Thursday 18 October 2018

சாதிச் சான்றிதழ் வழங்க முடியாது* *சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு*

*சாதிச் சான்றிதழ் வழங்க முடியாது*
*சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு*
ஈரோடு மாவட்டம் நிச்சம்பாளையம் தமிழரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
என் பெற்றோர் கிறிஸ்தவர்கள்
எனக்கு விக்டர்ட ஜோசப் என்று பெயர் சூட்டி இருந்தார்கள்.
2015ஆம் ஆண்டு புத்த மதத்திற்கு மாறி
என் பெயரை தமிழரசு என்று மாற்றிக்கொண்டேன்.
எனக்கு புத்தமத ஆதிதிராவிடர் என்று சான்றிதழ் சாதிச்சான்றிதழ் கேட்டேன்
ஈரோடு பெருந்துறை தாசில்தார் தர மறுத்துவிட்டார்
எனவே எனக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு இருந்தார்
அவரது வழக்கறிஞர் ஜென்கின்ஸ் வில்லியம் வாதம்
கிறிஸ்தவ ஆதிதிராவிட பெற்றோருக்கு பிறந்தவர்கள்
பிற்காலத்தில் இந்து-புத்தமத சீக்கிய மதத்துக்கு மாறினார் அவரை அந்த மதத்தை ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கு எஸ்சி என்ற சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த 2009ஆம் ஆண்டு அரசு ஆணை வெளியிட்டது
இதன்படி ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் புத்தமத ஆதிதிராவிடர் என்ற சான்றிதழ் பலருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்
இதற்கு விளக்கம் அளித்த அரசு வழக்கறிஞர் நர்மதா சம்பத்
இந்த அரசாணை மனுதாரருக்கு பொருந்தாது
ஒரு மதத்திலிருந்து மாறியவர்கள்
அதே மதத்திற்கு மீண்டும் திரும்பினால் மட்டுமே அந்த அரசு ஆணை பொருந்தும்
ஆனால் இந்த மனுதாரர் இந்து மதத்துக்கு திரும்பவில்லை
மூன்றாவது மதமான புத்த மதத்துக்கு மாறியுள்ளார்
மேலும் 1977ஆம் ஆண்டு எஸ்சி எஸ்டி சட்டத்தில் புத்தமத ஆதிதிராவிடர் என்ற பெயரே இல்லை எனவே கோரிக்கையை ஏற்க முடியாது என்று வாதிட்டார்
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு
இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்
கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு பின்னர்
மீண்டும் இந்து மதத்திற்கு மாறினால் அந்த சமுதாயத்தில் ஏற்றுக்கொண்டால்
அப்படிப்பட்ட நபர்களுக்கு எஸ்சி எஸ்டி என்ற சான்றிதழ் வழங்கலாம் என்றுதான் தமிழக அரசின் அரசு ஆணை கூறுகிறது
எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...