை கண்டு பிறவிப் பிணி தீரப் பெற்றவர் இறை சுவாமிகள்.

1917-ல் பிறந்து ஆயிரத்தெட்டு முறை அண்ணாமலை அங்கப் பிரதட்சண வலம் கண்டவர். தேவர்களும் சித்தர்களும் கிரிவலம் புரிவதை ஞானக்கண்ணால் அறிந்து கூறிய மாதவச் செல்வர் இசக்கி சுவாமிகள்.

திருச்சுழி கிராமத்திலே பிறந்து, மதுரையிலே கல்வி பயின்று, திருவண்ணாமலையானின் நினைவால் திருவருணை வந்து, உண்ணாமல் உறங்காமல் கடும் தவம் மேற்கொண்டு மா தவஞானியாய், மகரிஷியாக உலகப்புகழ் பெற்றவர் ரமண மகரிஷி (1879-1950)

விரட்டுவதற்காக வீசிய கல் பறவையின் உயிரையே வாங்கி விட்டதால் 1918-ல் கங்கைக் கரையிலே பிறந்த அவர் அமைதியைத் தேடி காவிரிக்கரை வரை அலைந்தார். பல ஊர்களும் அலைந்து திரிந்து முடிவிலே ரமண மகரிஷியிடம் சரண் அடைந்தார். குருவருளால் அர்த்தநாரீஸ்வரரின் திருவருள் பெற்றார். அவர்தான் 1959 முதல் குடுகுடுப்பாண்டி போன்ற திருக்கோலமுடன் திருவண்ணாமலையிலே உலா வந்த சிவயோகி, ராம் சுரத்குமார்..  என்றும் அன்புடன ஆச்சார்யா பாபாஜி ,

.. ஓம் நமசிவாய சிவசிவ அன்பே சிவம்..
நன்றி

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...