Friday 30 November 2018

ஒருவேளை டிமானிட்டசேஷன் அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்..?

ஒருவேலை டிமானிட்டசேஷன் அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்..?

நேற்று புழலில் குப்பையாக கொட்டப்பட்டது,
பல இடங்களில் எறிக்கப்பட்டது,
வங்கிகளில் இதுவரை கணக்கு தராமல் செலுத்தப்பட்டது,
பாகிஸ்தானில் கண்டெய்னர் கெண்டெய்னராக எரிக்கப்பட்டது.
இன்னும் ஹவாலா மாபியாக்களாலும், அவர்கள் ஏவலாளிகளாலும் மறைவிடங்களில் மறைக்கப்பட்டுள்ள பல லட்சக்கோடிகள் அனைத்தும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டு நிலங்கள் யார்,யார் கைகளுக்கோ போயிருக்கும்...
மக்களிடம் அளவுக்கதிமான பணக்காகிதங்களால் அனைத்துப்பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறியிருக்கும்..
சூடாக்கப்படும் தண்ணீரில் இடப்பட்ட ஆமை ஆரம்ப கதகதப்பில் இளைப்பாறுவதுப்போல இந்த பணப்புழக்கம் மக்களிடையே என்னமோ சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும்..
நீர் கொதிக்கும்போது அவஸ்த்தைப்படும் ஆமையைப்போல பலமடங்கு உயர்த்தப்பட்ட விலைவாசியால் தன் கையில் உள்ளப்பணம் வெற்றுக்காகிதங்களாக மிஞ்சிப்போயிருக்கும்..
கடைசியில் நிலமும் போய், வாழ்க்கையும்போய் எவன்எவனக்கோ அடிமைகளாய் திரிந்திருக்க வேண்டிய அவலநிலை உருவாகியிருக்கும்...
இத்தனை துன்பத்திலிருந்து நம்மை கடவுள் போல் காத்தருள செய்தவர் மோடி... மாபியாக்கள், கருப்பு பண முதலாளிகள், அரசியல்கட்சி தலைவர்கள், நீதிமன்றங்கள், ஊடகங்கள் என அத்தனைப்பேரின் மிரட்டலையும் எதிர்கொண்டு அதை நிறைவேற்றியது ஏடறிந்த வரலாற்றில் எந்த தலைவனும் செய்யத்துனியாத ஆண்மையுள்ள செயல்..
இதை உங்கள் உதடுகள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் உங்கள் ஆண்மாவை தொட்டுச்சொல்லுங்கள்...
மோடி செய்தது.. வரலாற்று சாதனை என்றுச்சொல்லும்!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...